BIG STORIES
காதலில் விழுந்த இளைஞர்.. வீட்டுக்குள் புகுந்த காதலி.. ரகளையால் போலீஸ் தவிப்பு..! 3 மணி நேர அட்டகாசம்
May 15, 2025 01:54 AM
654
திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு அருகே காதலனின் வீடு புகுந்து ரகளையில் ஈடுபட்ட பெண், வீட்டிற்குள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்வதாக நாடகமாடி போலீசாரை தவிப்புக்குள்ளாக்கிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது
காதலில் விழும் இளைஞர்களுக்கு பாடம் சொல்லும் விதமாக பெண் ஒருவர் காதலனின் வீடு புகுந்து வைத்த ரகளை கச்சேரியின் அட்டகாச காட்சிகள் தான் இவை..!
சென்னை காசிமேட்டை சேர்ந்தவர் துர்காதேவி, தனியார் நிறுவனம் ஒன்றில் ஹவுஸ் கீப்பிங் பணியாளராக பணிபுரிந்து வந்த துர்காதேவிக்கு திருமணமாகி 7 வயதில் குழந்தை உள்ள நிலையில் அதனை மறைத்து அதே நிறுவன மேலாளரான வேப்பம்பட்டு பார்த்தீபன் என்பவரை காதலித்து வந்தார்
துர்காதேவிக்கு கடந்த 2011 ஆம் ஆண்டு சரவணன் என்பவருடன் ஏற்கனவே திருமணமான தகவல் பார்த்தீபனுக்கு தெரியவரவே அவர் துர்காதேவியை தவிர்த்துள்ளார்.
அன்றிலிருந்து பார்த்தீபனை விரட்டி விரட்டி நியாயம் கேட்ட துர்காதேவி கடந்த 2022 ஆம் ஆண்டு கோவிலில் வைத்து சாமர்த்தியமாக மாலை மாற்றி தாலிகட்ட வைத்ததாக கூறப்படுகின்றது.
இருவரும் முதலில் காசிமேட்டில் தங்கி சில வாரங்கள் குடித்தனம் நடத்தி உள்ளனர். துர்காதேவி நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியுடன் வேப்பம்பட்டிற்கு குடி பெயர்ந்துள்ளார் பார்த்தீபன்.
அங்கு சென்ற பின்னர் மனைவியின் நடவடிக்கையை கண்காணிக்க செல்போனில் கால் ரெக்கார்டர் போட்டு வைத்துள்ளார். இது தெரியாமல் ஆண் நண்பர்களுடன் மனம்விட்டு பேசிய துர்காதேவியின் சில ரகசியங்கள் தெரியவந்ததால் அவரை பிரிந்தாக கூறப்படுகின்றது.
அன்றிலிருந்து பார்த்தீபனுக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுத்து ஏமாந்து விட்டதாக கூறியும் காதலித்து கர்ப்பமாக்கிவிட்டு கலைத்ததாக குற்றஞ்சாட்டியும் தொடர்ச்சியாக காவல் நிலையத்தில் புகார் அளிப்பதும், பார்த்தீபனிடம் அவரது வீட்டை எழுதிக்கேட்டு பிரச்சனை செய்வதுமாக இருந்ததாக பார்த்தீபனின் தாய் தெரிவித்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று வேப்பம்பட்டுவில் உள்ள பார்த்தீபனின் வீட்டுக்குள் சென்று புகுந்து கொண்ட துர்காதேவி, பார்த்தீபனின் தாயை அடித்து விரட்டியதாக கூறப்படுகின்றது
தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் துர்காதேவியை, வீட்டில் இருந்து வெளியே அழைத்தனர். வரமறுத்த அவர் தனது கணவர் வந்தால் தான் வெளியே வருவேன் என்று அடம்பிடித்தார்.
காதிலும் கழுத்திலும் தங்க நகை அணிந்திருந்த அவர் , தான் கடனில் தத்தளிப்பதாக கூறிக் கொண்டிருந்தார். பார்த்தீபன் வந்ததும் அவரது கையை பிடித்துக் கொண்டு “உன் மேலெ உயிரையே வச்சிருக்கேண்டா.. என்னுடன் வாழ வா” என்று பருத்தி வீரன் ப்ரியாமணி போல அடம்பிடித்தார்
ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த பார்த்தீபன், தனது தரப்பு விளக்கத்தை சொல்ல ஆரம்பித்தார், துர்காதேவிக்கு ஏற்கனவே இரு திருமணங்கள் ஆன விவரத்தையும் அவர் செல்போனில் யாருடன் எல்லாம் பேசினார் என்ற விவரத்தை கூற தொடங்கியதும் துர்காதேவி சொல்லவிடாமல் தடுத்தார்.
“உன்னுடைய செல்போனை கொடு உண்மை தெரியட்டும்” என்றதும், ஆவேசமான துர்காதேவி கடுமையான வாக்குவாதம் செய்து விட்டு, உயிரை மாய்த்துக் கொள்கிறேன் என்று ஓடிச்சென்று வீட்டுக்கதவை பூட்டிக் கொண்டார்
பதறிப்போன போலீசார் அவரது பின்னால் ஓடிச்சென்று கதவை திறக்க முயற்சித்தனர், ((உதவி)) ஆய்வாளர் ஒருவர் சாமர்த்தியமாக படுக்கை அறையின் ஜன்னல் வழியாக பார்த்து கதவை உடைக்க அறிவுறுத்தினார்.
அடுத்த நொடியே இளம் காவல் ஆய்வாளர் ஒருவர் வீட்டின் கதவுகளை உடைத்துக் கொண்டு சென்று படுக்கை அறையில் மின் விசிறியில் சேலையை கட்டிவிட்டு நின்று கொண்டிருந்த துர்காதேவியை மடக்கிப்பிடித்தனர்
மீண்டும் கீறல் விழுந்த ரெக்கார்டு போல காதலன் பார்த்தீபனிடம் பணத்தை கேட்டு தகராறு செய்தார்.
சுமார் 3 மணி நேரமாக நீடித்த இந்த ரகளையை கண்டு பொறுமை இழந்த போலீசார் அவர்கள் இருவரையும் ஆட்டோவில் ஏற்றி விசாரணைக்காக பூந்தமல்லி அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர்
SHARE
Max characters : 500
RELATED POSTS
காதல் மனைவியை பிரிந்த இளைஞர் கொடூரமாக கொலை..!
Jun 22, 2025
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu