RECENT NEWS

வேல்முருகன் சர்ச்சை பேச்சு - விழா மேடையில் மாணவி பதிலடி

வேல்முருகன் சர்ச்சை பேச்சு - விழா மேடையில் மாணவி பதிலடி

Jun 13, 2025

வேல்முருகன் சர்ச்சை பேச்சு - விழா மேடையில் மாணவி பதிலடி

வேல்முருகன் சர்ச்சை பேச்சு - விழா மேடையில் மாணவி பதிலடி

Jun 13, 2025

BIG STORIES

சர்வதேச பயங்கரவாதி மசூத் அசாருக்கு ரூ.14 கோடி நிவாரணம்.. பாகிஸ்தான் அரசு தாராளம்..!

May 17, 2025 02:39 AM

1227

சர்வதேச பயங்கரவாதி மசூத் அசாருக்கு ரூ.14 கோடி நிவாரணம்.. பாகிஸ்தான் அரசு தாராளம்..!

மசூத் அசாருக்கு நிவாரணம்

ஆபரேசன் சிந்தூர் மூலம் இந்தியாவால் அழிக்கப்பட்ட பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களை மறுக்கட்டமைக்க பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் நிதி உதவி அறிவித்து வரும் நிலையில், குடும்ப உறுப்பினர்கள் 14 பேரை இழந்ததால் பயங்கரவாதி மசூத் அசாருக்கு 14 கோடி ரூபாயை நிவாரணமாக வழங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

பஹல்காமில் அப்பாவி சுற்றுலாபயணிகள் 26 பேரை சுட்டுக் கொன்ற பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம் களின் மீது இந்திய ராணுவம் துல்லிய தாக்குதல் நடத்தியது. இதனை பாகிஸ்தானில் உள்ள அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக திரித்து கூறியுள்ள பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் , தாக்குதலுக்கு இலக்கான இடங்களை மறுக்கட்டமைக்க உதவி செய்யப்படும் என்றும் பலியானவர்களின் குடும்பத்துக்கு தலா 1 கோடி ரூபாயை நிவாரணமாகவும் அறிவித்துள்ளார்.

ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் செயல்பாட்டு மையமாக உள்ள பஹாவல்பூரில் உள்ள பயங்கரவாத முகாம்களை இலக்கு வைத்து இந்திய ராணுவம் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. இதில் ஜாமியா மஸ்ஜித் சுபான் அல்லா, உஸ்மான்-ஓ-அலி வளாகம் மற்றும் ஜெ.இ.எம் தலைமையகம் போன்ற கட்டிடங்கள் சேதமடைந்தது.

பயங்கரவாதி மசூத் அசார் குடும்பத்தில் மட்டும் மூத்த சகோதரி, அவரது கணவர், மருமகன் அவரது மனைவி, ஒரு மருமகள் , சகோதரர் மற்றும் ஐந்து குழந்தைகள் உள்ளிட்ட 14 பேர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ள நிவாரண தொகை அறிவிப்பின்படி குடும்ப உறுப்பினர்களுக்கு தலா 1 கோடி ரூபாய் வீதம் 14 கோடி ரூபாயை இழப்பீடாக பெற மசூத் அசார் தகுதி பெற்றிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அனைத்து செய்தியாளர் சந்திப்புகளிலும், இந்திய ராணுவ அதிகாரிகள், தாங்கள் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை மட்டுமே குறிவைத்து துல்லியமான தாக்குதல் நடத்தப்பட்டது என்று வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். பாகிஸ்தானில் பொதுமக்களின் வாழ்விடங்கள் எதுவும் பாதிக்கப்படவில்லை என்றும் மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டி வருகின்றனர். இந்த நிலையில் தான் பாகிஸ்தான் அரசு , பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குகிறோம் என்ற பெயரில் தீவிரவாத முகாம்களை மறுக்கட்டமைக்க நிதி உதவி அளித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

242 பேரில் ஒருவன்.. பறக்கும் விமானத்தில் குதித்து உயிர் தப்பினார்..! அந்த பொண்ணு தவறவிட்டு தப்பிருச்சி

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies