முகப்பு
காஷ்மீரில் பயங்கரம் தீவிரவாதி சொன்ன அந்த வார்த்தைகள் மனதை உலுக்கிய சம்பவம்
Apr 23, 2025 04:02 PM
3349
உன்னை கொல்ல மாட்டேன்" - தீவிரவாதி... காண்போரை கலங்கடித்த காட்சிகள்
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் செவ்வாய்க்கிழமையன்று சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 28 அப்பாவி மனித உயிர்கள் பலியான சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.
கர்நாடகாவை சேர்ந்த பல்லவி மஞ்சுநாத் தம்பதியினர் சுற்றுலாவிற்காக 'மினி ஸ்விட்சர்லாந்து' என்றழைக்கப்படும் ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதிக்கு சுற்றுலா சென்றிருந்த நிலையில், திடீரென துப்பாக்கியோடு அப்பகுதியில் தீவிரவாதிகள் நுழைந்துள்ளனர்.
ஒவ்வொருவரிடம் நீங்கள் என்ன மதம்? என கேட்டு சுட்டு கொலை செய்த தீவிரவாதிகள், பல்லவியின் கண் முன்னே அவரது கணவர் மஞ்சுநாத்தை ஈவு இரக்கம் இல்லாமல் சுட்டு கொன்றனர். அப்போது கதறிய பல்லவி என்னை மட்டும் ஏன் விட்டுவைக்கிறீர்கள், என்னையும் கொன்றுவிடுங்கள் என தீவிரவாதியிடம் கூறியுள்ளார். அதற்கு நான் உன்னை கொலை செய்யமாட்டேன், இதை பிரதமரிடம் கூறுங்கள் என தீவிரவாதி தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.
மற்றோரு பெண் தனது கணவரோடு சுற்றுலா வந்திருந்த நிலையில், தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலுக்கு அப்பெண்ணின் கணவர் பலியானார். "யாராவது எனது கணவரை காப்பாற்றுங்கள்.. யாராவது காப்பாற்றுங்கள்" என அப்பெண் உதவிக்கு கூச்சலிட்ட காட்சிகள் காண்போரை கலங்க வைத்துள்ளது.
தனது கணவர் இறந்த நிலையில், அவரின் அருகில் அந்த பெண் அமர்ந்திருக்கும் காட்சிகள் இணையத்தில் பரவி மனித நேயத்தை கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பிரதமர் மோடி, "இந்த கொடூரமான சம்பவத்தின் பின்னணியில் உள்ளவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும்', "இந்த பயங்கரவாத தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu