மகனுடன் டெல்லி வந்திருக்கும் இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே

இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே தமது மகன் நாமல் ராஜபக்சேவுடன் டெல்லிக்கு வருகை தந்துள்ளார்.
விராட் இந்துஸ்தான் எனப்படும் அமைப்பு சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில், இந்திய - இலங்கை உறவு குறித்து பேசுவதற்காக சுப்பிரமணியன் சுவாமியின் அழைப்பை ஏற்று ராஜபக்சே வந்துள்ளார். அவரது இந்தப் பயணத்தின் போது பிரதமர் மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட பல முக்கியத் தலைவர்களைச் சந்திக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவுடனான தமது உறவை மீண்டும் வலுப்படுத்திக் கொள்வதுடன், மகன் நாமலை இங்குள்ள தலைவர்களுக்கு அறிமுகப்படுத்துவதுமே ராஜபக்சேவின் இந்தப் பயணத்திற்கான முக்கிய நோக்கமாக கருதப்படுகிறது.
Comments