உலகம்
கொக்கரித்த மசூத் அசாரின் தம்பி ரவுப் அசார் காலி ஷார்ப்பா ஒரு சம்பவம்..! திருப்பி தாக்கியது கர்மா
May 09, 2025 01:08 AM
2873
கொக்கரித்த மசூத் அசாரின் தம்பி ரவுப் அசார் காலி ஷார்ப்பா ஒரு சம்பவம்..! திருப்பி தாக்கியது கர்மா
பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய ஆப்ரேசன் சிந்தூர் துல்லிய தாக்குதலில் ஜெய்ஷ் - இ- முகமது இயக்க பயங்கரவாதி மசூத் ஆசாரின் சகோதரருமான அப்துர் ரவுப் அசார் கொல்லப்பட்டதாக அதிகார பூர்வ தகவல் வெளியாகி உள்ளது
இந்திய ராணுவத்தின் ஆபரேசன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத பயிற்சி முகாம்கள் மீது ஏவுகனை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டிருகலாம் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ் நாத் சிங் தெரிவித்திருக்கிறார். இந்த தாக்குதலில் தங்கள் குடும்பத்தை சேர்ந்த 10 பேர் உயிரை தியாக செய்திருப்பதாக பயங்கரவாதி மசூத் அசார் ஒப்புக் கொண்டிருந்தான். இந்த 10 பேரில் மசூத் ஆசாரின் சகோதரரும், ஜெய்ஷ் - இ- முகமது இயக்க முக்கிய தளபதியுமான அப்துல் ரவுப் அசார் கொல்லப்பட்டதாக அதிகார பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.
பாகிஸ்தானிய தியோபந்தி ஜிஹாதி மதகுருவாக தன்னை அறிவித்துக் கொண்ட அப்துல் ரவூப் அசார், ஜெய்ஷ்-இ-முகமது (JeM) இயக்கத்தின் உச்ச தளபதியாக இருந்து இந்தியாவில் பல்வேறு நாச வேலைகளில் ஈடுபட்டான். இவன் 2007 அன்று ஏப்ரல் 21 அந்தக் குழுவின் தலைமையை ஏற்றுக்கொண்ட பின்னர் இந்தியாவிற்கு எதிராக தாக்குதல்களை திட்டமிட்டு நடத்தினான். இந்தியாவின் மிகவும் தேடப்படும் நபர்களில் ஒருவனாகவும் இருந்தான்.
ரவூப் அசார் தனது 24 வயதில் 1999 ஆம் ஆண்டு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் IC-814 கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டவன். இந்திய சிறையில் இருந்த அவனது மூத்த சகோதரரும் ஜெய்ஷ் - இ- முகமது இயக்க நிறுவனருமான மௌலானா மசூத் அசாரை விடுவிக்க வழிவகுத்தது. அப்போதிருந்து, 2001 ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீர் சட்டமன்றம் மற்றும் இந்திய நாடாளுமன்றத்தின் மீதான தாக்குதல்கள், 2016 பதான்கோட் விமானப்படைத் தளத் தாக்குதல், அத்துடன் நக்ரோட்டா மற்றும் கதுவாவில் உள்ள ராணுவ முகாம்கள் மீதான தாக்குதல்கள் உட்பட, இந்தியாவில் அந்தக் குழு நடத்திய ஒவ்வொரு பெரிய தாக்குதலுக்கும் பின்னணியிலும் ரவூப் அசார் முக்கியமாக இருந்து வந்தான். 2019 ஆம் ஆண்டு புல்வாமாவில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்ட தற்கொலைத் தாக்குதலிலும் அவனுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்திய புலனாய்வு அமைப்புகளும் தேசிய புலனாய்வு அமைப்பும் (NIA) கூறுகையில், குறிப்பாக அவனது நோய்வாய்ப்பட்ட சகோதரர் இல்லாத நேரத்தில், ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்திற்கான அனைத்து செயல்பாட்டு முடிவுகளையும் ரவூப் அசார் எடுத்தன் என்றும் அப்போதைய பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரஃப் மீது கொலை முயற்சிகள் நடந்ததைத் தொடர்ந்து ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தினர் தலைமறைவாக இருந்த காலகட்டத்தில், ஆப்கானிஸ்தானுக்கு பயணம் செய்து தலிபான்களுடன் ஒருங்கிணைந்து அந்தக் குழுவை மீண்டும் கட்டியெழுப்பியதில் ரவூப் அசார் முக்கிய பங்கு வகித்ததாக கூறப்படுகின்றது.
நீண்ட காலமாக பயங்கரவாத தாக்குதலால் இந்தியாவை சீண்டிக்கொண்டிருந்த அப்துல் ரவூப் அசாரின் கதை ஆபரேசன் சிந்தூர் மூலம் முடித்து வைக்கப்பட்டுள்ளது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu