பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன ? புலம்பும் மீரா மிதூன்
பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன ? என்று டுவிட்டரில் தொடர் வீடியோ வெளியிட்டு ரகளை செய்து வரும் மீரா மிதுன், அந்த நிகழ்ச்சியை நடத்திய சேனலுக்கு சவால் விடுத்து புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மிஸ் சவுத் இந்தியா அழகிப் போட்டியில் திருமணமான தகவலை மறைத்து பட்டம் வென்றதால் அழகி பட்டம் பறிக்கப்பட்டவர் மீராமிதுன்..! இவர் தன்னை ஒரு மாடல் என கூறிக் கொண்டு தனியார் தொலைக்காட்சி நடத்திய 100 நாட்கள் ஒரே வீட்டுக்குள் அடைபட்டு கிடக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அந்த வீட்டுக்குள் வைத்து சேரன் தன்னை தவறாக தொட்டார் என்று அவதூறாக குற்றஞ்சாட்டியதால் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். அங்கிருந்து வெளியே வந்த மீராமிதுன், சேரனைப் பற்றி அவதூறு பரப்ப ஏற்பாடு செய்தது அம்பலமானதால் அந்த நபரை கொலை செய்ய மீரா மிதுன் திட்டமிட்ட ஆடியோ வெளியானது.
இதையடுத்து தலைமறைவான மீராமிதுன் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்று மும்பையில் பதுங்கி இருந்து தினந்தோறும் விதவிதமாக வீடியோ வெளியிட்டு வருகின்றார்.
அந்தவகையில் பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன ? என்பது குறித்து மீண்டும் சேரனை கடுமையாக விமர்சித்துள்ளார் மீரா மிதுன்
அதே போல பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்திய தொலைக்காட்சிக்கு சவால் விடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டு வம்புக்கு இழுத்துள்ளார் மீரா மிதுன்
மீராமிதுனின் சவாலுக்கு பிக்பாஸ் நடத்தும் தொலைக்காட்சி என்ன பதில் சொல்லபோகிறது என்பதே அனைவரின் எதிர்பார்பாக உள்ளது.
Comments