முகப்பு
தண்ணீர் டம்ளரில் மதுபானத்தை கலந்து குடித்த நபர்... சிக்கன் ரைஸ் கரண்டியால் தாக்கியதில் பலி
May 13, 2025 10:46 AM
159
தமிழர் தேசம் கட்சி நகர தலைவர் உட்பட 4 பேர் கைது
நாமக்கல் போதுப்பட்டியில் பாஸ்புட் கடையில் மதுபோதையில் தகராறு செய்த ஸ்ரீதர் என்பவரை தாக்கி கொலை செய்த வழக்கில் தமிழர் தேசம் கட்சி நகர தலைவர் மெளலீஸ்வரன், அவரது மனைவி நிஷா, மாமியார் ஜோதிமலர், நண்பர் பிளிக்ஸ் ஆகிய 4 பேரை கைது செய்து நாமக்கல் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திங்கட்கிழமை இரவு பாஸ்ட் ஃபுட் கடைக்கு சாப்பிடச் சென்ற ஸ்ரீதர், அங்கிருந்த தண்ணீர் டம்ளரில் மதுபானத்தை கலந்து குடித்ததாகவும், அதை தட்டிக் கேட்ட கடை உரிமையாளர் ஜோதிமலர் மற்றும் அவரது மகளிடம் தகராறில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து ஜோதிமலர் கொடுத்த தகவலின் பேரில் கடைக்கு வந்த மௌலீஸ்வரன், பீர் பாட்டில், சிக்கன் ரைஸ் கரண்டியால் கொடூரமாக தாக்கி கொலை செய்து விட்டு தப்பியோடியதாக போலீசார் தெரிவித்தனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
காதல் மனைவியை பிரிந்த இளைஞர் கொடூரமாக கொலை..!
Jun 22, 2025
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu