RECENT NEWS

"எந்தவித முன் நிபந்தனையுமின்றி உக்ரைனுடன் பேச்சு நடத்தத் தயார்" - ரஷ்ய அதிபர்

"எந்தவித முன் நிபந்தனையுமின்றி உக்ரைனுடன் பேச்சு நடத்தத் தயார்" - ரஷ்ய அதிபர்

Apr 27, 2025

"எந்தவித முன் நிபந்தனையுமின்றி உக்ரைனுடன் பேச்சு நடத்தத் தயார்" - ரஷ்ய அதிபர்

"எந்தவித முன் நிபந்தனையுமின்றி உக்ரைனுடன் பேச்சு நடத்தத் தயார்" - ரஷ்ய அதிபர்

Apr 27, 2025

தமிழ்நாடு

ஆய்வுக்கு சென்ற அதிகாரிக்கு வந்த போன் கால்... மவுண்ட் ரோடு பிலால் வாசலில் நடந்தது என்ன? படபடத்த அதிகாரிக்கு மருத்துவமனையில் பரிசோதனை

Apr 04, 2025 01:30 AM

583

ஆய்வுக்கு சென்ற அதிகாரிக்கு வந்த போன் கால்...
மவுண்ட் ரோடு பிலால் வாசலில் நடந்தது என்ன? 
படபடத்த அதிகாரிக்கு மருத்துவமனையில் பரிசோதனை

ஆய்வுக்கு சென்ற அதிகாரிக்கு வந்த போன் கால்... மவுண்ட் ரோடு பிலால் வாசலில் நடந்தது என்ன?

சென்னை அண்ணாசாலையில் உள்ள பிரபல உணவகமான மவுண்ட்ரோடு பிலால் ஓட்டலுக்கு சோதனைக்கு வந்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஒரு போன் கால் வந்ததும் சோதனையில் ஈடுபடாமல் அங்கிருந்து புறப்பட்டனர்.

சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் இயங்கி வரும் பிலால் பிரியாணி கடை எனும் ஓட்டலில் உணவருந்திய 20க்கும் மேற்பட்டோர் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று உணவு பாதுகாப்பு அதிகாரிகளால் அந்த ஓட்டலுக்கு பூட்டு போடப்பட்டது.

இதே போல், அண்ணாசலையில் செயல்படும் மவுண்ட்ரோடு பிலால் ஓட்டலில் மட்டன் பிரியாணி, மட்டன் பாயா சாப்பிட்ட நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்டதாக கல்லூரி மாணவிகள் இருவர் இராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக தங்களுக்கு புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சதீஷ் தெரிவித்தார்.

இந்த நிலையில், கல்லூரி மாணவிகள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ராயப்பேட்டை மருத்துவமனை நிர்வாகம் ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தது. இது தொடர்பாக உணவு பாதுகாப்பு துறை அலுவலகத்திற்கு ஐஸ் ஹவுஸ் போலீசார் கடிதம் கொடுத்தனர். அடுத்த சில மணி நேரத்தில் உணவு பாதுகாப்பு துறையினர் மவுண்ட் ரோடு பிலால் ஓட்டலுக்கு விரைந்தனர்.

அப்போது முன்னதாகவே வந்து காத்திருந்த இரண்டு அதிகாரிகள், நியமன அலுவலர் சதீஷ் வந்ததும் தங்களுக்கு வந்த செல்போன் அழைப்பை அவரிடம் கொடுக்க சுமார் 5 நிமிடங்கள் காரில் இருந்தவாறே பேசிக் கொண்டிருந்தார். பின்னர் காரில் இருந்து இறங்காமல் அங்கிருந்து மூவரும் புறப்பட்டு சென்றனர்.

சோதனைக்கு வந்த அதிகாரிகள் ஏன் திரும்பிச் சென்றனர்? போன் காலில் அழைத்து பேசியது யார்? என சந்தேகம் எழுந்த நிலையில், அதிகாரி சதீஷுக்கு திடீரென படபடப்பு ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு சென்றது தெரியவந்தது. ஓமந்தூரர் அரசு மருத்துவமனையில் அவருக்கு ஈசிஜி பரிசோதனை மேற்கொள்ளபட்டு வீடு திரும்பியதாகவும் தெரியவந்துள்ளது.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

“இனி அது பேய் கிணறு” செல்போனில் தீரா பேச்சு.. மனைவி உயிரும் போச்சு..!
  சந்தேகத்தால் ஒரு கொலை

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies