முகப்பு
ஆசை காட்டிய பச்சைக்கிளி..அசிங்கப்பட்ட ஐடி ஊழியர்..! பீச் ஹவுசில் நடந்தது என்ன.? சாகச சரஸ்வதி தப்பி ஓட்டம்
Apr 25, 2025 12:52 AM
1082
ஆசை காட்டிய பச்சைக்கிளி..அசிங்கப்பட்ட ஐடி ஊழியர்..! பீச் ஹவுசில் நடந்தது என்ன.?
ஐ.டி ஊழியரை ஆசை காண்பித்து பீச் ஹவுசிற்கு அழைத்துச்சென்ற பெண் ஒருவர், ரவுடிகளுடன் சேர்ந்து மிரட்டி அவரது ஆடைகளை களைந்து வீடியோ எடுத்து, பைக் மற்றும் செல்போனை பறித்துக் கொண்டு, 10 லட்சம் ரூபாய் பணமும் கேட்டு மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுவை மாநிலம் திருக்கனூர் அடுத்த கூனிச்சம்பட்டு பகுதியை சேர்ந்த கோயில் அர்ச்சகரின் 21 வயது மகன், லாஸ்பேட்டை இசிஆர் சாலையில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு செல்போன் ராங் கனெக்சனில் இளம்பெண் ஒருவர் அறிமுகமாகி உள்ளார். அடிக்கடி கொஞ்சி பேசிய அந்த இளம் பெண்ணின் பேச்சில் மயங்கிய ஐடி ஊழியர், இந்திரா காந்தி சதுக்கம் அருகே அவரை நேரில் சந்தித்து பேசியுள்ளார்.
பேசிகிட்டே இருந்தா எப்படி? என்று ஆசையை தூண்டிய அந்த பெண், தனக்கு தெரிந்த இடம் ஒன்று இருக்கின்றது என்று கோட்டக்குப்பம் அடுத்த பெரிய முதலியார் சாவடி கடற்கரை அருகே பழையபட்டின சாலையில் உள்ள 'ப்ளூடிக் பீச் ஹவுஸ்' லாட்ஜூக்கு ஐ.டி ஊழியரை அழைத்து சென்றுள்ளார்.
அறைக்குள் சென்று கதவை சாத்திய அந்த இளம் பெண், ஐடி ஊழியரின் ஆடைகளை எல்லாம் வேக வேகமாக களைந்துள்ளார். ஐ.டி. ஊழியரும் காதல் மயக்கத்தில் மெய் மறந்து நின்ற போது யாரோ கதவை சத்தம் கேட்டுள்ளது. அந்த பெண் சென்று கதவை திறந்ததும் பிரபல ரவுடி சுனாமி குடியிருப்பு சுகன் தலைமையில் 5 பேர் கும்பல் உள்ளே புகுந்துள்ளது. அந்த கும்பல் ஐடி ஊழியரை வீடியோ எடுத்துக் கொண்டே, எங்க சொந்தகார பெண்ணையே நீ அழைச்சிட்டு வந்திருக்கியா? என்று கூறி தாக்கியுள்ளனர்.
பின்னர் அவர்கள் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை எடுத்து அவரது கழுத்தில் வைத்து 10 லட்சம் பணம் கேட்டுள்ளனர். அந்த ஐ.டி ஊழியர், ஆடையின்றி அசிங்கப்பட்டு நிற்க, அவரை அழைத்து வந்த அந்த மாடர்ன் பொண்ணோ வாயில் சிகரெட்டை எடுத்து பற்ற வைத்து , அந்த கும்பலில் இருந்த ஒருவனின் தோளில் கை போட்டுள்ளார். இதையடுத்து தன்னை ஏமாற்றி அழைத்து வந்து அந்த பெண், ரவுடி கும்பலிடம் சிக்க வைத்துள்ளாள் என்பதை அந்த ஐ.டி ஊழியர் தாமதமாக உணர்ந்தார். தன்னை சிறைவைத்து தாக்கி சித்ரவதை செய்த கும்பலிடம் தன்னிடம் தற்போது பணமில்லை என்றும், வீட்டில் இருக்கின்றது உங்களின் யாராவது ரெண்டு பேர் உடன் வந்தால் பணத்தை எடுத்து தருகிறேன் என்று கூறி உள்ளார்.
இதையடுத்து அவரது விலை உயர்ந்த செல்போன் மற்றும் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பைக் உள்ளிட்டவற்றை பணயமாக பறித்து வைத்துக் கொண்ட ரவுடி சுகனின் கும்பல், அந்த இளைஞரை அழைத்துக் கொண்டு பணம் வாங்க சென்றுள்ளது. தெருமுனையில் அந்த 2 பேரையும் நிறுத்தி விட்டு வீட்டுக்குள் சென்ற ஐ.டி ஊழியர் வீட்டில் இருந்தவர்களிடம் நிலவரத்தை சொல்ல உடனடியாக அவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
வீட்டுக்குள் பணம் எடுக்க சென்றவர் வருவார் என்று பணத்துக்காக காத்திருந்த குட்டி ரவுடிகள் இருவரையும் தேடி போலீஸ் வந்ததால் அவர்கள் அங்கிருந்து தப்பினர். அவர்களை விரட்டிப்பிடித்த போலீசார், ஐடி ஊழியர் சிறைவைக்கப்பட்ட பீச் ஹவுசிற்கு இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் தலைமையில் விரைந்தனர்.
அந்த லாட்ஜை குத்தகைக்கு எடுத்து நடத்தும் மூலக்குளம் பகுதியைச் சேர்ந்த ஜெர்மின் ஆல்வினும் இந்த பணப்பறிக்கும் கும்பலில் ஒருவன் என்பது தெரிய வந்தது. அவனிடம் நடத்திய விசாரணையில் இந்த கும்பலுக்கு மூளையாக செயல்பட்டது பெரிய காலாப்பட்டு சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த பிரபல ரவுடி பிரதீப் என்கிற சுகன் என்பது தெரிய வந்தது. சுகன் போட்ட திட்டத்தின் படி திருநாவுக்கரசு, மோகன பிரசாத் , ஆகியோர் சேர்ந்து சரஸ்வதி என்ற இளம்பெண் மூலம் இந்த பச்சைகிளி முத்துசரம் படத்தில் வருவது போன்ற பணம் பறிக்கும் சம்பவத்தை அரங்கேற்றியது தெரியவந்தது. 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ரவுடி சுகன் மற்றும் சரஸ்வதி ஆகியோரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
தவறான செல்போன் அழைப்புகளில் பேசும் பெண்களை நம்பி தவறான பாதையில் சென்றால் என்ன மாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு இந்த சம்பவம் மற்றும் ஒரு உதாரணம்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu