முகப்பு
தொடர் விடுமுறையால் தென் மாவட்டங்களுக்குப் படையெடுத்த மக்கள்
Apr 13, 2025 05:11 AM
79
பேருந்துகளில் இடம் கிடைக்காமல் முந்தியடித்து ஓட்டம்-படிக்கட்டிலும் பயணம்
சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பேருந்தில் இடம் பிடிக்க பயணிகள் முண்டியடித்ததுடன், படிக்கட்டில் தொங்கியபடி பயணித்தனர்.
வார விடுமுறை மற்றும் தமிழ் புத்தாண்டு காரணமாக சென்னையில் இருந்து தென்மாவட்டங்களை நோக்கி செல்லக்கூடிய பேருந்துகளில் கூட்ட நெரிசல் காணப்பட்டது.
பேருந்து நிலையத்திற்குள் கதவுகளை மூடியபடி வந்த பேருந்துகளில் கதவைத் திறக்க கோரி நடத்துனரிடம் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.