RECENT NEWS

குட்டிகளுடன்  விளையாடும் தாய் பாண்டா கரடி..! பாண்டா கரடி பராமரிப்பு மையத்தின் காட்சிகள் வெளியீடு..

குட்டிகளுடன் விளையாடும் தாய் பாண்டா கரடி..! பாண்டா கரடி பராமரிப்பு மையத்தின் காட்சிகள் வெளியீடு..

Apr 27, 2025

குட்டிகளுடன்  விளையாடும் தாய் பாண்டா கரடி..! பாண்டா கரடி பராமரிப்பு மையத்தின் காட்சிகள் வெளியீடு..

குட்டிகளுடன் விளையாடும் தாய் பாண்டா கரடி..! பாண்டா கரடி பராமரிப்பு மையத்தின் காட்சிகள் வெளியீடு..

Apr 27, 2025

முகப்பு

சென்னை அருகே மிரளவைக்கும் எலும்புக்கூடுகள்... விநோத மண்டை ஓடு சிலைகள்... அலறவைக்கும் அமானுஷ்ய ஸ்பாட்!

Apr 06, 2025 12:26 PM

146

சென்னை அருகே மிரளவைக்கும் எலும்புக்கூடுகள்... விநோத மண்டை ஓடு சிலைகள்... அலறவைக்கும் அமானுஷ்ய ஸ்பாட்!

சென்னை அருகே மிரளவைக்கும் எலும்புக்கூடுகள்... விநோத மண்டை ஓடு சிலைகள்... அமானுஷ்ய ஸ்பாட்!

சென்னை அருகே, மிரளவைக்கும் எலும்புக்கூடுகள்...விநோத மண்டை ஓடு சிலைகள்...நடுநடுங்கவைக்கும் கல்லறை...இப்படியொரு அமானுஷ்ய ஸ்பாட் இருக்கிறது, என்றால் நம்பமுடிகிறதா?

எங்கு உள்ளது இந்த இடம்? எப்படி இப்படியொரு இடம் உருவானது? என விவரிக்கிறது, இந்த செய்தி தொகுப்பு...

இந்திய வரலாற்றிலேயே பெரும் முக்கியத்துவத்தை பெற்றுள்ளது, இந்த இடம். இந்தியாவில் நிலவிய ஐரோப்பிய காலனிய ஆட்சிக்கு சாட்சியாக நிற்பதாகவும் கூறப்படுகிறது.

ஒரு காலத்தில் இந்த இடத்தின்அருகில்தான் கெல்டிரியா கோட்டை என்று அழைக்கப்பட்ட டச்சு கோட்டையும் இருந்துள்ளது, என கூறுகிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள்.

அதாவது, டச்சுக்காரர்கள் இந்தியாவில் தங்களது குடியேற்றங்களை எல்லாம் வர்த்தக நிலையங்களாக மட்டுமே கட்டமைத்தனர். ஆனால், இந்த பழவேற்காடு குடியிருப்பை மட்டுமே கோட்டையாக கட்டினார்கள், என குறிப்பிடப்படுகிறது.

அதேநேரத்தில், இது ஏற்கனவே இருந்த போர்த்துக்கீசிய கோட்டையின் அஸ்திவாரங்களின் மீது கட்டப்பட்டது எனவும் கூறப்படுகிறது. அந்த காலக்கட்டத்தில் இப்பகுதியை ஆண்ட விஜயநகர ஆட்சியாளர்களின் அனுமதியுடன் கட்டப்பட்டதாகவும் நம்பப்படுகிறது. பின்னர், முகலாயப் பேரரசின் விரிவாக்கம், ஆங்கிலேயேர்களுடனான போட்டி காரணமாக வர்த்தகம் வீழ்ச்சி அடைந்ததால், டச்சுக்காரர்கள் படிப்படியாக இலங்கையை நோக்கி நகர ஆரம்பித்தனர், எனவும் சொல்லபப்டுகிறது.

1606 ஆம் ஆண்டு முதல் 1825 வரையிலான சுமார் 214 ஆண்டுகள் டச்சுக்காரர்களின் ஆட்சி இந்த இடத்தில் நீடித்ததாகவும் கூறப்படுகிறது.

பின்னர்தான், இப்பகுதி ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது, என சொல்லப்படுகிறது. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனம், இந்த இடத்தை பராமரிக்கத் தொடங்கியது.

சென்னை அருகே ஆந்திரா-தமிழ்நாடு எல்லையில் உள்ளது பழவேற்காடு பகுதி. இங்குள்ள டச்சுக்காரர்களின்கல்லறைதான் அந்த விநோத இடம். கல்லறையின் நுழைவாயிலில் ஒரு மண்டை ஓடு மற்றும் பிற டச்சு பாணி அலங்காரங்களும் மிரள வைக்கின்றன. நுழைவாயிலில் உள்ள ஆர்ச்சில் கிறித்தவர்களின் புதிய ஏற்பாட்டில் உள்ள வெளிப்படுத்துதல் புத்தகத்தின் வாசகங்களும் இடம்பெற்றுள்ளன. அதுவும், கைகளில் தலை சாய்ந்து நிற்கும் ஓர் எலும்புக்கூடு போல் வடிவமைக்கப்பட்டிருப்பது, பார்க்கும்போதே நடுநடுங்கவைக்கிறது.

My Biography: Palliacatta the Pulicat என்ற நூலில் டாக்டர் ஜெயபால் அசாரியா எழுதிய தகவவல்களின்படி, டச்சுக்காரர்கள் 1610 இல் பழவேற்காட்டில் ஒரு தளத்தை நிறுவியுள்ளார்கள். 1613 ஆம் ஆண்டில் கெல்டிரியா கோட்டையைக் கட்டினார்கள். இந்தக் கல்லறை பின்னர் 1656 இல் கட்டப்பட்டது என குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்லறைகளில் புதைக்கப்பட்டவர்களின் விவரங்கள் டச்சு மொழியில் உள்ளன. அதாவது, டச்சு வீரர்கள், டச்சு அதிகாரிகள், வணிகர்கள், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள், பிற வி.ஐ.பிக்கள் இங்கு புதைக்கப்பட்டிருக்கிறார்கள். இப்படி, மொத்தம் 76 கல்லறைகள் இங்கு உள்ளன.

இந்த கல்லறைகள் இந்திய தொல்லியல் ஆய்வு துறையினரால் பழுது பார்க்கப்பட்டு, மீட்டெடுக்கப்பட்டுள்ளன என கூறப்படுகிறது.

இந்த கிராமத்தில் மேலும் 22 பேரின் கல்லறைகளைக் கொண்ட மற்றொரு இடமும் உள்ளது. ஒரு பண்டைய போர்த்துக்கீசிய தேவாலயமும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தென்னிந்தியாவின் பொருளாதார மற்றும் அரசியல் வரலாற்றில் சிறப்பான இடத்தை பிடித்த பழவேற்காடு, பண்டைய தமிழ் மன்னர்கள் முதல் விஜயநகர பேரரசு வரை பல மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்டது. மேலும், இந்த துறைமுகம் வர்த்தக மையமாகவும் செயல்பட்டது. சுமார், ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு போர்த்துக்கீசியர்கள், இங்கு வந்தனர். அவர்கள் வந்த 100 ஆண்டுகளுக்குப் பிறகு டச்சுக்காரர்கள் வந்துள்ளார்கள்.
அதற்குப்பிறகு, உருவாக்கப்பட்ட கல்லறைதான் இந்த விநோத இடம் என வியக்கப்படுகிறது.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

“இனி அது பேய் கிணறு” செல்போனில் தீரா பேச்சு.. மனைவி உயிரும் போச்சு..!
  சந்தேகத்தால் ஒரு கொலை

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies