BIG STORIES
காதலில் விழுந்தவரை சடலமாக்கிய காதலி.. விமானத்தில் தப்பினார்..! காதலுடன் ஒரு பரபர கிரைம்
May 04, 2025 01:38 AM
447
துபாயில் இருந்து திருவாரூர் திரும்புவதாக சொன்ன கணவர் மாயமானதாக மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், கூலிப்படை ஆசாமியுடன் இணைந்து ஸ்கெட்ச் போட்டு கொலை செய்ததாக விமானத்தில் தப்பிய காதலியை போலீஸ் தேடி வருகின்றது.
திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிகாமணி துபாயில் தங்கி ட்ராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். மனைவி பிரியாவிடம் செல்போனில் பேசிய சிகாமணி ஏப்ரல் 24ந்தேதி இந்தியாவிற்கு வருவதாக தெரிவித்தார்.
ஆனால் அதன் பின்னர் பிரியாவால், சிகாமணியை தொடர்பு கொள்ள இயலவில்லை. அவரது செல்போன் போன் சுவிட்ச் ஆஃப்பிலேயே இருந்தது.
துபாயில் உள்ள தங்கள் ட்ராவல்ஸ் நிறுவன ஊழியரிடம் விசாரித்த போது அவர் ஏப்ரல் 21 ஆம் தேதியே கோவைக்கு தனது காதலி சாரதா என்பவரை சந்திக்க கிளம்பி வந்து விட்டாரே என கூறியுள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிகாமணியின் மனைவி ப்ரியா, விமானத்தில் கோவை வந்த தனது கணவனை காணவில்லை என கோவை பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதற்கிடையே கரூர் பொண்ணமராவதி பகுதியில் காயங்களுடன் சடலமாக கிடந்த டிராவல்ஸ் அதிபர் சிகாமணியின் சடலத்தை மீட்ட போலீசார், இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க சிகாமணியின் காதலி சாரதா வீட்டிற்கு சென்றனர் வீடு பூட்டிக் கிடந்தது.
இந்த நிலையில் சாரதாவின் வளர்ப்பு தந்தை தியாகராஜன் என்பவர் சிகாமணியை கொலை செய்த வழக்கில் போலீசார் தன்னை தேடுவதாக கூறி கோவை நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.
விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. தனது மகள் சாரதாவை அடித்து துன்புறுத்திய முதல் கணவன் குணவேலை கொலை செய்த வழக்கில் கடந்த 2016ம் ஆண்டு கைது செய்யப்பட்ட தியாகராஜன் தண்டனை கைதியாக சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தவர் என்று கூறப்படுகின்றது.
முதல் கணவன் கொலையான பின்னர் இந்தியாவை விட்டு துபாய்க்கு சென்ற சாரதாவுக்கு அங்கு ட்ராவல்ஸ் நடத்தி வந்த சிகாமணியுடன் காதல் மலந்து, அது தகாத உறவாக மாறியுள்ளது.
காதல் மயக்கத்தில் சாரதா, சிகாமணிக்கு 6 லட்சம் ரூபாய் வரை செலவுக்கு பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது. அந்த பணத்தை சாரதா திருப்பி கேட்டபோது "நானும் தான் உனக்கு அதிகமாக செலவு செய்துள்ளேன்" என கூறி சிகாமணி பணத்தை கொடுக்க மறுத்ததாக கூறப்படுகின்றது.
இதனால் ஆத்திரமடைந்த சாரதா, ஏமாற்றத்துடன் கோவைக்கே திரும்பியுள்ளார். சிறையில் இருந்து ஜாமீனில் வந்த வளர்ப்பு தந்தை தியாகராஜனிடம் நடந்த அனைத்தையும் , சாரதா தெரிவித்துள்ளார்.
இதையடுத்து சாராதாவை நன்றாக பயன்படுத்திவிட்டு ஏமாற்றிய சிகாமணியை தீர்த்துக் கட்ட முடிவு செய்த தியாகராஜன், சிறையில் தனக்கு அறிமுகமான நெல்லை ரவுடி குட்டி தங்கம் என்கிற புதியவனை வரவழைத்துள்ளார்.
செல்போனில் காதலன் சிகாமணியுடன் கொஞ்சிப் பேசி சாரதா அவரை கோவைக்கு வரவைத்துள்ளார். சம்பவத்தன்று காதலி வீட்டில் வைத்து தியாகராஜன், ரவுடி புதியவன் ஆகியோர் சிகாமணிக்கு பீர் விருந்து வைத்தனர்.
சிகாமணிக்கு கொடுக்கப்பட்ட பீர் மற்றும் இறைச்சியில் 30 க்கும் மேற்பட்ட தூக்க மாத்திரைகளை பொடி செய்து கலந்த கொடுத்துள்ளனர்.
இதனால் மயங்கி விழுந்த சிகாமணியை அடித்து கொலை செய்து சடலத்தை 3 பேரும் சேர்ந்து காரில் ஏற்றிச் சென்று கரூர் பெண்ணமராவதி பகுதியில் வீசி உள்ளனர்.
சாரதா மட்டும் திருச்சி விமான நிலையத்திலிருந்து துபாய்க்கு தப்பிச் சென்றுள்ளார் என்று தெரிவித்த போலீசார் இந்த கொடூர கொலை சம்பவம் சாரதாவின் தாய் கோமதி, சகோதரிகள் நிலா, ஸ்வாதி ஆகியோருக்கும் தெரிந்தே நடந்ததாக கூறினர்
இந்த சம்பவம் தொடர்பாக நெல்லை ரவுடி புதியவன், சாரதாவின் தாய் கோமதி, சகோதரிகள் நிலா ,ஸ்வாதி ஆகிய 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
துபாய்க்கு தப்பிச் சென்ற சாரதாவை கைது செய்ய போலீசார் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொலை சம்பவத்தில் கைதாகி உள்ள நெல்லை ரவுடி புதியவன், மறைந்த ரவுடி பசுபதி பாண்டியனின் கூட்டாளி என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu