முகப்பு
உறவுக்கார பெண்ணுக்கு ஆறுதல் கூறச் சென்று கொலையாளியாக மாறினார் சி.ஆர்.பி.எஃப் வீரர்..
Mar 14, 2025 01:46 AM
63
உறவுக்கார பெண்ணுக்கு ஆறுதல் கூறச் சென்று கொலையாளியாக மாறினார் சி.ஆர்.பி.எஃப் வீரர்..
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டியில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் துரைமுருகன் என்பவரது கொலை வழக்கில் சி.ஆர்.பி.எஃப் வீரர் ஜெயகணேசன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுபோதைக்கு அடிமையான துரைமுருகன், பெண்கள் பலருடன் தொடர்பு வைத்துக் கொண்டு மனைவி ராமலட்சுமியை அடித்துத் துன்புறுத்துவது வழக்கம் என்று கூறப்படுகிறது.
அதுகுறித்து தனது உறவினரான சி.ஆர்.பி.எஃப் வீரர் ஜெயகணேசனிடம் கூறி ராமலட்சுமி அழுதுள்ளார்.
ஜெயகணேசனும் ராமலட்சுமியும் பேசுவதைத் தவறாகப் புரிந்துகொண்ட துரைமுருகன், மது குடித்துவிட்டு ஜெயகணேசனுக்குப் போன் போட்டு ஆபாசமாகத் திட்டுவதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளார்.
ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த ஜெயகணேசன், துரைமுருகனை கழுத்தை நெரித்துக் கொன்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu