தமிழ்நாடு
உதகையில் தொடங்கியுள்ள ரோஜா கண்காட்சி.. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கடல் வாழ் உயிரின வடிவங்கள்..
May 10, 2025 10:00 AM
91
நீலகிரி மாவட்டம் உதகையில் 20வது ரோஜா கண்காட்சியை தமிழ்நாடு அரசு கொறடா ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். மூன்று நடைபெறும் ரோஜா கண்காட்சியில் கடல்வாழ் உயிரினங்கள் பாதுகாப்பு குறித்த மலர் வடிவமைப்புகள் வைக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
டால்பின், முத்து, சிப்பி, நத்தை, நட்சத்திர மீன் போன்ற 30 கடல் சார்ந்த உயிரினங்களின் வடிவமைப்புகள் ரோஜா மலர்கள் கொண்டு துல்லியமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.