சீனாவில் தங்கச் சுரங்க வெடி விபத்து: பூமிக்கடியில் சிக்கியவர்களை மீட்க மேலும் 15 நாட்களாகும் எனத் தகவல்
Published : Jan 22, 2021 3:40 PM
சீனாவில் தங்கச் சுரங்க வெடி விபத்து: பூமிக்கடியில் சிக்கியவர்களை மீட்க மேலும் 15 நாட்களாகும் எனத் தகவல்
Jan 22, 2021 3:40 PM
சீனாவில், தங்க சுரங்க வெடி விபத்தால் பூமிக்கடியில் சிக்கி தவிப்பவர்களை மீட்க, மேலும் 15 நாட்கள் ஆகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிக்ஸியா நகரில் உள்ள தங்க சுரங்கத்தில் கடந்த 10ம் தேதி ஏற்பட்ட வெடி விபத்தில் 22 சுரங்க பணியாளகள் பூமிக்கடியில் சிக்கினர். அவர்களில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 11பேர் உயிருடன் உள்ளனர். எஞ்சிய 10 பேரைக் காணவில்லை. உயிர் பிழைத்தவர்களுக்கு சிறிய துளையின் வழியே உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், மீட்புப் பணிக்காக உருவாக்கப்பட்ட பாதை இடிந்து அடைப்பு ஏற்பட்டுள்ளதால், மீட்க இன்னும் 15 நாட்கள் தேவைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.