BIG STORIES
தங்கையிடம் கிண்டல்.. இளைஞரை சிறைக்கு அனுப்பிய திமுக பிரமுகர் படுகொலை..! பின்னணியில் கஞ்சா கும்பலா ?
Apr 29, 2025 01:30 AM
410
தங்கையிடம் கிண்டல்.. இளைஞரை சிறைக்கு அனுப்பிய திமுக பிரமுகர் படுகொலை..!
சிவகங்கை அருகே தங்கையை கிண்டல் செய்த இளைஞரை போலீசில் புகார் அளித்து சிறைக்கு அனுப்பிய ஆத்திரத்தால், திமுக மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணியின் துணை அமைப்பாளர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
சிவகங்கை மாவட்டம் சாமியார் பட்டியை சேர்ந்தவர் பிரவீன் குமார் , திமுகவின் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணியின் துணை அமைப்பாளராக இருந்த பிரவீன் சம்பவத்தன்று வெள்ளஞ்சி கண்மாய் அருகில் நின்று கொண்டிருந்த பொழுது மூன்று நபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து வாளால் வெட்டி தப்பிச் சென்றனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிய பிரவீனை சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். வழியிலேயே அவர் உயிரிழந்தார். பிரவீனின் உடல் பிணகூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனால் அவரது உறவினர்கள் கதறி அழுதனர்
இந்நிலையில் மருத்துவமனை வளாகத்தில் குவிந்த உறவினர்கள், குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி சிவகங்கை - மானாமதுரை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதட்டம் ஏற்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக அதே ஊரை சேர்ந்த கருணாகரன் என்கிற விக்கி, காளவாசலை சேர்ந்த பிரபாகரன், திருப்பத்தூரை சேர்ந்த குரு ஆகிய 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்திய வாளையும், இரு சக்கரவாகனத்தையும் கைப்பற்றினர்
விசாரணையில் கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி பிரவீனின் தங்கை உறவுமுறை கொண்ட பெண்ணை கிண்டல் செய்ததாக அளிக்கப்பட்ட புகாரில், பிரவீன் கொடுத்த அழுத்தம் காரணமாக விக்கியின் தம்பி தனுஷ் ராஜா மீது பெண்ணை தாக்கியதாக போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர் .
தனது தம்பி ஜெயிலுக்கு செல்ல பிரவீன் தான் காரணம் என்ற ஆத்திரத்தில் இருந்த விக்கி தனது கூட்டாளிகளான பிரபாகரன் , குரு ஆகியோருடன் சேர்ந்து பிரவீனை வாளால் வெட்டி கொன்றது விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த கொலைக்கு பின்னணியில் கஞ்சா விற்பனை கும்பல் இருப்பதாக குற்றஞ்சாட்டிய உறவினர்கள், கஞ்சா விற்பனை குறித்து போலீசுக்கு தகவல் கொடுத்ததால் கூலிப்படையை ஏவி பிரவீன் கொல்லப்பட்டதாக கூறியதோடு, பின்னணியில் இருக்கும் நபர்களை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu