பாகிஸ்தானில், ஓடும் ரயிலில் தீ விபத்து - 7 பேர் பலி

0 1321
பாகிஸ்தானில், ஓடும் ரயிலில் தீ விபத்து - 7 பேர் பலி

பாகிஸ்தானில், ஓடும் ரயிலில் நேர்ந்த தீ விபத்தால் 7 பேர் உயிரிழந்தனர்.

கராச்சியிலிருந்து லாகூர் நோக்கி சென்ற ரயிலில், நள்ளிரவு வேளையில், திடீரென ஒரு பெட்டியில் தீ விபத்து நேர்ந்தது. பின் அடுத்தடுத்த பெட்டிகளுக்குத் தீ வேகமாக பரவியது.

ரயிலுக்குள் சிக்கிக்கொண்ட 6 பயணிகளும், ஜன்னல் வழியாக குதித்த பெண் பயணி ஒருவரும் உயிரிழந்தனர். தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்றுவருகிறது.

ஏழை மக்கள் ரயில் பயணங்களின்போது சமைப்பதற்காகத் தடையை மீறி சிறிய கேஸ் அடுப்புகளை எடுத்துசெல்வதால் அடிக்கடி தீ விபத்துகள் நேர்ந்து விடுகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments