முகமூடிக் கும்பலால் பாஜக பிரமுகர் வெட்டிக் கொலை
Apr 27, 2025
தமிழ்நாடு
”திரும்ப வந்துட்டேன்னு சொல்லு” ஒரு மாத போராட்டம்.. X-ஐ மீட்ட ஸ்ரேயா கோஷல்!
Apr 08, 2025 12:47 PM
96
”I am Back”.. இனி அடிக்கடி நிறைய எழுத போறேன்” தனது எக்ஸ் தளத்தை மீட்டார் ஸ்ரேயா கோஷல்
ஒரு மாதத்திற்கு பிறகு ஹேக்கர்களிடம் இருந்து தனது எக்ஸ் பக்கத்தை மீட்டுள்ளதாக பாடகி ஸ்ரேயா கோஷல் தெரிவித்துள்ளார்.
திரை பிரபலங்கள் தங்கள் பர்சனல் விஷயங்கள் மற்றும் சினிமா குறித்த அப்டேட்டுகளை எக்ஸ் தளம், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்தி பகிர்ந்து வருகின்றனர்.
அதேசமயம் திரைப்பிரபலங்களின் சமூக வலைதள கணக்குகளை அவ்வப்போது ஹேக்கர்கள், ஹேக் செய்வது அவர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுப்பது என்பது சமீபகாலமாக அதிகரித்துவருகிறது.
தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் பாடல்கள் பாடி இந்திய அளவில் பிரபலமானவர் ஸ்ரேயா கோஷல். தேசிய விருது, மாநில விருதுகள் உட்பட ஏராளமான விருதுகளை வென்று தனது குரலுக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார். திரைப்படங்களில் பாடுவதை தாண்டி இசை கச்சேரியையும் நடத்தி வருகிறார். இந்த நிலையில் பாடகி ஸ்ரேயா கோஷலின் எக்ஸ் கணக்கும் கடந்த பிப். 13-ம் தேதி முதல் முடக்கப்பட்டது.
அப்போது அதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் கணக்கு மூலமாக கூறியிருந்த அவர், 'தனது எக்ஸ் தளம் ஹேக் செய்யப்பட்டுள்ளது.
அதை மீட்க என்னால் மேற்கொண்ட முயற்சிகளுக்குப் பலன் இல்லை. அந்த கணக்கின் உள் நுழைய முடியாததால் நீக்கவும் இயலவில்லை.
எனவே அந்த கணக்கில் இருந்து வரும் எந்த இணைப்பையும் தகவல்களையும் நம்ப வேண்டாம். கணக்கு மீட்கப்பட்டால் தெரிவிப்பேன்" ரசிகர்களை எச்சரித்து இருந்தார்.
இந்த நிலையில், 2 மாதம் கழிந்த நிலையில் அவரது எக்ஸ் கணக்கு வெற்றிகரமாக மீட்டெடுக்கப்பட்டுள்ளது. இது குறித்த தகவலை வீடியோ ஒன்றின் வாயிலாகவே தெரிவித்துள்ளார் ஸ்ரேயா கோஷல்.
அதில், “நான் திரும்ப வந்து விட்டேன்.. இனி அடிக்கடி நிறைய எழுத போகிறேன்.. பேச போகிறேன்.. பிப்ரவரி மாதம் ஹேக் செய்யப்பட்ட எனது எக்ஸ் தள கணக்கு நீண்ட போராட்டத்துக்குப் பிறகு சரியாகிவிட்டது.
இப்போது அனைத்தும் நன்றாகவே இருக்கிறது” என கூறிய ஸ்ரேயா கோஷல், இந்த இடைப்பட்ட காலத்தில் என்னைப் பற்றிய தவறான சில கட்டுரைகள், விளம்பரங்கள், எஐ மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படங்கள் என என் கணக்கில் வெளியாகின.
வரும் காலங்களில் இவற்றையெல்லாம் தடை செய்யும் விதமாக எக்ஸ் நிர்வாகம் விதிமுறைகளை மாற்றி அமைத்தால் நன்றாக இருக்கும்.. விரைவில் அவர்கள் இதை செய்வார்கள் என நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.
ஸ்ரேயா கோஷலின் எக்ஸ் தளம் மீட்கபட்டதை தொடர்ந்து அவரின் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu