RECENT NEWS

ராமதாஸ் பிறந்தநாளில் நடைபயணம் தொடங்கும் அன்புமணி? ஜூலை 25 முதல் நடைபயணம் தொடங்க திட்டம்..

BIG STORIES

பார் டெண்டரிலும் பல நூறு கோடி ரூபாய் முறைகேடா? சட்டவிரோத பார்களால் சிக்கப்போவது யார்?

May 22, 2025 07:56 AM

284

பார் டெண்டரிலும் பல நூறு கோடி ரூபாய் முறைகேடா?
சட்டவிரோத பார்களால் சிக்கப்போவது யார்?

பார் டெண்டரிலும் பல நூறு கோடி ரூபாய் முறைகேடா? சட்டவிரோத பார்களால் சிக்கப்போவது யார்?

 டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை நடத்தி வரும் விசாரணையில் பார் டெண்டர் விடுவதிலும் பல நூறு கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் சட்டவிரோத பார்கள் அதிக அளவில் செயல்படுவதையும் அமலாக்கத்துறை கண்டறிந்துள்ளதாக கூறப்படுகிறது.

டாஸ்மாக் கொள்முதல் உள்ளிட்ட நடைமுறைகளில் 1000 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு தொடர்பாக கடந்த வாரம் சென்னை உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதனையடுத்து டாஸ்மாக் நிறுவன மேலாண் இயக்குநர் விசாகன், பொது மேலாளர் ஜோதி சங்கர், மேலாளர் சங்கீதா உள்ளிட்டவர்களிடம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வைத்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையை தொடர்ந்து ஒரே நபர் பல நபர்களின் GST எண்களில் DD எடுத்து பார்களை டெண்டர் எடுத்துள்ளதை அமலாக்கத்துறையினர் கண்டறிந்ததாக கூறப்படுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள பார்களில் 40 சதவீதத்திற்கும் மேல் இதேபோன்று மோசடி செய்யப்பட்டு டெண்டர் எடுத்துள்ளதை அதிகாரிகள் கண்டறிந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் பல பார்களை டெண்டர் எடுத்த நபர், அதனை அரசுக்கு தெரியாமல் பல நபர்களுக்கு சப் - கான்டிராக் விட்டிருப்பதும் அதன் மூலம் மதுபான வகைகளை அதிக அளவில் கூடுதல் விலைக்கு விற்பதையும் அமலாக்கத்துறையினர் கண்டுபிடித்ததாக கூறப்படுகிறது. பார் அமைப்பதற்கு டாஸ்மாக் அருகேயுள்ள கட்டடத்தின் உரிமையாளர்களிடம் தடையின்மை சான்றிதழ் பெற்றதிலும் முறைகேடு நடைபெற்றது கண்டறியப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

மேலும், பல்வேறு இடங்களில் லைசன்ஸ் இல்லாத பார்கள் செயல்பட்டு வருவதும், அந்த பார்களுக்கு அருகிலுள்ள டாஸ்மாக்கிலிருந்து மது விற்பனை நடந்துள்ளதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல், பல இடங்களில் டாஸ்மாக் அலுவலர்கள், அரசியல் பிரமுகர்களே சட்டவிரோதமாக பார்களை நடத்தி வருவதையும் அமலாக்கத்துறை கண்டறிந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் சட்டவிரோத பார்கள் அதிக அளவில் செயல்படுவதையும் அமலாக்கத்துறை கண்டறிந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பார் டெண்டர் முறைகேடு மூலமாக பல நூறு கோடி ரூபாய் அளவுக்கு தனி நபர்களும், அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் பலன் அடைந்துள்ளதும் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 16, 17 ஆகிய தேதிகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தப்பட்டதற்கு பிறகு தற்போது வரை விசாரணைக்கு ஆஜராகுமாறு 33 பேருக்கு அமலாக்கத்துறை சம்மன் அளித்துள்ளது. இதில் 20-க்கும் மேற்பட்டோர் டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரர்கள், டெண்டருக்காக DD எடுக்க பயன்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி. எண் உரிமையாளர்கள், மாவட்ட டாஸ்மாக் அலுவலர்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

பீர் பாட்டிலை வாயில் திணித்து +2 மாணவி கொலை..! இன்ஸ்டா பழக்கத்தால் விபரீதம்..

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies