மதுரவாயல் - வாலாஜாபேட்டை இடையே உள்ள சுங்கச்சாவடிகளில் 50 சதவீத கட்டணம் பெற வேண்டும் என்ற உத்தரவு நீட்டிப்பு - சென்னை உயர்நீதிமன்றம்
Published : Jan 22, 2021 6:21 PM
மதுரவாயல் - வாலாஜாபேட்டை இடையே உள்ள சுங்கச்சாவடிகளில் 50 சதவீத கட்டணம் பெற வேண்டும் என்ற உத்தரவு நீட்டிப்பு - சென்னை உயர்நீதிமன்றம்
Jan 22, 2021 6:21 PM
மதுரவாயல், வாலாஜாபேட்டை இடையே உள்ள சுங்கச்சாவடிகளில் 50 விழுக்காடு கட்டணம் மட்டுமே பெற வேண்டுமென்ற உத்தரவை மார்ச் 11 வரை உயர்நீதிமன்றம் நீட்டித்துள்ளது.
அந்த சாலையை முறையாகப் பராமரிக்காதது தொடர்பாகச் சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கை எடுத்து விசாரித்தது. சாலையைச் சீரமைக்கும் வரை சுங்கச்சாவடிகளில் 50 விழுக்காடு கட்டணம் பெற வேண்டும் என டிசம்பர் 9ஆம் நாள் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், நக்கீரன் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, 50 விழுக்காடு சுங்கக் கட்டணம் மட்டுமே பெற வேண்டும் என்கிற உத்தரவை மார்ச் 11 வரை நீதிபதிகள் நீட்டித்தனர்.