RECENT NEWS

பாய் ஃபிரண்ட் பாவச் செயல்.... கேர்ள் பிரண்ட் Just miss..! AI சேட்டை.. போலீஸ் வேட்டை..!

பாய் ஃபிரண்ட் பாவச் செயல்.... கேர்ள் பிரண்ட் Just miss..! AI சேட்டை.. போலீஸ் வேட்டை..!

May 23, 2025

பாய் ஃபிரண்ட் பாவச் செயல்.... கேர்ள் பிரண்ட் Just miss..! AI சேட்டை.. போலீஸ் வேட்டை..!

பாய் ஃபிரண்ட் பாவச் செயல்.... கேர்ள் பிரண்ட் Just miss..! AI சேட்டை.. போலீஸ் வேட்டை..!

May 23, 2025

முகப்பு

“மூஞ்சில கடிச்சிட்டான்..சார்” காதலி முகத்தை பிராண்டிய காதல் பிசாசுக்கு கும்மாங்குத்து..! போலீசுக்கு காத்திருந்த டுவிஸ்ட்..!

Apr 23, 2025 02:36 PM

475

“மூஞ்சில கடிச்சிட்டான்..சார்” காதலி முகத்தை பிராண்டிய
காதல் பிசாசுக்கு கும்மாங்குத்து..! போலீசுக்கு காத்திருந்த டுவிஸ்ட்..!

பெண்ணை முகத்தில் கடித்து வைத்த காதலன் சைக்கோ காதலனை நையப்புடைத்தது ஏன் ?

எனக்கோரு காதலி இருக்கின்றாள்... அவள், ஏழு ஸ்வரங்களில் சிரிக்கின்றாள் என்று காதலியை இசையோடு ஒப்பிட்டது ஒரு காலம்....!

ஆப்பிள் பெண்ணே நீ யாரோ... ஐஸ் கிரீம் சிலையே நீ யாரோ.. என்று இடையில் சிலர் குளு குளு வென்று வர்ணிக்க...

அவளுக்கு உதடு கோவைப்பளம் மாதிரி இருக்கும்.. கண்ணு ரெண்டும் திரட்சை மாதிரி உருளும்... இப்படி சாப்பிடர சமாச்சாரத்தோடு காதலியை ஒப்பிட்டு வர்ணிச்ச பாவத்துக்கு, அழகாக இருப்பதாக நினைத்து தனது காதலியை பிறர் பார்க்க கூடாது என்று முகத்தில் விழுந்து கடித்து வைத்திருக்கிறான் சைக்கோ காதலன் ஒருவன்..!

அப்படிப்பட்ட சைக்கோ காதலன் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் சிக்கி இருக்கிறான்..! முதல் கணவரை பிரிந்து காதலில் விழுந்ததால் , காதலனிடம் கடிவாங்கி விட்டு காயத்துக்கு கட்டு போட முகத்தை மூடிக் கொண்டு அரசு மருத்துவமனைக்கு சென்று, தான் பட்ட பஷ்டங்களை எல்லாம் சோகமாக அமர்ந்து வாக்கு மூலமாக அளித்துக் சென்றிருக்கிறார் காதல் மகராணி புவனேஸ்வரி..!

சேலத்தை சேர்ந்த புவனேஸ்வரிக்கு திருமணமாகி இரு குழந்தைக்ள் உள்ள நிலையில், இருப்பதை விட்டு பறக்க ஆசைப்பட்டதாக கூறப்படுகின்றது. அப்படி கண்டதும் காதல்.. கொண்டதும் மோகம்.. என்று நாமக்கல் மாவட்டம் , திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த பிரவீன்குமாரிடம் சிக்கி இருக்கின்றார், புவனேஸ்வரி..!

முதல் கணவரிடம் விவாகரத்து பெறாமல் இரு மாதங்கள் மட்டுமே காதலனுடன் ஒன்றாக வசித்து வந்த நிலையில் அவனது சைக்கோ தனமான நடவடிக்கையால் புவனேஸ்வரி கடுமையாக பாதிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. பார்ப்பதற்கு அழகாக இருப்பதால் புவனேஸ்வரி எங்கே வேறு நபரை தேடி சென்று விடுவாளோ என்று பிரவீனுக்கு சந்தேகம் இருந்து கொண்டே இருந்துள்ளது. இதனால் அண்மையில் ஒரு நாள் போதையில் இருந்த அவன், தனது முகத்தில் விழுந்து கடுமையாக கடித்து குதறினான் பிரவீன் என்று வாக்கு மூலம் அளித்திருக்கிறார் புவனேஸ்வரி.

தனது சைக்கோ காதலனின் தொல்லை தாங்காமல் , கடந்த வாரம் தனது முதல் கணவரையும் குழந்தைகளையும் தேடிச் சென்றுள்ளார் புவனேஸ்வரி ஆனால் அவரது முதல் கணவர் குழந்தைகளை சந்திக்க விடவில்லை. இதனால் ஏமாற்றத்துடன் திரும்பி உள்ளார். இந்த நிலையில் மீண்டும் தனது குழந்தைகளை பார்க்க செல்வதாக கூறி புவனேஸ்வரி புறப்பட்டு சென்றுள்ளார். தனது காதலி மற்றவர்களின் பார்ப்பதற்கு அழகாக தெரிந்து விடக்கூடாது என்பதற்காக அவரது கம்மல், மூக்குத்தி, வளையல் கொலுசு, கழுத்து செயின் என அனைத்தையும் கழட்டி வாங்கிக் கொண்டு அனுப்பி உள்ளான்.

இருந்தாலும் அவர் எங்கே செல்கிறார் ? என்பதை பார்க்க விருவு பூனை போல புவனேஸ்வரியை பின் தொடர்ந்துள்ளான் பிரவீன். ராசிபுரம் பேருந்து நிலையத்தில் வைத்து இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது புவனேஸ்வரியை அடித்து உதைத்த பிரவீன் முகத்தை அசிங்கப்படுத்துவதாக கூறி கையில் உள்ள நகத்தால் பிராண்டியதாகவும், உதட்டை கடித்து வைத்ததாகவும் கூறப்படுகின்றது.

இதனால் வாயை பொத்திக் கொண்டு புவனேஸ்வரி கதறியதால் பிரவீனை மடக்கிப்பிடித்த மக்கள், அவனை நையப்புடைத்தனர். சட்டையை பிடித்து இழுத்துச்சென்று போலீசுக்கு தகவல் கொடுத்தனர். ஒரே ஒரு போலீஸ்காரர் மட்டும் வந்து அவனை தனது இரு சக்கர வாகனத்தில் ஏற்றி காவல் நிலையம் அழைத்துச்சென்றார். தப்பி விடக்கூடாது என்று பைக்கின் பின் பக்கம் பப்ளிக் ஒருவர் அமர்ந்து சென்றார்

வாயிலும், முகத்திலும் காயங்களுடன் புவனேஸ்வரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தனக்கு நேர்ந்த கொடுமைகளை எல்லாம் விவரித்தார்

காவல் நிலையம் அழைத்துச்செல்லப்பட்ட பிரவீன் மித மிஞ்சிய போதையில் இருந்ததால் போலீசார் அவரை காவல் நிலையத்தில் வைக்காமல், போதை தெளிந்த பின்னர் வரவும் எனக்கூறி அனுப்பி வைத்ததாக கூறப்படுகின்றது. வெளியே போன பிரவீன் போலீசுக்கு தண்ணி காட்டி விட்டு தப்பிச்சென்று விட்டதாக கூறப்படுகின்றது.

இதற்கிடையே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட புவனேஸ்வரியையும் காணவில்லை, அவர் தனது ஊரை மாற்றி கொடுத்திருப்பதால் , தற்போது எங்கு சென்றார் என்பது தெரியாமல் போலீசார் குழம்பும் நிலைக்கு தள்ளப்பட்டனர். சம்பந்தப்பட்ட பெண் புகார் அளித்தால் மட்டுமே பிரவீனை கைது செய்ய இயலும் என்பதால் அவரை தேடினர்.

இதற்கிடையே அவரது செல்போனுக்கு தொடர்புகொண்டு புகார் அளிக்க வரும்படி போலீசார் அழைத்ததாகவும், தனது முதல் கணவர் தன்னை ஏற்றுக் கொள்ள மறுத்து குழந்தைகளையும் தன்னிடம் காண்பிக்கவில்லை என்ற புவனேஸ்வரி, இவனையும் விட்டால் தெருவில் தான் நிற்க வேண்டும் அதனால் புகார் அளிக்க விரும்பவில்லை என்று அந்த பெண் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

பட்டபகலில் பலபேர் முன்னிலையில் ஒருவன் ஒரு பெண்ணை கடுமையாக அடித்தும், கடித்தும் காயப்படுத்துகிறான் அவனை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைக்கின்றனர். சைக்கோ போல நடந்து கொண்ட அந்த இளைஞனை போதையில் இருப்பதாக காரணம் காட்டி போலீசார் விடுவித்ததாக கூறுவது, என்ன மாதிரியான நடவடிக்கை ? என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

அதே நேரத்தில் புகார் அளித்தால் மட்டுமே குடும்ப விவகாரங்களில் போலீசாரால் தலையிட முடியும் என்று சட்டப்பிரிவை சுட்டிக்காட்டும் போலீசார் பிரவீனை பிடித்து விசாரிபோம் என்கின்றனர். போதையில் செய்தாலும், போகிற போக்கில் செய்தாலும், குற்றம் கேடு தரும்..!

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

பாய் ஃபிரண்ட் பாவச் செயல்.... கேர்ள் பிரண்ட் Just miss..! AI சேட்டை.. போலீஸ் வேட்டை..!

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies