RECENT NEWS

முகமூடிக் கும்பலால் பாஜக பிரமுகர் வெட்டிக் கொலை

முகமூடிக் கும்பலால் பாஜக பிரமுகர் வெட்டிக் கொலை

Apr 27, 2025

முகமூடிக் கும்பலால் பாஜக பிரமுகர் வெட்டிக் கொலை

முகமூடிக் கும்பலால் பாஜக பிரமுகர் வெட்டிக் கொலை

Apr 27, 2025

இந்தியா

மரம் வெட்டும் எந்திரத்தால் துண்டாக்கப்பட்ட பெண் எஸ்.ஐ.! காவல் அதிகாரி சிக்கியது எப்படி ?

Apr 10, 2025 01:55 AM

1023

மரம் வெட்டும் எந்திரத்தால் துண்டாக்கப்பட்ட பெண் எஸ்.ஐ.! காவல் அதிகாரி சிக்கியது எப்படி ?

மரம் வெட்டும் எந்திரத்தால் துண்டாக்கப்பட்ட பெண் எஸ்.ஐ.! காவல் அதிகாரி சிக்கியது எப்படி ?

சுமார் 9 ஆண்டுகளுக்கு முன்பு, பெண் காவல்துறை அதிகாரி துண்டு துண்டாக வெட்டி படுகொலைச் செய்யப்பட்ட சம்பவம், மகாராஷ்டிரா மாநிலத்தையே உலுக்கியது.

ஒரு பெண் காவல்துறை அதிகாரியே காணாமல் போனதும், மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டு கிடந்ததும், குற்றவாளி யார்? எந்த மாதிரியான ஆயுதங்களால் படுகொலை செய்யப்பட்டார்? என்கிற ஆதாரங்கள் ஆரம்பத்தில் கிடைக்காததால், பல்வேறு கேள்விகளும் சர்ச்சைகளும் எழுந்தன.

படுகொலை செய்யப்பட்டவர் ஒரு பெண் காவல்துறை அதிகாரி, கொலைக்குற்றம் சாட்டப்பட்டவரும் காவல்துறையைச் சேர்ந்தவர், இந்த வழக்கை விசாரணை செய்ததும் ஒரு பெண் காவல்துறை அதிகாரி என்பதால் இது ஒரு தனித்துவம் வாய்ந்த வழக்காக பார்க்கப்பட்டது.

மேலும், அந்த பெண் காவல் அதிகாரியின் கணவர் மற்றும் குடும்பத்தினரின் தொடர் போராட்டங்கள், அரசு வழக்கறிஞர்கள் வழக்கைக் கொண்டு சென்ற விதம் இன்னும் பரபரப்பாக்கியது.

என்ன நடந்தது? மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பையின் ரோடுபோலி பகுதியில் கணவரை பிரிந்து வசித்து வந்த பெண் காவல் அதிகாரி அஷ்வினி பித்ரே-கோரே என்பவர், 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் தேதி காணாமல் போனார்.

அஷ்வினி பித்ரே-கோரே காணாமல் போவதற்கு காரணம் மூத்தக் காவல்துறை அதிகாரி அபய குருந்த்கர் எனவும், அவரால் தான் தனது மனைவி தன்னையும் குடும்பத்தையும் பிரிந்து வாழ்ந்துவந்ததாகவும், காவல்துறையினர் இந்த வழக்கை சரியாக விசாரணையை நடத்தவில்லை என அவரது கணவரும் குடும்பத்தினரும் கடுமையாக குற்றம் சாட்டினர்.

மகாராஷ்டிரா கோலாப்பூர் மாவட்ட ஆல்டே கிராமத்தைச் சேர்ந்தவர்தான் அஷ்வினி பித்ரே. அவர், 2005 ஆம் ஆண்டு ராஜு கோரே என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு முன்பே, அஷ்வினி 2000 ஆம் ஆண்டு முதல், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகிக்கொண்டிருந்துள்ளார். இந்தநிலையில்தான், திருமணமான ஒரு வருடத்திற்குள்ளேயே, அஷ்வினி போட்டித் தேர்வில் தேர்ச்சியும் பெற்று, காவல்துறை உதவி ஆய்வாளர் ஆனார்.

ஆரம்பத்தில் புனேவிலும் பிறகு சாங்கிலியிலும் உதவி ஆய்வாளராக பணியாற்றினார். இந்த காலக்கட்டங்களில் அதே காவல்நிலையத்தில் அபய்குமாரும் பணிபுரிந்துள்ளார். இருவருக்கும் நட்பு ஏற்பட்டதாக அஷ்வினியின் கணவர் குற்றம்சாட்டினார்.

இதனைத்தொடர்ந்து, 2013 ஆம் ஆண்டு அஷ்வினி பதவி உயர்வு பெற்று, ரத்னகிரிக்கு பணிமாறுதல் செய்யப்பட்டார்.

அப்போது, அஷ்வினியை சந்திக்க அடிக்கடி போலீஸ் உயரதிகாரியான அபய் குருந்த்கர் வந்து சென்றுள்ளார், என கூறப்படுகிறது.

இந்தநிலையில்தான், 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் தேதி அஷ்வினி காணாமல் போனார்.
சிலநாட்களிலேயே, துண்டு துண்டாக வெட்டப்பட்டு படுகொலை செய்து கிடந்தார். இதனால், அஷ்வினி காணாமல் போனதற்கு காரணம் அபய் குருந்த்கர் என குற்றம் சாட்டினார்கள், அஷ்வினியின் கணவரும் அவரது குடும்பத்தாரும்!

ஆனால், கணவரே ஏன் சந்தேகப்பட்டு கொலை செய்துவிட்டு, தன் மீது பழியைப்போடக்கூடாது? என்கிற ரீதியில் திசைதிருப்பியது, அபய் குருந்த்கர் தரப்பு.

ஆனால், எத்தனை நாட்கள் இப்படி தப்பிக்கமுடியும்? அபய் குருந்த்கர் மற்றும் சிறு வயது நண்பர் மகேஷ் ஃபல்ஷிகர் உட்பட மூன்று பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்கள்.

அதுவும், அஷ்வினி படுகொலை செய்யப்பட்ட பிறகு, மரம் வெட்ட பயன்படுத்தப்படும் எந்திரத்தை வைத்து அவரது உடலை துண்டு துண்டுகளாக வெட்டி, ஓடையில் வீசியதாகவும் அதிர்ச்சி வாக்குமூலம் வெளியானது. எப்படி நடந்தது இந்த கொலை? குற்றவாளிகள் கைது செய்யப்பட்டது எப்படி? என்பது குறித்தும் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

கொலை செய்யப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, உதவி காவல் ஆய்வாளர் அஷ்வினி, அபய் குருந்த்கரை, தானே நகரில் சந்தித்துள்ளார்.

அன்று மாலை, தானே ரயில் நிலையத்திற்கு எதிரே உள்ள ஒரு ஹோட்டலில் இருவரும் ஒன்றாக அமர்ந்து தேநீர் அருந்தியுள்ளனர்.

அதற்குப் பிறகு, இருவரும் ஒரே காரில் அபய் குருந்த்கரின் வீட்டிற்குச் சென்றுள்ளனர். அஷ்வினி மற்றும் அபய் குருந்த்கர் இருவரின் MTNL மொபைல் சிம்மின் லொகேஷனைப் பயன்படுத்தி காவல்துறை இதனை கண்டறிந்தது.

2016 ஆம் ஆண்டு ஏப்ரல் 11 ஆம் தேதி, அஷ்வினி கொலை செய்யப்பட்டுள்ளார். அடுத்த நாள், அஷ்வினியின் உடலை அப்புறப்படுத்த குந்தன் பண்டாரி குருந்த்கருக்கு உதவியுள்ளார். இது அவர்கள் அனைவரின் MTNL மொபைல் சிம்மின் லொகேஷன் மூலம் தெரியவந்துள்ளது.

மற்ற குற்றவாளிகளின் சிம் கார்டுகளும் அந்த சமயத்தில் அதே பகுதியில் செயல்பாட்டில் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. முக்கியமாக, அஷ்வினி கொலை செய்யப்பட்ட பிறகும் கூட அவர் உயிருடன் இருப்பதுபோல் காண்பிக்க, அபய் குருந்த்கர் ஒரு ப்ளான் செய்துள்ளார். அதுதான், அவர் இந்த கொலையின் முக்கியக்குற்றவாளி என்பதை காட்டிக் கொடுப்பதற்கு காரணமாகவே அமைந்தது.

அபய் குருந்த்கர் அஷ்வினியின் செல்போனிலிருந்து தொடர்ந்து அஷ்வினியின் உறவினர்களுக்கு மெசேஜ்களை அனுப்பியுள்ளார். இந்த மெசேஜ்கள்தான் அபய் குருந்த்ருக்கு அஷ்வினி கொலையில் தொடர்பு இருப்பதற்கான முதற்கட்ட ஆதாரமாக அமைந்தது.

அதாவது, அபய் குருந்த்கர், அஸ்வினியின் செல்போனிலிருந்து 'எப்படி இருக்கீங்க?' என்பதற்கு, How are you? என்ற கேள்வியைக் கேட்க, கேபிட்டல் Y ஐ மற்றும் ஸ்மால் ou வை பயன்படுத்தியுள்ளார்.

காவல்துறைக்கு இதிலிருந்துதான் துப்பு கிடைத்ததாக கூறப்படுகிறது. அதாவது, அஷ்வினி எப்போதும் 'You' என்று சொல்வதற்கு பதிலாக University, Unity க்கு பயன்படுத்து Alphabet 'U' என்ற ஒற்றை எழுத்தைதான் பயன்படுத்துவாராம். ஆனால், திடீரென மெசேஜ்களில் 'U' என்ற ஒற்றை எழுத்துக்கு பதிலாக Capital letter ல் Y என ஆரம்பித்து 'You' என இருந்தது, அஷ்வினியின் குடும்பத்தாருக்கும் விசாரணைக் காக்கிகளுக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், அஷ்வினி இந்த மெசேஜை அனுப்பவில்லை என சந்தேகம் அடைந்துள்ளனர். இதைவிட முக்கியமானது. வழக்கமான you என small letters -ல் மெசேஜ் அனுப்புவதற்கு பதிலாக 'You' அதாவது Y மட்டும் Capital letter -ல் தொடங்குவதுபோல் மெசேஜ் அனுப்பும் வழக்கம், அபய் குருந்த்கருக்கு உள்ளது, என்பது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்துதான், அபய் குருந்த்கரின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உள்பட நான்கு அல்லது ஐந்து பேரிடமிருந்து காவல்துறை இதை உறுதிப்படுத்தியதாக கூறப்படுகிறது.

மேலும், அஸ்வினியின் மொபைல் போனில் இருந்து அவரது உறவினர் அவினாஷ் கங்காபூரேவுக்கு ஒரு வாட்ஸ்அப் மெசேஜ் வந்துள்ளது.

மனநலம் சார்ந்த பிரச்னைகள் காரணமாக சிகிச்சைக்காக ஐந்து முதல் ஆறு மாதங்களுக்கு உத்தராகண்ட் அல்லது இமாச்சலப் பிரதேசத்திற்குச் செல்லப் போவதாக அஷ்வினி அனுப்புவதுபோல் குறுந்தகவலில் குறிப்பிடப்பட்டிருந்தது, அதுவும் விசாரணையைக் குழப்ப அபய் குருந்த்கர் செய்த வேலை என்பதும் தெரியவந்தது.

மேலும், கணவரை பிரிந்து வீட்டை விட்டு வெளியேறிய அஷ்வினி, தான் விரும்பிய போலீஸ் உயரதிகாரி அபய் குருந்த்கரை திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால், அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு, முற்றிய நிலையில்தான்அபய் குருந்த்கர் தன் வீட்டிலிருந்த பேட்டால் அஷ்வினியின் தலையில் அடித்து கொலை செய்ததாக, குருந்த்கரின் நண்பர் மகேஷ் ஃபல்ஷிகர் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்தநிலையில்தான், பெண் போலீஸ் அதிகாரி அஷ்வினி பித்ரே கொலை வழக்கின் இறுதித் தீர்ப்பு ஏப்ரல் 5 ஆம் தேதி வழங்கப்பட்டது. பன்வெல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி கே.ஜி. பால்தேவார் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளார்.

அஷ்வினி பித்ரே வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட அபய் குருந்த்கர் கொலைக் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு, பிரிவு 302 மற்றும் 218 இன் கீழ் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன.

மற்ற அவரது நண்பர்களான குந்தன் பண்டாரி மற்றும் மகேஷ் ஃபல்ஷிகர் ஆகியோரும் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழு 80 பேரின் சாட்சியங்களைப் பதிவு செய்து, குருந்த்கர் உட்பட மூன்று பேர் மீது கொலைக் குற்றம் சாட்டியது.

அதிகாரிகள் நிலேஷ் ரவுத் மற்றும் சங்கீதா அல்போன்சோ ஆகியோர் நடத்திய விசாரணையில், அஷ்வினி பித்ரேவைக் கொன்று அவரது உடலை துண்டு துண்டாக்கி, குருந்த்கர் அப்புறப்படுத்தியது தெரியவந்தது.

வழக்கின் இறுதி விசாரணை ஏப்ரல் 11 ஆம் தேதி பிற்பகல் அமர்வில் நடைபெற உள்ளது. இருதரப்பு வாதங்களையும் கேட்டு தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.
இந்த வழக்கில், அஷ்வினி குடும்பத்தின் 9 ஆண்டு கால போராட்டத்திற்குப் பிறகு இப்போது கொலைக்கான நீதி கிடைத்துள்ளது, என கூறப்படுகிறது. காதலித்து ஏமாற்றினாலும்... காதலியை கூறு போட்டாலும் குற்றம் கேடு தரும்..!

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

“இனி அது பேய் கிணறு” செல்போனில் தீரா பேச்சு.. மனைவி உயிரும் போச்சு..!
  சந்தேகத்தால் ஒரு கொலை

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies