BIG STORIES
பெட் ரூமில் இறந்து கிடந்த மகன்கள்.. மாடியிலிருந்து குதித்த தாய்..! கருணையற்ற கணவனால் குடும்பமே பலி
Apr 20, 2025 04:18 AM
685
பெட் ரூமில் இறந்து கிடந்த மகன்கள்.. மாடியிலிருந்து குதித்த தாய்..!
ஹைதராபாத் ஜிடி மெட்லா பகுதியில் உள்ள பாலாஜி லே அவுட் சகஸ்ர மகேஷ் ஹயிட்ஸ் என்ற அடுக்குமாடி குடியிருப்பில் தேஜா என்ற 32 வயதான பெண் திருமணமாகி கணவர் மற்றும் 2 மகன்களோடு வாழ்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில் தேஜாவின் கணவர் வேலைக்கு சென்ற நிலையில்,அடுக்குமாடி குடியிருப்பின் 6வது மாடியில் இருந்து தேஜா கீழே குதித்துள்ளார். அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஜிடிமெட்லா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து தேஜாவை அருகில் உள்ள மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.
பின்னர் தேஜாவின் வீட்டில் சோதனை செய்ய படுக்கையறைக்கு சென்றபோது தேஜாவின் 11 மற்றும் 8 வயதுடைய 2 மகன்களும் இளநீர் வெட்ட பயன்படுத்தப்படும் கொடுவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டு இறந்தது கிடந்தது தெரியவந்துள்ளது.
உயிரிழந்த 2 சிறுவர்களின் சடலத்தையும் போலீசார் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் தேஜாவும் மருத்துவமனையில் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து ஜிடிமெட்லா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
அப்போது தேஜா எழுதிய 6 பக்கம் கொண்ட கடிதம் ஒன்றை போலீசார் படுக்கையறையில் கண்டெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த கடிதத்தில், தேஜா , கண் பார்வை குறைபாட்டால் அவதி பட்டு வந்துள்ளார். இதனால் தேஜாவின் 2 மகன்களுக்கும் கண்பார்வை குறைவு ஏற்பட்டுள்ளது.
4 மணி நேரத்திற்கு ஒருமுறை அவர்கள் கண்களுக்கு சொட்டு மருந்து போட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அடிக்கடி மருந்து வாங்கும் விஷயத்தில் தேஜாவிற்கும் அவரது கணவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது.
இதனால் விரக்தியடைந்த தேஜா, நாங்கள் மூவரும் செத்துப் போகிறோம் என கோபமாக கூறியுள்ளார். அதற்கு கணவரோ அதை முதலில் செய்யுங்கள் என கூறியதாக சொல்லப்படுகிறது. இதனால் கடும் மனஉளைச்சலுக்கு ஆளான தேஜா, கணவன் வேலைக்கு சென்ற நேரத்தில் தனது 2 மகன்களையும் இளநீர் வெட்டும் கொடுவாளால் வெட்டிக் கொலை செய்துள்ளார். பின்னர் தானும் உயிரை மாய்த்துக் கொள்ள 6 வது மாடியில் இருந்து குதித்ததும் தெரியவந்துள்ளது.
ஆசை ஆசையாக வளர்த்த 2 மகன்களையும் கொலை செய்துவிட்டு தாயும் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu