கர்நாடக சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் களமிறங்குகிறார் சோனியா காந்தி..!

0 1157

கர்நாடக சட்டமன்றத் தேர்தலுக்காக ராகுல்காந்தியும் பிரியங்காவும் தீவிரப் பிரச்சாரம் செய்து வரும் நிலையில் ,சோனியா காந்தியும் தேர்தல் களத்தில் பிரச்சாரம் செய்ய உள்ளார்.

தென் மாநிலத்தில் முக்கியமான காங்கிரஸ் கோட்டையாக இருந்த கர்நாடகத்தில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸ் முழுவீச்சில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில் 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு எந்த மாநில சட்டமன்றத் தேர்தலுக்கும் பிரச்சாரம் செய்யாமல் ஒதுங்கி இருந்த சோனியா காந்தி கர்நாடகத்தில் பிரச்சாரம் செய்ய ஒப்புக் கொண்டுள்ளார்.

மே 10ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் அடுத்த சில நாட்களில் சோனியா காந்தி பிரச்சாரம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments