தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த அரசு ஊழியர் சங்கங்கள்

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 17 சதவீதமாக உயர்த்தப்பட்டதற்கு, தமிழக அரசுக்கு அரசு ஊழியர் சங்கங்கள் நன்றி தெரிவித்துள்ளன.
தமிழக அரசு ஊழியர்களுக்கு 5 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அதன்படி ஏற்கனவே 12 சதவீதமாக இருந்து வந்த அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி, தற்போது 17 சதவீதமாக அதிகரித்துள்ளது. மேலும் இந்த உயர்த்தப்பட்ட அகவிலைப்படி கடந்த ஜூலை மாதம் 1ம் தேதி முதல், கணக்கிட்டு வழங்கப்படும் எனவும் தமிழக அரசின் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அகவிலைப்படியை உயர்த்தியமைக்காக தமிழ்நாடு தலைமை செயலக சங்கம் உள்ளிட்ட பல்வேறு அரசு ஊழியர்கள் சங்கங்கள், தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளன.
Comments