பொருட்களை டெலிவரி செய்வதில் ஏற்படும் தாமதத்தை தவிர்க்க, 100 அதிநவீன ரோபோக்களை பிளிப்கார்ட் நிறுவனம் பணியமர்த்தியுள்ளது.
பொருட்களை ஆன்லைன் வாயிலாக விற்பனை செய்வதில் பிளிப்கார்ட் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றாக இருந்துவருகிறது. இந்த நிலையில் டோர் டெலிவரி பணிகளை தேக்கமின்றி விரைந்து முடிக்க மற்றும் பொருட்களை முறையாக பேக்கிங் செய்வது உள்ளிட்ட பணிகளுக்காக புதிதாக 100 ரோபோக்களை அந்நிறுவனம் பணியமர்த்தியுள்ளது.
அதி நவீன செயற்கை நுண்ணுணர்வு தொழில் நுட்ப உதவியுடன் இயங்கும் வண்ணம் இந்த ரோபோக்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.