மதரீதியாக சர்ச்சைக்குரிய வகையில் சமூக வலைதளத்தில் பதிவிட்ட கோபால் என்பவரை கைது செய்த போலீசார்.!

0 3721

சென்னையில் மதரீதியாக சர்ச்சைக்குரிய வகையில் சமூக வலைதளத்தில் பதிவிட்ட சிவனடியார் கோபால் என்கிற பிருங்கிமலை கோபால் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

இந்து தமிழர் பேரவை மற்றும் உலக இந்து புரட்சிப்படை என்னும் டிவிட்டர் பக்கங்களில் மதரீதியாகவும் அரசுக்கு எதிராகவும்  பதிவிட்டுள்ளார். மண்ணடியை சேர்ந்த சையது அலி என்பவர் அளித்த புகாரின் பேரில் பிருங்கிமலை கோபாலை போலீசார் கைதுசெய்தனர்.

இவர் கடந்த 2020-ம் ஆண்டும் இதே குற்றங்களுக்காக குண்டர் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments