செல்போன் கடையின் பூட்டை உடைத்து 34 ஐபோன்கள் திருட்டு.. போனிலிருந்த சிம் கார்டு மூலம் இருப்பிடத்தை கண்டுபிடித்த போலீசார்..!

0 1873

ஈரோட்டில், அதிகாலை, செல்போன் கடையின் பூட்டை உடைத்து 34 ஐபோன்-களைத் திருடிச்சென்ற நபரை, நன்பகலில், திருப்பூரில்வைத்து போலீசார் கைது செய்தனர்.

அதிகாலை 5 மணியளவில், மேட்டூர் சாலையிலுள்ள செல்போன் கடையின் பூட்டை உடைத்த மர்ம நபர், அடுத்ததாக இருந்த கண்ணாடி கதவையும் உடைத்து, கைகளில் ரத்தம் சொட்ட சொட்ட, Display-வில் வைக்கப்பட்டிருந்தவை உள்பட 34 ஐபோன்களை திருடிச்சென்றார்.

Display போனிலிருந்த சிம் கார்டு மூலம் அவன் திருப்பூர் அருகே பதுங்கியிருப்பதை கண்டுபிடித்த போலீசார், உடனடியாக அங்கு விரைந்து விஜயகுமார் என்ற அந்த நபரை கைது செய்தனர். அவனிடமிருந்து 14 லட்ச ரூபாய் மதிப்பிலான ஐ-போன்களை போலீசார் மீட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments