முகப்பு
"யாரும் பெரியவங்க இல்ல"! தோனியை சீண்டிய விஷ்ணு விஷால் இவ்வளவு காட்டமா?
Apr 12, 2025 10:54 AM
131
தோனியை சீண்டிய விஷ்ணு விஷால் இவ்வளவு காட்டமா?
சென்னை சூப்பர் சிங்ஸ் அணியின் கேப்டன் தோனியை, கிரிக்கெட் வீரரும், நடிகருமான விஷ்ணு விஷால் மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 25-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.
முதலில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 103 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஷிவம் துபே 31 ரன்களும், விஜய் சங்கர் 29 ரன்களையும் எடுத்தனர்.
அதைத்தொடர்ந்து அணி களம் இறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 10.1 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 107 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இது சிஎஸ்கே ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. சிஎஸ்கே விளையாடியதை சில ரசிகர்கள் ஸ்போடிவாக எடுத்துக்கொண்டாலும், சிலர் சமூக வலைதளங்களில் விமர்சனங்களை அள்ளி வீசி வருகின்றனர். குறிப்பாக கிரிக்கெட் வீரரும், நடிகருமான விஷ்ணு விஷால், தனது எக்ஸ் தள பக்கத்தில் கடுமையான விமர்சனங்களை பதிவிட்டிருக்கிறார். அதில், ”இதை பற்றி பேசக்கூடாது.. பேசவே கூடாது என்று இருந்தேன்.. ஒரு கிரிக்கெட்டராக நான் விரைவில் ஒரு முடிவுக்கு வர விரும்பவில்லை. ஆனால் இது கொடுமையான விஷயம். ஏன் இவ்வளவு லோ ஆர்டரில் ஆட வேண்டும்?. எந்த ஒரு விளையாட்டாக இருந்தாலும் அதில் தோல்வியை தவிர்க்கவே ஆட வேண்டும். ஆனால் இங்கே அப்படி இல்லை. இது எதோ சர்க்கசைப் பார்க்க சென்றது போல இருக்கிறது என சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை விமர்ச்சித்த நடிகர் விஷ்ணு, ”விளையாட்டை விட எந்த ஒரு தனி மனிதனும் பெரியவனல்ல”.. என அணியின் கேப்டன் தோனியையும் மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளார்.
சிஎஸ்கே அணி இத்தாண்டு ஐபிஎல் சீசனில் வரிசையாக தோல்விகளை சந்தித்து வருகிறது. 6 போட்டிகளில் விளையாடிய சிஎஸ்கே அணி முதல் போட்டியை தவிர 5 போட்டிகளில் தோல்வி அடைந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu