RECENT NEWS

விஜய் பிறந்தநாளில் த.வெ.க பேனரை கிழித்த திமுகவினர்.. தட்டிக்கேட்ட த.வெ.க நிர்வாகிகள் மீது தாக்குதல்

விஜய் பிறந்தநாளில் த.வெ.க பேனரை கிழித்த திமுகவினர்.. தட்டிக்கேட்ட த.வெ.க நிர்வாகிகள் மீது தாக்குதல்

Jun 22, 2025

விஜய் பிறந்தநாளில் த.வெ.க பேனரை கிழித்த திமுகவினர்.. தட்டிக்கேட்ட த.வெ.க நிர்வாகிகள் மீது தாக்குதல்

விஜய் பிறந்தநாளில் த.வெ.க பேனரை கிழித்த திமுகவினர்.. தட்டிக்கேட்ட த.வெ.க நிர்வாகிகள் மீது தாக்குதல்

Jun 22, 2025

முகப்பு

HBD கொண்டாட்டம்... வெட்டப்பட்ட 2 நண்பர்கள்..! திருநங்கை - 8 பேர் சிக்கியது எப்படி ?

May 14, 2025 01:51 PM

623

HBD கொண்டாட்டம்... வெட்டப்பட்ட 2 நண்பர்கள்..! திருநங்கை - 8 பேர் சிக்கியது எப்படி ?

HBD கொண்டாட்டம்... வெட்டப்பட்ட 2 நண்பர்கள்..! திருநங்கை - 8 பேர் சிக்கியது எப்படி ?

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே காந்திநகர் பகுதியைச் சேர்ந்த பழனியின் மகன், 21 வயது விமல்‍. இவரது நண்பர் 21 வயது, ஜெகதீசன் என்கிற ஜெகன். இவர்கள் இருவர் மீதும் வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், அதிகாலை நேரம்... காந்தி நகர் பிரதான சாலை அருகில், நண்பரின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்ட ஜெகனையும் விமலையும், ஒருகும்பல் வெட்டி சாய்த்துவிட்டு தப்பிச் சென்றது. இதில், விமல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ஜெகன் உயிருக்கு போராடிய நிலையில், அவரை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இறப்பதற்கு முன்பு, மருத்துவமனையில் ஜெகன் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினர் மறைமலைநகர் போலீசார்.

அப்போதுதான், இறந்துபோன விமலின் அத்தை மகன் முறையுள்ள, திருநங்கை மணிமேகலை என்பவருக்கும் வீட்டின் அருகில் கழிவு நீர் குழாய் பதிப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால், திருநங்கை மணிமேகலையின் உடன்பிறந்த தம்பியுமான 22 வயது நித்தீஷும் விமலும் அடிக்கடி மோதிக்கொண்டனர்.

இதன் காரணமாக, இருவருக்கும் முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. மீண்டும் விமலும், ஜெகனும் நித்தீஷின் நண்பர்களை தாக்கியுள்ளனர்.

இதனால், ஆத்திரமடைந்த நித்தீஷ், விமலையும் ஜெகனையும் தீர்த்துக்கட்ட திட்டமிட்டு தனது நண்பர்களான 23 வயது ஜார்ஜ் பெர்னாண்டஸ், கரும்பூர் பகுதியை ச்சேர்ந்த 23 வயது நேதாஜி, 19 வயது யுகேஷ், 23 வயது நந்தகுமார், 22 வயது நவீன் ஆகியோர் விமலையும் ஜெகனையும் வெட்டி கொலை செய்தது தெரியவந்தது.

இந்த இரட்டை கொலைக்கு காரணமான நித்தீஷின் அம்மா கற்பகம் மற்றும் அவரது மகன் மணிகண்டன் என்கிற திருநங்கை மணிமகலை உள்பட, 8 பேரை கைதுசெய்து விசாரணைக்குப்பின் செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

காதல் மனைவியை பிரிந்த இளைஞர் கொடூரமாக கொலை..!

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies