முகப்பு
அந்த’ நேரத்தில் அழுத குழந்தை! கனவிலும் நினைச்சு கூட... பார்க்க முடியாத கொடூரம்
Apr 27, 2025 06:17 AM
328
அந்த’ நேரத்தில் அழுத குழந்தை! கனவிலும் நினைச்சு கூட... பார்க்க முடியாத கொடூரம்
திருமணம் தாண்டிய உறவுக்கு தடையாக இருந்த 2 வயது சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் திசையான்விளை அருகே துவரம்பாடு கிராமத்தைச் சேர்ந்தவர் சரத். இவருக்கும் 27 வயதான பிருந்தா என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இருவரும் வேறு வேறு சமூகங்களை சேர்ந்தவர்கள் என்பதால் வீட்டை எதிர்த்து திருமணம் செய்துகொண்டனர். இதையெடுத்து இருவரும் தனியாக வந்துவந்த நிலையில் இவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு தர்ஷினி என்ற பெண் குழந்தை பிறந்தது.
அதைதொடர்ந்து சரத், வேலைக்காக கோவைக்கு சென்று அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். பிருந்தா தனது 2 வயது மகளுடன் மகாதேவன் குளத்தில் வசித்து வந்திருக்கிறார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மயங்கிய நிலையில் இருந்த குழந்தை தர்ஷணியை தூக்கிக்கொண்டு நடுவக்குறிச்சியில் உள்ள தாய் வீட்டுக்கு சென்ற பிருந்தா குழந்தை கட்டிலில் இருந்து கீழே விழுந்து விட்டதாக கூறினார்.
அதைத்தொடர்ந்து திசையன்விளை அரசு மருத்துவமனைக்கு தர்ஷினியை கொண்டு சென்று நிலையில் சிறுமி ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினர்.
ஆனால் குழந்தை தர்ஷனியின் கண்ணம், உதடு, காது மற்றும் உடலின் பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்ததால் சந்தேகம் அடைந்த மருத்துவர்கள் போலீசாரிடம் தகவல் தெரிவித்தனர்.
இதையெடுத்து பிருந்தாவிடம் போலீசார் விசாரித்தபோது ”கட்டில் இருந்து விழுந்து விட்டாள்” என சொன்னதையே மீண்டும் மீண்டும் கூறியிருக்கிறார். ஆனால் பிருந்தா ஏதோ ஒன்றை மறைப்பதாக சந்தேகமடைந்த போலீசார், அவரிடம் துருவி துருவி விசாரித்தபோது, சிறுமியை கொலை செய்தது ஒப்புக் கொண்டார். மேலும் பிருந்தாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கொலைக்கான காரணம் வெளிச்சத்திற்கு வந்தது.
கோவையில் சரத் வேலை பார்க்கும் நிலையில், பிருந்தாவுக்கு பல ஆண்களுடன் திருமணம் கடந்த உறவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 23ஆம் தேதி துவரம்பாடு பகுதியில் ஐஸ்கிரீம் கடை நடத்தும் லிங்க செல்வன், முத்துசுடர் ஆகியோர் மது போதையில் பிருந்தாவை துவரம்பாடு ஐஸ்கிரீம் கம்பெனிக்கு அழைத்துச் சென்று உல்லாசமாக இருக்க திட்டமிட்டுள்ளனர்.
அப்போது பிருந்தா தனது மகளையும் உடன் அழைத்துச் சென்றிருக்கிறார். ஏற்கனவே அங்கு பெஞ்சமின் என்ற இளைஞனும் காத்திருந்ததாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து பிருந்தா முத்துச்சுடர் உடன் தனிமையில் இருந்திருக்கிறார். அப்போது சிறுமி தொடர்ந்து அழுததாக கூறப்படுகிறது.
இதனால் சிறுமியை சமதனம் செய்ய ஐஸ் கம்பெனியில் மாடிக்கு அழைத்துச் சென்று ஸ்நாக்ஸ் வாங்கி கொடுத்திருக்கிறார்கள். ஆனாலும் தாய் வராததால் தர்ஷினி அழுது கொண்டிருக்கிறார். இதனால் அந்த சிறுமிக்கு இருவரும் சேர்ந்து மதுவை வாய்யில் ஊற்றி தினித்திருக்கிறார்கள். அப்போது பயந்துபோன சிறுமி மேலும் அழுதிருக்கிறார். இதனால் கோபமடைந்த இருவரும் சிறுமி என்றும் பாராமல் அவரை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது.
பின்னர் அதிகாலை 3 மணிக்கு பிருந்தாவிடம் குழந்தை தூங்கி விட்டதாக கூறி கொடுத்து இருக்கிறார்கள். வீட்டுக்கு சென்ற பிறகு தனது மகள் தர்ஷினி மூச்சுப்பேச்சு இல்லாமல் இருப்பதை கண்டு அச்சமடைந்த பிருந்தா, தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று, அங்கிருந்து மருத்துவமனை சென்றிருக்கிறார். சிறுமி இயற்கையாக இறந்ததுபோல நாடகமாடிய எப்படியாவது தப்பிவிடலாம் எண்ணி இருந்த நிலையில், போலீசார் விசாரணையில் வசமாக சிக்கிக்கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் குழந்தையை கொன்ற லிங்கச்செல்வன், பெஞ்சமின், முத்துசுடர், பிருந்தா ஆகியோரை கைது செய்துள்ளனர்.
திருமணம் தாண்டிய உறவுக்கு தடையாக இருந்த 2 வயது சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்டு, அதனை தாய்யே மறைக்க நிணைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu