RECENT NEWS

திருச்செந்தூரில் ஏ.டி.ஜி.பி டேவிட்சன் தேவாசிர்வாதம் ஆய்வு

திருச்செந்தூரில் ஏ.டி.ஜி.பி டேவிட்சன் தேவாசிர்வாதம் ஆய்வு

Jun 20, 2025

திருச்செந்தூரில் ஏ.டி.ஜி.பி டேவிட்சன் தேவாசிர்வாதம் ஆய்வு

திருச்செந்தூரில் ஏ.டி.ஜி.பி டேவிட்சன் தேவாசிர்வாதம் ஆய்வு

Jun 20, 2025

BIG STORIES

சேலம் இரட்டை கொலை.. பீகார் இளைஞர் சொன்ன தகவலால் போலீஸ் ஷாக்..! இந்த டுவிஸ்ட்ட எதிர்பார்க்கல..!

May 13, 2025 01:24 AM

1271

சேலம் இரட்டை கொலை.. பீகார் இளைஞர் சொன்ன தகவலால் போலீஸ் ஷாக்..! இந்த டுவிஸ்ட்ட எதிர்பார்க்கல..!

சேலம், சூரமங்கலத்தை அடுத்த ஜாகீர் அம்மாபாளையத்தில் மளிகை கடை நடத்திவந்த, 60 வயதை கடந்த கணவன், மனைவி கொல்லப்பட்ட சம்பவத்தில் பீகார் இளைஞரை போலீசார் கைது செய்தனர். ரத்தம் சொட்ட சொட்ட நடந்து சென்றவனை மோப்ப நாய் தவற விட்டாலும் , சிசிடிவி சிக்க வைத்துள்ளது.

தங்கள் குடும்பத்தில் இரு மூத்தவர்களை பறிகொடுத்து விட்டு உறவினர்கள் கதறி அழும் காட்சிகள் தான் இவை..!

சேலம் மாவட்டம் சூரமங்கலம் அடுத்த ஜாகீர்அம்மா பாளையத்தில் மளிகை நடத்தி வந்தவர் பாஸ்கரன், இவரது மனைவி வித்யா. இவர்களின் இரு மகன்களும் திருமணமாகி அவரவர் குடும்பத்துடன் தனியாக வசித்து வருகின்றனர்.

பாஸ்கரனுக்கு 69 வயது முடிந்து 70 வயது தொடங்குவதையொட்டி, அவரது மகன்கள் இருவரும் சேர்ந்து தங்கள் தாய் தந்தையரை திங்கட்கிழமை பழனி முருகன் கோவிலுக்கு அழைத்துச்சென்று பீமரத சாந்தி பூஜை நடந்த ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு மேல் மளிகை கடை திறந்திருந்த நிலையில், வீட்டிற்குள் பாஸ்கரனும், வித்யாவும் தலையில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தனர். நகைக்காக இருவரையும் யாரோ மர்ம நபர்கள் தாக்கி கொலை செய்ததாக கூறப்பட்டது.

விசாரணையை முன்னெடுத்த போலீசார் போலீஸ் மோப்ப நாய் லில்லியை கொண்டுவந்தனர். மோப்பம் பிடித்து விட்டு சிறிது தூரம் ஓடிச்சென்ற நாய் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.

போலீசார் அக்கம் பக்கத்தில் பொறுத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது. தம்பதியர் தாக்குதலுக்கு உள்ளான சிறிது நேரத்தில் பக்கத்து தெருவில் கை மற்றும் சட்டையில் ரத்தம் தோய்ந்த நிலையில் வட மாநில இளைஞர் ஒருவர் அவசர அவசரமாக நடந்து சென்றது தெரியவந்தது.

அந்த சிசிடிவி காட்சிகளை வைத்து 4 தெருக்கள் தள்ளி வாடகை வீடு ஒன்றில் குடும்பத்துடன் வசித்து வந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த சந்தோஷ் சவுத்ரி என்ற இளைஞரை போலீசார் சுற்றிவளைத்தனர்.

தனக்கும் கொலைக்கும் சம்பந்தமில்லை என்று கூறிய அந்த இளைஞரின் கால் விரல் நகக்கண்ணின் ரத்தம் தெரித்து இருந்தது.

மேலும் வீட்டுக்குள் சென்று சோதனை நடத்திய போலீசார் ரத்தம் தெரித்த சட்டை மற்றும் கொலைக்கு பயன்படுத்திய சுத்தியலையும் தம்பதியின் கழுத்தில் இருந்து பறித்துச்செல்லப்பட்ட 10 சவரன் நகைகளை கைப்பற்றினர். சந்தோஷ் சவுத்ரியை கைது செய்து விசாரித்த போது அவர் சொன்னதகவல் போலீசாரை திகைக்க வைத்தது.

ஜாகீர் அம்மாபாளையத்துக்கு 15 வருடங்களுக்கு முன்பாக குடும்பத்துடன் வந்து கிடைக்கின்ற வேலைகளை செய்து வந்த ராஜ்குமார் என்பவர், அவரது மகளை பீகாரில் இருந்து சேலத்துக்கு கட்டிட வேலைக்கு வந்த சந்தோஷ் சவுத்ரிக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.

திருமணத்திற்கு பின்னர் ரேசன் அட்டை, ஆதார் அட்டை எல்லாம் பெற்றுக் கொண்டு குடும்பத்துடன் வாடகை வீட்டில் வசித்து வந்த சந்தோஷ் சவுத்ரி மதுப்பழக்கத்துக்கு அடிமையானார். போதை பழக்கம் காரணமாக ஒழுங்காக வேலைக்கு செல்லாமல் கடன் வாங்கி செலவழித்து வந்ததாகவும் கூறப்படுகின்றது.

கடந்த ஒரு மாதகாலமாக வேலைக்கு செல்லாததால் , கடன் கொடுத்தவர்களுக்கு பணத்தை திருப்பிக் கொடுக்க இயலாமல் தவித்துள்ளான்.

இந்த நிலையில் தனியாக மளிகை கடை நடத்தி வந்த முதிய தம்பதியர் இருவரும் கழுத்தில் தங்க சங்கிலி அணிந்திருப்பதை பார்த்து அதனை பறித்து விற்று கடன்களை அடைக்க திட்டமிட்டுள்ளான்.

அதன் படி தினமும் அந்த கடைக்கு சென்று குளிர்பானம் வாங்கி குடித்து விட்டு அவர்களது செயல்பாட்டை 10 நாட்களாக கண்காணித்துள்ளான். வீட்டோடு சேர்ந்த கடை என்பதால், அவ்வப்போது தம்பதியர் வீட்டிற்குள் சென்று வருவதையும் உற்றுனோக்கியதாக போலீசார் தெரிவித்தனர்.

ஞாயிற்றுக்கிழமை மதியத்துக்கு மேல் அந்த பகுதியில் ஆள் நடமாட்டம் இருக்காது என்பதை அறிந்து சம்பவத்த்ன்று வீட்டில் இருந்து சுத்தியல் ஒன்றை எடுத்துச்சென்று முதலில் வித்யாவின் தலையில் தாக்கி உள்ளான்.

அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த கணவர் பாஸ்கரனையும் சுத்தியலால் தாக்கி உள்ளான். பின்னர் இருவரது கழுத்தில் இருந்தும் தங்க சங்கிலிகளை பறித்துச்சென்றதாக சந்தோஷ் சவுத்ரி வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

கொல்லப்பட்ட தம்பதியரின் உடல்கள், பிணக்கூராய்வுக்கு பின்னர் இரண்டு ஆம்புலன்ஸ் வேன்களில் தனித்தனியே இல்லத்திற்கு எடுத்துவரப்பட்டது.

அவர்களது உடலுக்கு உறவினர்கள் அஞ்சலில் செலுத்தினர். பாஸ்கரனின் மகன்களின் குடும்பத்தினர், அப்பா எழுந்து வாருங்கள் ... அம்மா எழுந்து வாருங்கள் என கதறி அழுதது காண்போரை கலங்க செய்தது.

இனி வட இந்திய தொழிலாளர்களுக்கு தங்கள் வீட்டை வாடகைக்கு கொடுக்க மாட்டோம் என்று சந்தோஷ் சவுத்ரிக்கு வீட்டை வாடகைக்கு கொடுத்த பெண்மணி தெரிவித்தார்.

இந்த இருவர் கொலை சம்பவத்தை தொடர்ந்து பொதுமக்கள் ஒவ்வொரு வீட்டிலும் சிசிடிவி பொறுத்த வேண்டும் என்றும் தனியாக வசிக்கும் முதியவர்களும், பெண்களும் கழுத்தில் அதிக நகைகளை அணிவதை தவிர்த்து, மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும் போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

"உன்னோட தாய் சாபம் குழந்தைகளை பாதிக்கும் மன்னிப்பு கேட்டு போ..” புத்தி சொன்ன காவல் ஆய்வாளர்..

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies