முகப்பு
ரயில் நிலையத்தில் இளம்பெண் காவலரிடம் பாலியல் அத்துமீறல்.. செயின் பறிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட வழக்கில் புதிய திருப்பம்..
Feb 17, 2025 10:16 AM
112
ரயில் நிலையத்தில் இளம்பெண் காவலரிடம் பாலியல் அத்துமீறல்..
சென்னை பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் இளம்பெண் காவலரிடம் செயின் பறித்ததாக கூறப்பட்ட விவகாரத்தில் புதிய திருப்பமாக அவரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றது தெரியவந்துள்ளது.
பெண் காவலர், நேற்று முன்தினம் இரவு பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் இறங்கி வீட்டிற்கு சென்றபோது சிட்லபாக்கத்தை சேர்ந்த சத்திய பாலு என்பவர் வாயைப் பொத்தி ஒன்றரை சவரன் செயினை பறித்துவிட்டு தப்பியோடியதாக கூறப்பட்டது.
பெண்காவலர் சத்தமிட்டதைத் தொடர்ந்து அங்கிருந்த பயணிகள் அந்த நபரை பிடித்து தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்த நிலையில், விசாரணையில் பெண் காவலரை சத்தியபாலு பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றது தெரியவந்தது.