இடைத்தேர்தல் தோல்வி குறித்து திமுக பொதுக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றும், உள்ளாட்சி தேர்தல் எப்போது நடந்தாலும் அதை எதிர்கொள்ள திமுக தயாராக உள்ளது என்றும் அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
சென்னை கோட்டூர்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், புதிய தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக தமிழக அரசுக்கு தெளிவில்லை என்று விமர்சித்தார். திமுக பொதுச் செயலாளர் ஓய்வில் இருப்பதால் அவருடைய பணிகளை மற்றவர்களுக்கு பிரித்து தரப்படவுள்ளதாக கூறப்படுவது பற்றி கேட்டபோது, அதுகுறித்து திமுக தலைமை தான் முடிவு செய்யும் என துரைமுருகன் பதிலளித்தார்.