தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.280 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு 280 ரூபாய் உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு 280 ரூபாய் உயர்ந்துள்ளது.
அதன்படி சென்னையில் ஆபரணத்தங்கம் ஒரு சவரன், 30 ஆயிரத்துக்கு 408 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் ஆபரணத்தங்கம் 35 ரூபாய் அதிகரித்து மூவாயிரத்து 801 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் கிராமுக்கு 40 காசுகள் உயர்ந்துள்ளது.
சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி ஒரு கிராம் 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. பார் வெள்ளி ஒரு கிலோ 400 ரூபாய் அதிகரித்து 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.
Comments