202 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இன்னிங்க்ஸ் மற்றும் 202 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 497 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. பின்னர் விளையாடிய தென்னாப்பிரிக்கா அணி 162 ரன்களில் சுருண்டது.
335 ரன்கள் பின் தங்கிய நிலையில் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய தென்னாப்பிரிக்கா அணி நேற்று 133 ரன்கள் அடித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம், இன்னிங்க்ஸ் மற்றும் 202 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று,தொடரையும் 3க்கு 0 என்ற கணக்கில் கைப்பற்றியது. தொடர் நாயகன் விருதை ரோகித்சர்மா தட்டி சென்றார்.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியின்ஷிப் புள்ளிகளின் பட்டியலில் 240 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடித்து வருகிறது. 60 புள்ளிகளுடன் நியூசிலாந்து அணி 2வது இடத்தில் உள்ளது.
Comments