முகமூடிக் கும்பலால் பாஜக பிரமுகர் வெட்டிக் கொலை
Apr 27, 2025
முகப்பு
அடுத்தடுத்து நிலநடுக்கம்.. சரியும் கட்டிடக் குவியலில் சவாலான மீட்புப் பணி... நிலநடுக்கம் ஏன் வந்தது..?
Mar 31, 2025 02:08 AM
3632
அடுத்தடுத்து நிலநடுக்கம்.. சரியும் கட்டிடக் குவியலில் சவாலான மீட்புப் பணி...
உடைந்த கட்டிடங்கள் எப்போது வேண்டுமானாலும் தலையில் சரியும் நிலையிலும் கூட மியான்மரில் அடுத்தடுத்த நிலநடுக்கங்களுக்கிடையே உயிரைப் பணயம் வைத்து வெறும் கைகளால் கட்டிடக் குவியலை அகற்றி வருகின்றனர் மீட்புப் படையினர்.
கிட்டத்தட்ட 2000 பேரைப் பலிவாங்கிய நிலநடுக்கத்தில் கட்டிடக் குவியலுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணி 3 நாட்கள் கடந்தும் தொடர்கிறது. சில உயிர்களைக் காவு வாங்க சமயம் பார்த்து அவ்வப்போது வந்து செல்கிறது நில நடுக்கங்கள்...
உடைந்து அந்தரத்தில் தொங்கும் கட்டிடங்களையும் ஒரே அதிர்வில் தரை மட்டமாக்கும் வல்லமை கொண்டது இவை. அதனுள் துணிச்சலாக நுழைந்து மீட்புப் பணியில் ஈடுபடுகின்றனர் மீட்புக் குழுவினர். .
சிக்கலான கட்டிடக் குவியலில் இருந்து 40 மணி நேரத்துக்குப் பின், 26 வயது இளைஞர் ஒருவரை உயிரோடு மீட்கவே 15 பேர் கொண்ட மீட்புக்குழுவுக்கு 24 மணி நேரப் போராட்டம் தேவைப் பட்டிருக்கிறது. இன்னும் பலரைக் காணாமல் கதறி அழுகின்றனர் அந்நாட்டு மக்கள். .
அமெரிக்க நிலநடுக்கவியல் ஆய்வுத் துறையின் கணக்கீட்டுப்படி பார்த்தால் 10000 பேராவது கட்டிடக் குவியல்களுக்குள் சிக்கியிருக்கக் கூடும்.. ஆனால், அவர்களை மீட்க தற்போதைய வேகமோ, மீட்புக் குழுவோ, மீட்பு சாதனங்களோ போதாத நிலையில் உள்ளது.
கடந்த இரு புயல்களைக் கூட எதிர்கொண்ட மியான்மர் ராணுவ ஆட்சியில், சர்வதேச உதவிக்கரம் வேண்டும் என வெளிப்படையாகவே கேட்டிருக்கிறது.
சேத மதிப்புப் படி மருந்துகள் கூட போதாது என்று கூறியிருக்கிறது ஐநா. .
தாய்லாந்தில் ரோபோக்கள், ட்ரோன்கள், அதிநவீன பேக்கோக்கள் பயன்படுத்தி மீட்கின்றனர். மோப்ப நாயின் துணை கொண்டே உயிரோடு இருப்பவர்கள் சிக்கியிருக்கும் இடத்தை ஓரளவு அறிகின்றனர் மீட்புப் படையினர்.
மீட்புப் படையினரே சில சமயம் வெறும் கைகளால் குவியல்களை அகற்றும் போது கூட மோப்ப நாய்களின் கால் குளம்புகளுக்கு பிரத்யேக ஷூக்களை மாட்டி இரவு பகலாக மீட்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
மியான்மருக்கு ஆபரேசன் பிரம்மா என்ற பெயரில் முதலாவதாக ஓடிச் சென்று விமானம் மூலமும் போர்க்கப்பல் மூலமும் முதலுதவிகளை அளித்து வருகிறது இந்தியா.
இந்த நிலையில் நிலநடுக்கம் ஏன் ஏற்பட்டது? எப்படி உருவானது எனப் பார்க்கலாம்.
இதற்கு பூமியின் அரை வெட்டுத் தோற்றத்தை முதலில் காண வேண்டும்.
செகைங் ஃபால்ட் ((Sagaing Fault)) என்ற பிழைக் கோட்டில் அமைந்துள்ளது மியான்மரின் சில பகுதிகள். அதில் இந்தியத்தட்டு மேற்கு நோக்கியும், யுரேசியத் தட்டு கிழக்கு நோக்கியும் ஆண்டுக்கு 11 முதல் 18 மில்லி மீட்டர் என்ற வேகத்தில் நகர்கிறது.
எர்த் க்ரஸ்ட் என்ற பெயரில் பூமி அடுக்குகளில் புவி ஓடு, மண், பாறை, கனிமங்கள் கடந்து ஆழத்தில் கற்கோளம் உள்ளது. அந்த பிழைக் கோட்டில் உள்ள டெக்டானிக் தட்டு நகர்ந்ததால் நிலநடுக்கமும், பின் பூமி தன்னைத் தானே சீரமைக்கும் முயற்சிகளால் நில அதிர்வுகளும் ஏற்பட்டு வருகிறது.
யுரேசிய தட்டு, இந்திய தட்டு, சுண்டா தட்டு உள்ளிட்டவை ஒன்றோடு ஒன்று மோதும் போது, அது ஒரு எலாஸ்டிக் பட்டையை இழுத்துவிட்டால் எப்படி ஒரு அதிர்வலையை ஏற்படுத்துமோ அதே போன்று அதிர்வலையை பூமிக்கு அடியிலுள்ள அடுக்குகளில் ஏற்படுத்துகிறது. அதுவே நில-நடுக்கமாக உணரப்படுகிறது.
கிட்டத்தட்ட 70 மில்லியன் ஆண்டுகளாக இந்திய கண்டம் இந்த நிலநடுக்கங்களால் மேல் நோக்கி நகர்ந்து நகர்ந்து யுரேசிய தட்டோடு மோதியது. அப்போது அங்கு இருந்த டெத்திஸ் கடல் படுகை மேல் எழும்பி உருவான பனிமலை தான் ஹிமாலய மலை தொடர்.
இதனால்தான், நிலநடுக்க அபாயத்தில் உள்ள செங்கைங் பிழைக்கோடுகளால் கிழக்கு ஹிமாலய மலைத்தொடர், ஜம்மு காஷ்மீர், உத்தரகாண்ட் ஆகிய இடங்களில் பனிச்சரிவு நிலச்சரிவு நிலநடுக்கம் ஆகியவை அதிகம் ஏற்படுகிறது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu