BIG STORIES
பாலத்திற்காக தோண்டப்பட்ட மரண குழியால் விபரீதம்... கணவன் மனைவி பலி..! இதற்கு யார் பொறுப்பு ?
May 04, 2025 01:40 PM
303
பாலத்திற்கு வெட்டப்பட்ட மரணக்குழி ..! கணவன் மனைவி பலி - சிறுமி உயிர் ஊசல்
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள சேர்வக்காரன் பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜ்( 42 )திருப்பூர் பஞ்சம் பாளையம் டாஸ்மார்க் கடையில் விற்பனையாளராக வேலை செய்து வந்தார். இவர் தனது மனைவி ஆனந்தி (38) மகள் தீட்சனா (13 ) ஆகியோருடன் ஆன்மீக பயணமாக திருச்செந்தூர் ,திருநள்ளாறு, கோவில்களுக்கு சென்றிருந்தார்.
கோவில்களுக்கு சென்று விட்டு அதிகாலை 3 மணி அளவில் தாராபுரம் பேருந்து நிலையம் வந்திறங்கினார். அங்கு நிறுத்தி விட்டுச்சென்ற தனது இருசக்கர வாகனத்தில் மனைவி மற்றும் மகளுடன் வீடு திரும்பினார்.
வழியில் தாராபுரம் காங்கேயம் சாலை குள்ளாய் பாளையம் மாந்தோப்பின் அருகே சாலையின் மத்தியில் பாலம் கட்டுவதற்காக மூன்று ஆழமான குழிகள் தோண்டப்பட்டு தகுந்த சாலை பாதுகாப்பு இல்லாமல் இருந்தது. அப்போது எதிரே வந்த மற்றொரு வாகனத்திற்கு வழி விடுவதாற்காக நாகராஜ், வாகனத்தை ஒதுக்கிய போது பாலம் கட்ட தோண்டப்பட்ட ஆழமான குழிக்குள் இரு சக்கர வாகனத்துடன் நாகராஜ் குடும்பத்தினர் தவறி விழுந்தனர்.
இதில் சம்பவ இடத்திலேயே நாகராஜ் அவரது மனைவி ஆனந்தி இருவரும் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக பலியாகினர். அவர்களது மகள் தீட்சனா பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிய நிலையில் காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என விடிய விடிய சத்தமிட்டு கொண்டிருந்தார்.
உயிருக்கு போராடிய மாணவி மற்றும் அவரது பெற்றோர் குழிக்குள் கிடந்ததால் சாலையில் வாகனத்தில் சென்ற யாருக்கும் இவர்களது நிலை தெரியவில்லை.
இந்நிலையில் இன்று அதிகாலை கல்லூரி மாணவர்கள் அடங்கிய குழு ஒன்று மூணார் சுற்றுலா சென்று விட்டு திரும்பி வரும் இப்போது பாலத்திற்காக தோண்டப்பட்ட குழிக்குள் இருந்து அபயக் குரல் வருவதை கேட்டு, தங்கள் வாகனத்தை நிறுத்தி சென்று பார்த்தனர்.
உடனடியாக ஆம்புலன்ஸ்க்கு போன் செய்து விபத்தில் உயிரிழந்த கணவன் மனைவி உடலையும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மாணவியையும் மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர் .
படுகாயம் அடைந்த மாணவியை மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செஎல்லப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
சம்பவம் குறித்து குண்டடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .
சாலையில் பாலம் அமைக்கும் தனியார் நிறுவனம் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யாமல் வைத்திருந்ததே விபத்துக்கு காரணம் என ஆத்திரத்துடன் குற்றஞ்சாட்டிய கிராம மக்கள் .
ஒப்பந்ததாரர் அலட்சியத்தால் எட்டாம் வகுப்பு மாணவி தனது தாய் தந்தை இழந்து நிற்கதியாய் உயிருக்கு போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்தனர்
இங்கு மட்டுமல்ல பாலப்பணிகள் மழை நீர் வடிகால், மற்றும் பாதாள சாக்கடை பணிகள் மேற்கொள்ளப்படும் இடங்களிலும் தகுந்த தடுப்புகள் அமைத்து வரும் காலங்களில் இது போன்று விபரீத உயிரிழப்புகள் ஏற்படுவதை சம்பந்தப்பட்ட அரசு துறையினர் தடுக்க கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் ஆதங்கமாக உள்ளது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu