கொரோனா தொற்று - நாடு முழுவதும் 4 பேர் உயிரிழப்பு
Jun 20, 2025
BIG STORIES
தனியே வசித்த முதிய தம்பதி... தங்கத்தாலியை கண் வைத்த கும்பல் தோட்டத்து வீட்டில் கொடூர சம்பவம்
May 02, 2025 05:42 AM
388
தனியே வசித்த முதிய தம்பதி... தங்கத்தாலியை கண் வைத்த கும்பல் தோட்டத்து வீட்டில் கொடூர சம்பவம்
ஈரோடு அருகே தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த முதிய தம்பதியை, 12 சவரன் நகைக்காக மர்ம ஆசாமிகள் படுகொலை செய்து விட்டு தப்பிச் சென்ற நிலையில், இருவரின் உடல்களும் இரண்டு நாட்களாக கேட்பாரற்ற நிலையில் கிடந்த சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...
ஈரோடு மாவட்டம் சிவகிரி விளாங்காட்டு வலசு மேகரையான் தோட்டத்தைச் சேர்ந்தவர் 75 வயதான ராமசாமி கவுண்டர், இவர் தனது 65 வயது மனைவி பாக்கியத்துடன், மேகரையான் தோட்டத்தில் உள்ள தோட்டத்து வீட்டில் வசித்து வந்தார். ராமசாமி கவுண்டரின் மகன் கவிசங்கர், முத்தூரில் மோட்டார் விற்பனை நிலையம் வைத்து நடத்தி வருவதால் அங்கு வசித்து வருகிறார். மகள் பானுமதிக்கு திருமணம் நடைபெற்று கணவர் குழந்தைகளுடன் முத்தூர் அருகே சக்கரை பாளையத்தில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், தனியாக வசித்து வந்த ராமசாமி கவுண்டரும், அவரது மனைவி பாக்கியமும், கடந்த 2 நாட்களாக வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்ததாகக் கூறப்படுகிறதும். மேலும், கவிசங்கர் தனது பெற்றோரை செல்போனில் அழைத்தாலும் அவர்களிடம் இருந்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து, மகன் கவிசங்கர் மேகரையான்தோட்டத்து பகுதியில் வசித்துவரும் உறவினர்கள் இருவரைத் தொடர்பு கொண்டுள்ளார்.
பெற்றோர் போனை எடுக்கவில்லை என்றும், அவர்களை வீட்டுக்கு சென்று பார்க்குமாறும் கவிசங்கர் தெரிவித்துள்ளார். உறவினர்களான நதியாவும், நல்லசிவமும் ராமசாமியின் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, அங்கு ராமசாமியும் அவரது மனைவி பாக்கியமும் கொலை செய்யப்பட்டு, உடல் அழுகிய நிலையில் துர்நாற்றத்துடன் கிடந்ததாகக் கூறப்படுகிறது.
தகவல் கிடைத்ததும் சிவகிரி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து முதற்கட்ட விசாரணை நடத்தினர். கோவை மேற்கு மண்டல ஐ.ஜி செந்தில்குமார், டி.ஜ.ஜி சசிமோகன், ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜாதா ஆகியோரும் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டனர்
போலீசாரின் விசாரணையில், ராமசாமி கவுண்டரின் மனைவி பாக்கியம் அணிந்திருந்த 7 சவரன் தங்கத் தாலியும், 5 சவரன் வளையல் மற்றும் மோதிரம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. எனவே, நகையை கொள்ளையடிப்பதற்காக முதியவர்கள் இருவரும் கொலை செய்யப்பட்டதை உறுதி செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, தடயவியல் அறிவியல்துறையினர் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கும் பணிகள் துவங்கின.
சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட பெண்கள் பயன்படுத்தும் மணிபர்சை மோப்பம் பிடித்த மோப்பநாய், சம்பவ இடத்திலிருந்து விளாங்காட்டு வலசு மெயின்ரோடு வரை சென்று திரும்பியது.
ராமசாமி கவுண்டர் தனது தோட்டத்து வீட்டில் பாதுகாப்புக்காக வளர்த்து வந்த நாய், கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் வெளியே சென்று, ஏதோ ஒன்றை சாப்பிட்டதால், மீண்டும் உணவு எடுக்காமல் இறந்தது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையாளிகளைக் கண்டுபிடிக்க, ஏ.டி.எஸ்.பி. விவேகானந்த் தலைமையில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் 136 சிசிடிவி பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
சம்பவம் குறித்து செய்தியாளர்களை சந்தித்த, கோவை மேற்கு மண்டல ஜ.ஜி. செந்தில்குமார்,
கொலையுண்ட இருவரது உடல்களும் அழுகிய நிலையில் கண்டறியப்பட்டதாகவும், கொலையாளிகள் குறித்த விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
ஏற்கனவே, 2020ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரையில், சென்னிமலை, காங்கேயம், அரச்சலூர் உள்ளிட்ட பகுதிகளில் தனியாக வசித்துவந்த முதியவர்கள் நகைக்காக ஆதாய கொலைகள் செய்யப்பட்ட சம்பவங்கள் நடைபெற்றுள்ள நிலையில், தற்போது முத்யிஅ தம்பதியினரும் தோட்டத்து வீட்டில் கொலை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu