RECENT NEWS

திருப்பத்தூர் செண்பகப்பேட்டை மேலக்கண்மாயில் மீன்பிடித் திருவிழா கோலாகலம்..

திருப்பத்தூர் செண்பகப்பேட்டை மேலக்கண்மாயில் மீன்பிடித் திருவிழா கோலாகலம்..

Apr 27, 2025

திருப்பத்தூர் செண்பகப்பேட்டை மேலக்கண்மாயில் மீன்பிடித் திருவிழா கோலாகலம்..

திருப்பத்தூர் செண்பகப்பேட்டை மேலக்கண்மாயில் மீன்பிடித் திருவிழா கோலாகலம்..

Apr 27, 2025

BIG STORIES

கட்டி வைத்து அடித்ததற்கு பழிக்குப்பழியாக படுகொலை.. காதல் ஜோடி கிரேட் எஸ்கேப்..! இருவர் வாழ்க்கை முடிஞ்சி போச்சு

Apr 06, 2025 01:33 AM

390

கட்டி வைத்து அடித்ததற்கு பழிக்குப்பழியாக படுகொலை.. காதல் ஜோடி கிரேட் எஸ்கேப்..! இருவர் வாழ்க்கை முடிஞ்சி போச்சு

கட்டி வைத்து அடித்ததற்கு பழிக்குப்பழியாக படுகொலை.. காதல் ஜோடி கிரேட் எஸ்கேப்..!

புதுக்கோட்டை மாவட்டம் மழையூரில் இளைஞர் படுகொலை செய்யப்பட்ட டாஸ்மாக் மதுக்கடை முன்பே, அவரது சடலத்தை அடக்கம் செய்ய வேண்டும் என உறவினர்கள் அடம்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நண்பனின் காதலுக்கு உதவச்சென்று அவமானப்பட்டதால் நிகழ்த்தப்பட்ட பழிக்குபழி சம்பவம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு..

புதுக்கோட்டை மாவட்டம் மழையூரை சேர்ந்தவர் முருகேசன் , அதே பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை வாசல் அருகே நின்றிருந்த முருகேசனை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த ஊர் பொதுமக்கள் ஆவேசமாகி டாஸ்மாக் கடையில் இருந்த காலிபாட்டில்களை அடித்து உடைத்தனர்

டாஸ்மாக் கடையை சுற்றி அடைக்கப்பட்டிருந்த தகர ஷீட்டையும் சாய்த்து தள்ளினர், சாலை மறியலிலும் ஈடுபட்டனர்

முருகேசனின் கொலைக்கு நீதி கிடைக்கும் வரை சடலத்தை வாங்க மறுத்து காலையிலும் போராட்டம் நடத்தினர். இதையடுத்து இந்த படுகொலை சம்பவம் தொடர்பாக கருப்பட்டிபட்டியை சேர்ந்த அய்யப்பன், முகசீலன் ஆகிய இருவரை கைது செய்திருப்பதாக போலீசார் அறிவித்ததால் முருகேசனின் சடலத்தை பெற்றுக் கொள்ள சம்மதித்தனர்.

பிணக்கூறாய்வுக்கு பின்னர் முருகேசன் சடலத்தை எடுத்து வந்த உறவினர்கள் , அவரது சடலத்தை , அவர் கொலை செய்யப்பட்ட டாஸ்மாக் மதுக்கடை வாசலில் அடக்கம் செய்ய வேண்டும் என்று தங்கள் போராட்ட கோரிக்கையை மாற்றினர்.

செய்வதறியாது திகைத்த போலீசார் , போராட்டக்காரர்களிடம் பேசிப்பார்த்தும் நிலைமை கட்டுக்குள் வராமல் சென்றதால், லேசான தடியடி நடத்தி போராட்டத்தில் ஈடுபட்டோரை விரட்டி பிடித்து வாகனத்தில் ஏற்றினர்.

அமரர் ஊர்தியில் இருந்த முருகேசன் சடலத்தை மழையூர் சுடுகாட்டுக்கு கொண்டு சென்றனர். உறவினர்களை அழைத்துச்சென்று முருகேசனின் உடலுக்கு இறுதி மரியாதை செய்து முறைப்படி தகனம் செய்யப்பட்டது

இதனால் மழையூரில் 20 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த பதட்டமும் பரபரப்பும் கட்டுக்குள் வந்தது.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட அய்யப்பனிடம் விசாரித்த போது காதலுக்கு உதவ போய் அசிங்கப்பட்டதால் அதற்கு பழிக்கு பழியாக இந்த கொலை சம்பவம் நிகழ்ந்தது தெரியவந்தது. கடந்த 2 வருடங்களுக்கு முன்பு முருகேசனின் உறவுக்கார பெண்ணை , வேறு சாதியை சேர்ந்த அய்யப்பனின் நண்பன் காதலித்து வந்துள்ளான்.

அந்த பெண்ணை அய்யப்பன் அவரது நண்பர்களுடன் சேர்ந்து கடத்திச்சென்றதாகவும், முருகேசன் தரப்பினர் விரட்டிச் சென்று அந்த பெண்ணை மீட்டு வந்ததாகவும் கூறப்படுகின்றது.

இதையடுத்து நண்பனின் காதலியை மீண்டும் தூக்கி வரும் திட்டத்துடன் அய்யப்பன் கூட்டாளிகளுடன் மழையூருக்குள் நுழைந்துள்ளார்.

இந்த முறை உஷாரான முருகேசன் தரப்பினர், அய்யப்பன் கும்பலை சுற்றிவளைத்துள்ளனர். மற்றவர்கள் தப்பி ஓடிவிட அய்யப்பன் மட்டும் வசமாக சிக்கிக் கொண்டதாகவும், அவரை டாஸ்மாக் கடை வாசலில் கட்டி வைத்து ஊரே சேர்ந்து நையப்புடைத்து அனுப்பியதாகவும் கூறப்படுகின்றது.

தன்னை கட்டி வைத்து அடித்ததற்கு மூல காரணமாக இருந்த முருகேசனை அதே டாஸ்மாக் கடை வாசலில் வைத்து பழி தீர்த்ததாக அய்யப்பன் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

அதே நேரத்தில் இத்தனை களேபரத்துக்கும் காரணமான காதல் ஜோடி, வேறு வேறு நபரை திருமணம் செய்து கொண்டு குழந்தை குட்டிகளோடு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

“இனி அது பேய் கிணறு” செல்போனில் தீரா பேச்சு.. மனைவி உயிரும் போச்சு..!
  சந்தேகத்தால் ஒரு கொலை

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies