RECENT NEWS

பாய் ஃபிரண்ட் பாவச் செயல்.... கேர்ள் பிரண்ட் Just miss..! AI சேட்டை.. போலீஸ் வேட்டை..!

பாய் ஃபிரண்ட் பாவச் செயல்.... கேர்ள் பிரண்ட் Just miss..! AI சேட்டை.. போலீஸ் வேட்டை..!

May 23, 2025

பாய் ஃபிரண்ட் பாவச் செயல்.... கேர்ள் பிரண்ட் Just miss..! AI சேட்டை.. போலீஸ் வேட்டை..!

பாய் ஃபிரண்ட் பாவச் செயல்.... கேர்ள் பிரண்ட் Just miss..! AI சேட்டை.. போலீஸ் வேட்டை..!

May 23, 2025

முகப்பு

கோட்டக் மஹிந்திரா வங்கியில் வீட்டுக்கடன் வாங்குறீங்களா.. உங்க பணம் உஷார் மக்களே..! வங்கிக்கு ரூ.20 லட்சம் அபராதம் ஏன் ?

Apr 20, 2025 02:38 AM

940

கோட்டக் மஹிந்திரா வங்கியில் வீட்டுக்கடன் வாங்குறீங்களா.. உங்க பணம் உஷார் மக்களே..! வங்கிக்கு ரூ.20 லட்சம் அபராதம் ஏன் ?

கோட்டக் மஹிந்திரா வங்கியில் வீட்டுக்கடன் வாங்குறீங்களா.. உங்க பணம் உஷார் மக்களே..!

கோட்டக் மஹிந்திரா வங்கி கூடுதலாக பணம் வசூலித்ததாக சென்னை தொழில் அதிபர் தொடர்ந்த வழக்கில், அந்த வங்கிக்கு எழும்பூர் நீதிமன்றம் 20 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. அதில் 10 லட்சம் ரூபாயை தொழில் அதிபருக்கு இழப்பீடாக வழங்க அறிவுறுத்தி உள்ளது..

சென்னை ஈக்காட்டுத்தாங்கலைச் சேர்ந்த தொழிலதிபர் செல்வராஜ். இவர் கோட்டக் மஹிந்திரா வங்கியில் கடந்த 2006-ஆம் ஆண்டு தனது வீட்டை அடமானம் வைத்து ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் கடன் வாங்கி உள்ளார். பின்னர் 2007 -ஆம் ஆண்டு தனது வீட்டின் மீதான கடனை அடைக்க திட்டமிட்ட செல்வராஜ், அதன்படி வங்கி அதிகாரிகளை அணுகி உள்ளார். அதுவரை மாதத் தவணையில் 23 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலுத்திய நிலையில், 3 சதவீத வட்டியுடன் ஒரு கோடியே 70 லட்சம் ரூபாயை வங்கி அதிகாரிகள் வசூலித்துள்ளனர்.

பின்னர் 2011 -ம் ஆண்டு தொழிலதிபர் செல்வராஜின் ஆடிட்டர் கணக்குப் பார்த்ததில், வங்கி தரப்பில் 14 லட்சம் ரூபாய் செல்வராஜிடம் கூடுதலாக வசூலித்திருப்பதை கண்டுபிடித்துள்ளார். அதன்பிறகு வங்கியை அணுகி, வங்கி கடனை செட்டில் செய்ததற்கான விபரங்களை கேட்டுள்ளனர். (Statement account & Break up of the money collected) வங்கி தரப்பில் அதற்கான விபரங்களை தர மறுத்ததால் தொழிலதிபர் செல்வராஜ் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அவரிடம் எந்தவிதமான கூடுதல் தொகையையும் வசூலிக்கவில்லை என வங்கி தரப்பில் ஆவணங்களை தாக்கல் செய்துள்ளனர். இதுகுறித்து வங்கி அதிகாரிகளிடம் சமரசமாக பேசி பிரச்சினையை தீர்த்துக்கொள்ள உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அப்படி சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபடும்போது, தவறை ஒப்புக்கொண்ட வங்கி அதிகாரிகள், வங்கியின் தரப்பில் இருந்து செல்வராஜின் வங்கி கணக்கிற்கு ஆர்டிஜிஎஸ் பரிவர்த்தனை முறையில் 14 லட்சத்து 30 ஆயிரம் ரூபாயை அனுப்பி உள்ளனர்.

இந்த தகவலை செல்வராஜ் நீதிமன்றத்தில் தெரிவித்த நிலையில், பொய்யான தகவலை அளித்து விட்டு இழப்பீடு வழங்கிய குற்றத்திற்காக கோட்டக் மஹிந்திரா வங்கியின் சட்டப்பிரிவு அதிகாரி கார்த்திகேயனுக்கு மூன்று மாத சிறை தண்டனையுடன் வங்கிக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

இந்த மோசடி தொடர்பாக சென்னை மத்திய குற்றப் பிரிவிலும் தொழிலதிபர் செல்வராஜ் புகார் அளித்தார். கடந்த 2018 ஆம் ஆண்டு சென்னை மத்திய குற்றப்பிரிவு வங்கி மோசடி தடுப்பு பிரிவு போலீசார் கோட்டக் மஹிந்திரா வங்கி மீது வழக்குப்பதிவு செய்தனர்.

கோட்டக் மஹிந்திரா வங்கியின் கந்தன்சாவடியில் உள்ள மண்டல அலுவலகத்திலும் மும்பையில் உள்ள தலைமை அலுவலகத்திலும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தியதினர். இதில் வங்கி கடனை ஒட்டுமொத்தமாக முன்கூட்டியே செலுத்திய 300 வாடிக்கையாளர்களிடம் கூடுதல் தொகையை வங்கி நிர்வாகம் வசூலித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கூடுதல் தொகையை வசூலித்ததற்கான ஆவணங்களை கைப்பற்றி மத்திய குற்றப்பிரிவு போலீசார் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.

வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கும் நகலில் அவர்களிடம் பெரும் தொகையை மட்டும் குறிப்பிட்டு விட்டு, வங்கியின் கணக்கு நகலில் கூடுதல் தொகையை வங்கிக்கான லாபம் என (Profit) காண்பித்து, அந்த தொகையை வங்கியின் பொதுக்கணக்கிற்கு மாற்றியது தெரியவந்தது.

வழக்கை விசாரித்த சென்னை எழும்பூர் நீதிமன்றம், வங்கியின் செயல்பாடு சட்டவிரோதமானத என்றும், வங்கி தான் இதில் குற்றவாளி எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளது. கோடக் மகேந்திரா வங்கி 20 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும், அதில் பத்து லட்சம் ரூபாயை தொழிலதிபர் செல்வராஜ் மனஉளைச்சலை ஏற்படுத்தியதற்காக வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே வங்கிகளில் கடனை முழுமையாக செலுத்துபவர்கள் உஷாராக இருக்க வேண்டும் என்று தொழிலதிபர் செல்வராஜ் கேட்டுக் கொண்டார்

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

பாய் ஃபிரண்ட் பாவச் செயல்.... கேர்ள் பிரண்ட் Just miss..! AI சேட்டை.. போலீஸ் வேட்டை..!

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies