RECENT NEWS

வேப்பூர் நெடுஞ்சாலையில் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார்.. திருமண நிகழ்ச்சிக்குச் சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்..

வேப்பூர் நெடுஞ்சாலையில் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார்.. திருமண நிகழ்ச்சிக்குச் சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்..

Jun 21, 2025

வேப்பூர் நெடுஞ்சாலையில் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார்.. திருமண நிகழ்ச்சிக்குச் சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்..

வேப்பூர் நெடுஞ்சாலையில் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார்.. திருமண நிகழ்ச்சிக்குச் சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்..

Jun 21, 2025

BIG STORIES

அவன் ஒரு சைக்கோங்க.. மாமியாருன்னு கூட விடமாட்டான்.. அவன தூக்குல போடுங்க..! கதறிய நர்சுவின் தாய் கண்ணீர்

May 02, 2025 02:30 AM

954

அவன் ஒரு சைக்கோங்க.. மாமியாருன்னு கூட விடமாட்டான்.. அவன தூக்குல போடுங்க..!
கதறிய நர்சுவின் தாய் கண்ணீர்

அவன் ஒரு சைக்கோங்க.. மாமியாருன்னு கூட விடமாட்டான்.. அவன தூக்குல போடுங்க..! கதறிய நர்சுவின் தாய் கண்ணீர்

திருப்பூரில் தனியார் மருத்துவமனை நர்சு தலையில் கல்லைபோட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அவரது கணவரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பூம்புகார் நகர் குடியிருப்பு பகுதியில் செவிலியர் சீருடை அணிந்த பெண் ஒருவர் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்டு கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்கு சென்ற திருப்பூர் தெற்கு காவல் நிலைய போலீசார், அந்த பெண்ணின் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர் . சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்ட மோப்பநாய் ஹன்டர் , மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வரை ஓடிச் சென்று நின்றுவிட்டது யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை

கொலையாளியை பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சியில் செவிலியர் உடை அணிந்த பெண்ணின் தோளில் கைபோட்டபடி, லுங்கி அணிந்து பங்க் தலைமுடி தோற்றத்துடன் காணப்பட்ட இளைஞர் அழைத்துச்செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

செவிலியர் சீறுடையை வைத்து கொல்லப்பட்ட பெண் திருப்பூர் - பல்லடம் சாலையில் உள்ள பல் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த செவிலியர் சித்ரா என்பதை போலீசார் கண்டறிந்தனர். சித்ராவின் தாயிடம் விசாரித்த போது சிசிடிவி காட்சியில் லுங்கியுடன் சித்ராவின் தோளில் கைபோட்டு அழைத்துச்செல்லும் நபர் தனது மகளை பிரிந்து வாழ்ந்த மருமகன் ராஜேஷ் கண்ணா என்றும் தெரிவித்தார். தனது மகளை கொலை செய்த கையோடு , வீட்டிற்கு வந்து தனது பேரன் பேத்தியையும் ஏமாற்றி கூட்டிச்சென்று விட்டான் என்றும் கூறி கதறி அழுதார்.

இதையடுத்து செவிலியர் கொலை தொடர்பாக தேடப்படும் ராஜேஷ் கண்ணா மதுரை அலங்காநல்லூர் பகுதியில் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கு விரைந்த தனிப்படை போலீசார் அவரை கைது செய்து திருப்பூர் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனிக்கு வேலைக்காக வந்த சித்ராவுக்கும், மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பகுதியை சேர்ந்த ராஜேஷ்கண்ணாவுடன் காதல் மலர்ந்துள்ளது. கடந்த 2014ம் ஆண்டு இருவரும் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு ஒரு மகனும் ,மகளும் உள்ள நிலையில் , ஈரோட்டில் தங்கி கட்டிட வேலை , பனியன் கம்பெனி வேலைகளுக்கு சென்று வந்த ராஜேஷ் கண்ணாவுக்கு கூடா நட்பால், கஞ்சா, மது, மாது உள்ளிட்ட கெட்ட பழங்கங்களுக்கு அடிமையானதாக கூறப்படுகின்றது. போதையில் ராஜேஷ் கண்ணா அடிக்கடி சித்ராவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அடித்து உதைப்பதை வாடிக்கையாக்கி உள்ளார்.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக சித்ரா தனது மகனையும், மகளையும் அழைத்துக் கொண்டு திருப்பூரில் உள்ள தனது தாய் வீட்டிற்க்கு வந்துள்ளார். கடந்த ஒரு மாதகாலமாக திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள தனியார் பல் மருத்துவமனையில் செவிலியர் ஆக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு சித்ராவை சந்தித்த ராஜேஷ் கண்ணா, தான் திருந்தி விட்டதாக கூறி நம்பவைத்து , சித்ராவை வீட்டிற்கு அழைத்துச்சென்றதாக கூறப்படுகின்றது.

வழியில் அவனது நடவடிக்கையில் சந்தேகப்பட்டு சித்ரா கேள்வி மேல் கேள்வி கேட்டதால் சுய ரூபத்தை காட்டிய ராஜேஷ் கண்ணா மனைவியை கழுத்தை பிடித்து நெரித்ததாக கூறப்படுகின்றது. இதனால் உஷாரான சித்ரா அவனது பிடியில் இருந்து தப்பி ஓடி உள்ளார். அவரை விரட்டிச்சென்று பூம்புகார் நகர் குடியிருப்பு பகுதியில் உள்ள காலி மனையில் இருள் சூழ்ந்த பகுதியில் தலையில் கல்லைபோட்டு கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையத்து ராஜேஷ் கண்ணாவை போலீசார் கைது செய்தனர்.

தனது மகளை காதலித்து திருமணம் செய்த ராஜேஷ்கண்ணாவை “சைக்கோ” என்று கூறிய செவிலியரின் தாய், அவன் தன்னையும் தாக்கியதாகவும், அவனை தூக்கில் போட வேண்டும் என்றும் ஆதங்கம் தெரிவித்தார்

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

நடிகையின் வாயை அடித்து கிழித்து கொடுமை படுத்திய விர்சுவல் வாரியர் விஷ்ணு..! குற்றப்பட்டியல் நீண்டதால் கைது

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies