BIG STORIES
'சிண்ட்ரெல்லா' சரண்யா தலையை துண்டாக வெட்டிக் கொன்றது ஏன் ? காதல்.. சொத்து.. பஞ்சாயத்து..
May 07, 2025 01:28 AM
899
'சிண்ட்ரெல்லா' சரண்யா தலையை துண்டாக வெட்டிக் கொன்றது ஏன் ?காதல்.. சொத்து.. பஞ்சாயத்து..
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே பா.ஜ.க பிரமுகர் சரண்யா கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, அவரது 2 வது கணவர் உள்ளிட்ட 4 பேரை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரையை சேர்ந்தவர் சரண்யா என்கிற சிண்ட்ரெல்லா சரண்யா. பா.ஜ.க வில் மதுரை மத்திய தொகுதி நெசவாளர் பிரிவில் நிர்வாகியாக இருந்து வந்தார்.
கடந்த 2022ம் ஆண்டு தீவிரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீசிய வழக்கு இவர் மீது நிலுவையில் உள்ளது.
அண்மையில் பாஜகவுக்கு தலைவர் மாற்றப்பட்டதால் தனது பொறுப்பை ராஜினாமா செய்து விட்டு சாதாரண தொண்டராக நீடிப்பதாக சரண்யா தெரிவித்திருந்தார்.
கடந்த 2021ம் ஆண்டு சரண்யாவின் கணவர் சண்முகசுந்தரம் இறந்து விட்டதால், பா.ஜ.க. பிரமுகர் பாலன் என்பவரை சரண்யா காதலித்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
பாலனுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ராஜீ என்ற மனைவியும் இரண்டு மகன்களும் உள்ள நிலையில், அவர் தனது முதல் மனைவியை பிரிந்து சரண்யாவுடன் குடித்தனம் நடத்தி வந்தார்.
மதுரையில் இருந்தால் வீணான பிரச்சனை உருவாகும் என்று தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள உதயசூரிய புரத்தில் வாடகைக்கு வீடு எடுத்து சரண்யாவுடன் வசித்து வந்த பாலன் டிராவல்ஸ் மற்றும் ஜெராக்ஸ் கடை ஒன்றையும் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் 5ந் தேதி இரவு வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு பாலன் சரண்யாவின் இரு மகன்களுடன் பைக்கில் வீட்டிற்கு சென்றார்.
அவர்களை பின் தொடர்ந்து நடந்து சென்ற சரண்யாவை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள், பின்பக்கம் இருந்து அவரை அரிவாளால் வெட்டி தலையை துண்டித்து கொடுரமாக கொலை செய்து விட்டு தப்பிச் சென்றனர்.
பா.ஜ.க பெண் பிரமுகர் தலை துண்டித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தால் பெரும் பரபரப்பு உண்டானது. கொலையாளிகளை காவல்துறையினர் தேடி வந்த நிலையில் பாலனின் முதல் மனைவி மகன் கபிலன் (20), உறவுக்கார இளைஞர் குகன் , கூட்டாளி பார்த்திபன் ஆகிய மூன்று பேரும் மதுரை அண்ணா நகர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். அவர்களை கைது செய்து போலீசார் நடத்தினர்
பாலன் புதிதாக வாங்கிய வீட்டை தனது முதல் மனைவி ராஜி பெயரில் எழுதி வைக்க திட்டமிட்டிருந்த நிலையில், சரண்யா தனது பெயரில் எழுதி வைக்க வேண்டும் என மிரட்டி சண்டை போட்டு உள்ளார். இது குறித்து தகவல் அறிந்த பாலனின் முதல் மனைவி மற்றும் மகன்களுக்கு சரண்யா மீது ஆத்திரம் ஏற்பட்டு உள்ளது.
அதே வேளையில் தனது ஜெராக்ஸ் கடையில் வேலை பார்த்து வந்த துர்கா என்பவரிடம் சரண்யா தங்க நகைகளை வாங்கி அடமானம் வைத்து புதிதாக சொத்து ஒன்றை வாங்கியதாக கூறப்படுகின்றது.
குறிப்பிட்ட நாட்களுக்குள் நகைகளை திருப்பி தராததால் துர்காவின் நகைகள் ஏலத்தில் மூழ்கி விட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து கேட்ட துர்காவை சரண்யா மிரட்டியதாகவும் சொல்லப்படுகிறது.
இதையடுத்து பாலனின் முதல் மனைவி மகன் கபிலனும், நகையை இழந்த ஆத்திரத்தில் இருந்த துர்காவின் கணவர் பார்த்திபனும் சேர்ந்து சரண்யாவை கொலை செய்ய திட்டமிட்டதாகவும், தனது பெரியம்மா மகன் குகன் என்பவரை கபிலன் மதுரையில் இருந்து வரவழைத்து, பார்த்திபன் வீட்டில் இரண்டு நாட்களாக தங்க வைத்ததாகவும் கூறப்படுகின்றது.
தினமும் கடையை அடைத்து விட்டு சரண்யா தனியாக நடந்து செல்வதை நோட்டமிட்ட 3 பேரும், சம்பவத்தன்று சரண்யாவின் தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்தது விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இந்தக் கொலையில் சரண்யாவின் இரண்டாவது கணவர் பாலனுக்கும் தொடர்பு உள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் அவரை போலீசார் கைது செய்தனர்.
தந்தை பாலனின் தூண்டுதலின் பேரில் சரண்யாவை கொலை செய்ததாக அவரது மகன் கபிலன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu