BIG STORIES
ஒரு அக்லி லவ்.. பேட் மர்டர் பிளான்... குட் கூலிப்படை..! சினிமாவை மிஞ்சும் டுவிஸ்ட்
Apr 20, 2025 04:12 AM
239
ஒரு அக்லி லவ்.. பேட் மர்டர் பிளான்... குட் கூலிப்படை..! சினிமாவை மிஞ்சும் டுவிஸ்ட்
பிறன் மனை நோக்குதல்.. கள்ளக்காதல்... திருட்டு காதல்... ரகசிய தொடர்பு.. தவறான தொடர்பு.. திருமணம் கடந்த உறவு.. திருமணம் தாண்டிய காதல்.. என்று திருமணமான ஒரு ஆணும் பெண்ணும் வேறு நபர்களுடன் செய்கின்ற காதல் சேட்டைகளுக்கு விதவிதமாக பெயர்களை சூட்டினாலும் அந்த துஷ்ட காதலுக்காக இணையரில் ஒருவரை மற்றொருவர் கொலை செய்யும் அளவுக்கு செல்வதெல்லாம் கொடுமையான குற்றம்... அதிலும் கணவன் சம்பாதித்த பணத்தை லட்சக்கணக்கில் திருடி கூலிப்படைக்கு கொடுத்து அவரையே கொலை செய்ய தூண்டுவதெல்லாம் நினைத்துக்கூட பார்க்க இயலாத திகில் கிரைம்..!
செல்லம் போல இரு ஆண் குழந்தைகள் இருக்கும் நிலையில் ஒரு பெண் 5 லட்சம் ரூபாயை அள்ளிக்கொடுத்து தனது கணவரை கொல்ல கூலிப்படையை ஏவியுள்ளார்.. கூலிப்படையையும் அவரை கட்டித்தூக்கிச்சென்றுள்ளது.. இறுதியில் நடந்த டுவிஸ்ட் என்ன .. என்பது குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு...
வீட்டு வாசலில் நடந்தது என்ன ? என்று பதற்றத்துடன் விவரித்துக் கொண்டிருக்கும் இவர் தான் தொழில் அதிபர் தோட்டா தர்மா ராவ்.. இவருக்கு அப்படி என்னதான் நடந்தது.. எப்படி கூலிப்ப்டையினரிடம் இருந்து தப்பி வந்தார்.. அவர் கூறும் தகவல்கள் ஒவ்வொன்றும் புஷ்பா படத்தை மிஞ்சும் ஆக் ஷன் டுவிஸ்ட்டுக்கள்..!
தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம், முடிகொண்டா மண்டலத்தில் உள்ள சுவர்ணபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தொழிலதிபரான தோட்டா தர்மாராவ். இவரை கடந்த மார்ச் மாதம் 12ந்தேதி மர்ம கும்பல் ஒன்று காரில் கடத்தி சென்றது. கொலை செய்ய தயாரான அந்த கும்பல் யாருக்கோ செல்போனில் தொடர்பு கொண்டு விட்டு, தனது வங்கி கணக்கில் இருந்து 1 லட்சத்துக்கு 50 ஆயிரம் ரூபாய் பணத்தையும் கழுத்தில் அணிந்திருந்த தங்கச்சங்கிலியையும் பறித்துக் கொண்டு விரட்டி உள்ளனர்
கூலிப்படையின் பிடியிலிருந்து உய்ர் தப்பிய தர்மா, வீட்டிற்கு வந்ததும் அவரது மனைவி குழந்தைகள் அவரை கட்டிப்பிடித்து ஆனந்த கண்ணீர் விட்டதாக கூறப்படுகின்றது. இதனால் தன்னை கடத்தி கொலை செய்ய பணம் கொடுத்து கூலிப்படையை ஏவியது யார் ? என்று தெரியாமல் தினந்தோறும் குழப்ப மன நிலையில் தவித்து வந்தார் தர்மா.
தனது வழக்கறிஞர்களில் ஆலோசனையில் பேரில் கடந்த 11ம் தேதி கம்மம் போலீசில் தன்னை கூலிப்படையினர் கடத்திச்சென்று இது குறித்து புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். நகர காவல் உதவி ஆணையர் ரமண மூர்த்தியின் மேற்பார்வையில் விசாரணை நடத்தப்பட்டது.
அண்மையில் தனது மனைவியுடன் தவறான தொடர்பில் இருந்த ராம ஆஞ்சநேயுலு என்பவனை கண்டித்ததாக தர்மா தெரிவித்த நிலையில் கானாபுரம் ஹவேலி இன்ஸ்பெக்டர் பானு பிரகாஷ் , சுவர்ணபுரம் கிராமத்தைச் சேர்ந்த ராம அஞ்சநேயுலுவின் செல்போன் நம்பரை வைத்து கம்மம் நகரில் உள்ள செருகுரி மாம்பழத் தோட்டத்தில் பதுங்கி இருந்த ராமாஞ்சநேயுலுவையும், கூலிப்ப்டையை செர்ர்ந்த வெங்கட நாராயணா, விஜய் குமார், வெமுலா கிருஷ்ணா, புரி விஜய் ஆகியோரையும் சுற்றிவளைத்தனர். அவர்களிடம் இருந்து தர்மாவை கடத்தி மிரட்டியதற்கு பயன்படுத்திய இரண்டு கத்திகள், ஒரு துப்பாக்கி, 90 ஆயிரம் ரூபாய் பணம், ஒரு கார், 5 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் தோட்டா தர்மாராவின் மனைவி போட்டுக் கொடுத்த பிளான்படி தான் இந்த கொலைகார கூலிப்ப்டை அவரை கடத்தியது அம்பலமானது.
தோட்டா தர்மாராவுக்கு, அழகான மனைவி அன்பாக இரு ஆண் குழந்தைகள். மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த இவர்களது வாழ்க்கையில் கரு நாகமாக புகுந்தான் இவரிடம் பொக்லைன் ஓட்டுனராக வேலை பார்த்து வந்த ராம ஆஞ்சனேயலு . வேலை தொடர்பாக தோட்டா தர்மராவை பார்க்க வந்த இடத்தில் பொக்லைன் ஓட்டுனர் ராம ஆஞ்சனேயலுவுக்கு, தோட்டா தர்மராவின் மனைவியுடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இளைஞரான ராம ஆஞ்ச நேயலுவுக்காக எதையும் செய்யும் அளவுக்கு அவர் காதலில் சொக்கிக்கிடந்ததாக கூறப்படுகின்றது. ஒரு நாள் மனைவியும், ராம ஆஞ்சனேயலுவும் வீட்டில் தனிமையில் இருப்பதை கண்ட தோட்டா தர்மாராவ், அந்த இளைஞரை அடித்து விரட்டியதோடு, தனது இரு குழந்தைகளின் எதிர்காலம் கருதி மனைவியை கண்டித்து, திருந்தி வாழுமாறு எச்சரித்துள்ளார்.
இருந்தாலும் கட்டுப்பட மறுத்த அவரது மனைவி , தனது கையோடு இருக்கும் குட்டி சாத்தானான ஸ்மார்ட்போனின் உதவியுடன் ஆசைகாதலனுடன் பேசுவது, அவனை வீட்டுக்கு வரவழைப்பது என்று காதல் லீலையை தொடர்ந்ததால் கணவன், மனைவிக்கு இடையே அவ்வப்போது சண்டை ஏற்பட்டு வந்தது. தனது துஷ்ட காதலனை சந்திக்க தடையாக இருக்கும் கணவரை ஒரே அடியாக தீர்த்துக் கட்ட முடிவு செய்த மனைவி, அதனை தனது காதலன் ராமாஞ்சனேயலுவிடம் தெரிவித்து கொலை திட்டத்தை நிறைவேற்ற கூறி உள்ளார்.
இதனையடுத்து ராமாஞ்சனேயலு பருகுடேம் கிராமத்தைச் சேர்ந்த தண்ட வெங்கட நாராயணாவை என்கிற வெங்கட்டை தொடர்பு கொண்டு கூலிப்படை வேண்டும் என்று கேட்டு உள்ளான். அவர் மூலம் வெங்கட் தனது நண்பரான ரவுடி விஜயகுமாரை அறிமுகப்படுத்தி உள்ளான். கொலைக்கு 20 லட்சம் ரூபாய் கூலி தருவதாக பேசிய தர்மாவின் மனைவி முன் தவனையாக 5 லட்சம் ரூபாயை தனது காதலன் ராமாஞ்சனேயலு மூலம் கூலிப்படைக்கு அள்ளிக் கொடுத்ததாக கூறப்படுகின்றது. கொலை செய்வதற்கு முன்பாக மீதம் உள்ள பணத்தை கொடுத்து விட வேண்டும் என்றும் அவர்கள் வாய்மொழியாக ஒப்பந்தம் போட்டுள்ளனர்.
இதனையடுத்து அந்த கொலைகார கூலிப்படை கும்பல், மார்ச் 12 ஆம் தேதி கம்மம் நகரின் தன்சலபுரம் அருகே வைத்து தொழில் அதிபர் தர்மாவை கடத்தி கொலை செய்வதற்காக கண்ணை கட்டித்துக்கிச்சென்றுள்ளது. தர்மாவின் கழுத்தில் கத்தியை வைத்து அறுப்பதற்கு தயாரான நிலையில் அந்த கும்பலுக்கு திடீர் சந்தேகம் எழுந்துள்ளது.
ஒரு வேளை கொலை செய்த பின்னர் மீதம் உள்ள பணத்தை தராமல் ஏமாற்றிவிட்டால் என்ன செய்வது ? என்று எண்ணிய ரவுடி விஜய்குமார் கொலை செய்வதற்கு முன்பாக, மீதமுள்ள பணத்தை கேட்டு ராம ஆஞ்சநேயலுவை தொடர்பு கொண்டுள்ளான். ராம ஆஞ்சனேயலு பதில் ஏதும் சொல்லாமல் போனை கட் செய்ததோடு, சுத்தமாக சுவிட்ச் ஆப் செய்து உள்ளான். கொலை செய்தால் வழக்கு செலவுக்கு கூட 5 லட்சம் ரூபாய் பத்தாது என்பதால் உஷாரான கூலிப்படையினர் பிளான் “பி” யை செயல்படுத்தியதாக கூறப்படுகின்றது.
தாங்கள் கடத்தி வந்திருக்கும் நபர் செல்வந்தர் என்பதால் அவரிடமே பணம் பறிக்கலாம் என்று ரூட்டை மாற்றினர். அதன் படி, உன்னை கொலை செய்ய 20 லட்சம் கொடுத்திருக்கிறார்கள் உன்னை கொல்லாமல் விட்டால் எவ்வளவு பணம் தருவாய் என கேட்ட கூலிப்ப்டை, அவரை மிரட்டி 1லட்சத்து 50,000 ரூபாய் பணத்தை ஜீபே மூலம் பெற்றுக் கொண்ட தோடு மேலும் அவரிடம் இருந்த தங்கச் செயினை பறித்து கொண்டு தர்மாவை விரட்டி விட்டதாக கூலிப்படையினர் போலீசில் வாக்குமூலம் அளித்தனர்.
வில்லங்க காதலுக்கு இடையூறாக இருந்ததால் மனைவி காதலனுடன் சேர்ந்து கூலிப்படைக்கு பணம் கொடுத்து ஏவி கணவனை கொலை செய்ய திட்டமிட்ட நிலையில் அவரது மனைவியை போலீசார் இதுவரை கைது செய்யவில்லை. அவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பொதுவாக காதல் சுகமானது என்பார்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கு...! ஆனால் கணவரையும் , குழந்தைகளையும் தவிக்க விட்டு தறிகெட்டு செல்லும் இந்த காதல் பொல்லாதது. கணவனை கொலை செய்யும் அளவுக்கு ஒரு பெண் காதல் மயக்கத்தில் இருக்கிறாள் என்றால் அவளது மன நிலை எப்படிப்பட்டது..? ஆணோ அல்லது பெண்ணோ குடும்பத்தை மறந்து, மனதை கட்டுப்படுத்த இயலாமல் இஷ்டத்துக்கு அலைவது ஆபத்தை மட்டுமல்ல அசிங்கத்தையும் கொண்டு வரும்... குற்றம் கேடு தரும்..!
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu