முகமூடிக் கும்பலால் பாஜக பிரமுகர் வெட்டிக் கொலை
Apr 27, 2025
முகமூடிக் கும்பலால் பாஜக பிரமுகர் வெட்டிக் கொலை
Apr 27, 2025
ஈரான் துறைமுகத்தில் சக்தி வாய்ந்த வெடி விபத்து
Apr 27, 2025
முகப்பு
விபச்சாரத்திற்கு போலீசிடமே 'ரேட்' பேசிய உல்லாச ராணிகள்..! கொத்தாக தூக்கியது எப்படி?
Apr 07, 2025 05:45 AM
593
விபச்சாரத்திற்கு போலீசிடமே 'ரேட்' பேசிய உல்லாச ராணிகள்..! கொத்தாக தூக்கியது எப்படி?
கன்னியகுமாரி மாவட்டம் வடசேரி பகுதியில் கடந்த 5 ஆம் தேதியன்று, மதியம் 3 மணி அளவில் ஒரு ஆண் தனியாக நின்றுகொண்டிருந்துள்ளார்.
அப்போது அங்கு வந்த இரண்டு பெண்கள், தங்களிடம் 21 வயதான இளம்பெண் இருக்கிறார், 1500 ரூபாய் தான், உல்லாசமாக இருக்கலாம் என விபச்சாரத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த ஆண், எந்த மறுப்பும் தெரிவிக்காமல் சம்மதம் தெரிவித்து அந்த பெண்களுடன் சென்றுள்ளார். அப்போது அந்த 2 பெண்களும் அந்த பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டிற்கு அந்த நபரை அழைத்துச் சென்றுள்ளனர்.
வீட்டின் உள்ளே 21 வயதான ஒரு இளம்பெண், அரைகுறை ஆடையுடன் இருந்த நிலையில், நாங்க சொன்ன பெண் இவர் தான், இந்த பெண் உங்களை கவனிப்பார் என அந்த ஆணிடம் இரண்டு பெண்களும் கூறியுள்ளனர். சிறிது நேரத்திலேயே அங்கு வந்த போலீசார் அந்த பகுதியை சுற்றி வளைத்தனர்.
இதனால் அந்த பெண்கள் பதறியடித்து தப்ப முயன்றபோது தான், அழைத்து வந்தவர் வடசேரி காவல் நிலைய உதவி ஆய்வாளர் லட்சுமணன் என்பதும், சீருடை அணியாமல் மாற்று உடையில் இருந்ததும் அந்த பெண்களுக்கு தெரியவந்துள்ளது.
மேலும் கும்பலை மொத்தமாக பிடிப்பதற்கு தான் பேரம் கூட பேசாமல் தங்களுடன் மாறு வேடத்தில் வந்தது பின்னர் தான் அவர்களுக்கு புரிந்துள்ளது.
மூன்று பெண்களும் தப்பி செல்ல முயன்ற நிலையில் போலீசார் அவர்களை கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் கொடைக்கானலை சேர்ந்த 27 வயதான செவிலியர் அனு மற்றும் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த விஜிலா ஆகிய இருவரும் நெல்லை மாவட்டம் பணக்குடியைச் சேர்ந்த 21 வயது இளம்பெண்ணை பண ஆசை காட்டி அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்தது தெரியவந்துள்ளது.
விஜிலா விபச்சார தரகராக செயல்பட்ட நிலையில் செவிலியர் அனுவும் இவரோடு இணைந்து விபச்சார தரகராக மாறியது தெரியவந்துள்ளது.
போலீஸ் என தெரியாமல் விலை பேசி அழைத்து சென்று விபச்சார கும்பல் கைதான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu