11 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு
Published : Jan 07, 2020 12:49 PM
11 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு
Jan 07, 2020 12:49 PM
வளிமண்டலத்தில் நிலவும் காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தின் 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டங்களின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் இருக்கும், சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், அதிகப்பட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் கூறியுள்ளது.