தமிழ்நாடு
“ஓட்டுனர்கள்ன்னா இளக்காரமா..? விபத்தையும் ஏற்படுத்தி விட்டு அடித்தும் இழுத்துச் சென்ற கொடுமை..!
Apr 24, 2025 01:27 AM
1018
“ஓட்டுனர்கள்ன்னா இளக்காரமா..? விபத்தையும் ஏற்படுத்தி விட்டு அடித்தும் இழுத்துச் சென்ற கொடுமை..!
தர்மபுரி மாவட்டம் கல்கூடப்பட்டி தேசிய நெடுஞ்சாலையில், காய்கறி ஏற்றிச்சென்ற சரக்கு லாரியை போக்குவரத்து போலீசார் மறித்த நிலையில், பின்னால் வந்த அதிவேக லாரி மோதியதில் போலீசாரால் ஓரங்கட்டப்பட்ட லாரி விபத்தில் சிக்கியது. இதனைக் கண்டித்து வாக்குவாதம் செய்த ஓட்டுனர்களை போலீசார் சரமாரியாக தாக்கி இழுத்துச்சென்றனர்.
தர்மபுரி மாவட்டம் கல்கூடப்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து போலீசார் பேரிகார்டு அமைத்து வாகன சோதனைக்காக காய்கறி ஏற்றி வந்த ஈச்சர் லாரியை நிறுத்தி உள்ளனர். அப்போது நெல் பாரம் ஏற்றிக் கொண்டு மேட்டு பகுதியில் இருந்து அதிவேகமாக வந்த லாரி ஒன்று , காய்கறி லாரியின் பின் பக்கம் பயங்கரமாக மோதியது. இதில் காய்கறி ஏற்றி வந்த லாரி சாலையில் உருண்டு உருக்குலைந்தது காய்கறிகள் சாலையில் சிதறியது. நெல் பாரம் ஏற்றி வந்த லாரி சில மீட்டர் தூரம் தள்ளிச் சென்று நின்றது.
இந்த விபத்தில் காய்கறி லாரி ஓட்டுனர் சிதம்பரம் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நிலையில், காய்கறி லாரியை மறித்த போக்குவரத்து போலீசார் அங்கிருந்து புறப்பட்டுச்சென்று விட்டனர். இதையடுத்து அந்த வழியாக வந்த மற்ற சரக்கு வாகன ஓட்டுனர்கள் தங்கள் லாரிகளை சாலையில் நிறுத்தி விட்டு போக்குவரத்து போலீசாருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்
அங்கு வந்த பாலக்கோடு போலீசாரிடம் , அற்ப காசு 100 ரூபாய்க்காக தங்களின் வாகனங்களை மறித்து விபத்துக்கு காரணமான போக்குவரத்து காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைவைத்தனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது
காவல் ஆய்வாளர் பாலசுந்தரம் தலைமையில் அங்கு வந்த போலீசார் ஓட்டுனர்களை தாக்கி சட்டையை பிடித்து இழுத்துச்சென்று போலீஸ் வாகனத்தில் ஏற்றினர்
போலீசாரின் அராஜக போக்கை கண்டிப்பதாக கூறி சாலையில் நிறுத்தி இருந்த சரக்கு வாகனத்தின் சக்கரத்துக்கு அருகில் சாலையில் ஓட்டுனர்கள் படுத்துக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தாக்குவதை வீடியோ எடுத்தவர்களையும் தாக்கி அவர்களது செல்போன்களையும் போலீசார் பறித்ததாக ஓட்டுனர்கள் குற்றஞ்சாட்டினர்
அங்கு நடந்த சம்பவம் தொடர்பாக பாலக்கோடு காவல் ஆய்வாளர் பாலசுந்தரத்தை தொடர்பு கொண்டு கேட்ட போது, டி.எஸ்.பி உத்தரவின் பேரில் போக்குவரத்தை சீர் செய்வதற்காக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தியதாக தெரிவித்தார்
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu