RECENT NEWS

திருப்பத்தூர் செண்பகப்பேட்டை மேலக்கண்மாயில் மீன்பிடித் திருவிழா கோலாகலம்..

திருப்பத்தூர் செண்பகப்பேட்டை மேலக்கண்மாயில் மீன்பிடித் திருவிழா கோலாகலம்..

Apr 27, 2025

திருப்பத்தூர் செண்பகப்பேட்டை மேலக்கண்மாயில் மீன்பிடித் திருவிழா கோலாகலம்..

திருப்பத்தூர் செண்பகப்பேட்டை மேலக்கண்மாயில் மீன்பிடித் திருவிழா கோலாகலம்..

Apr 27, 2025

தமிழ்நாடு

குற்றவாளி No 6 கன்னியாகுமரி எஸ். பி ஸ்டாலின்..!ஆப்பு வைத்த வழக்கறிஞர்..! கூட்டாக போலீசார் சிக்கியது எப்படி?

Apr 04, 2025 12:14 PM

336

குற்றவாளி No 6  கன்னியாகுமரி எஸ். பி ஸ்டாலின்..!ஆப்பு வைத்த வழக்கறிஞர்..! கூட்டாக போலீசார் சிக்கியது எப்படி?

குற்றவாளி பட்டியலில் கன்னியாகுமரி எஸ் பி..! வழக்கறிஞரை தாக்கியதால் சிக்கிய ஏழு பேர்..!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை மகனான ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரை காவல் நிலையத்தில் வைத்து சித்திரவதைக்கு உள்ளாக்கி கொலை செய்த வழக்கில் ஒரு காவல் ஆய்வாளர் இரு உதவி காவல் ஆய்வாளர்கள் என 11 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். தலைமை காவலர் ஒருவர் இறந்துவிட காவல்துறையைச் சேர்ந்த 10 பேர் இன்று வரை மதுரை ஜெயலில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கின்றனர்.

காவல்துறைக்கு வானளாவிய அதிகாரம் இருப்பதாக நினைத்துக் கொண்டு புகார் அளிக்க வருவோரிடம் எகத்தாலமாக நடந்து கொள்வது... தங்களை எவராவது எதிர்த்து கேள்வி கேட்டாலே அவர்களை பிளாஸ்டிக் பைப்புகளால் அடித்து , பூட்ஸ் காலால் உதைப்பது... இப்படி சில கருப்பு பக்கங்களும் , பெருமை மிகு தமிழக காவல் துறையின் வரலாற்றுக்கு கரும்புள்ளியாக அமைந்திருக்கிறது.

அந்த வகையில் சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை காவல் நிலையத்தில் நடந்த சம்பவத்தில் காவல்துறையைச் சேர்ந்த ஏழு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

"கிராமத்தில் எவன்டா வழக்கறிஞர் இருக்கான் .." ?என்று கேட்டு வழக்கறிஞரையும் அவரது உறவினரையும் கடுமையாக தாக்கி அனுப்பியிருப்பதாகசுட்டிக்காட்டியுள்ள நீதி மன்றம் அதற்கு உயர் அதிகாரிகளும் உடந்தையாக இருந்ததாக கூறி ஒரு மாவட்ட காவல் கண்காணிப்பாளரே தற்போது குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அன்று காவல் நிலையத்தில் நடந்தது என்ன ? எதற்காக காவல்துறையைச் சேர்ந்த ஏழு பேர் குற்றவாளிகளாக முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்பட்டிருக்கின்றனர் ? என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்... சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை காவல் நிலையம்...

சென்னையில் வழக்கறிஞராக உள்ள முத்துராஜா என்பவர் தனது சொந்த ஊருக்கு சென்றிருந்த நிலையில் தனது உறவினர் அருள் குமரன் ஐயப்பன் என்பவருடன் சாக்கோட்டை காவல் நிலையத்திற்கு சென்றிருந்தார்.

வழக்கமாக ஒருவர் பாஸ்போர்ட் வேண்டி விண்ணப்பித்து இருந்தால் சம்பந்தப்பட்ட எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்திலிருந்து காவலர் ஒருவர் வீடு தேடி சென்று பாஸ்போர்ட்டுக்காக விண்ணப்பித்திருக்கும் நபர் மீது வழக்குகள் ஏதாவது இருக்கிறதா ? என்பது குறித்து நேரடியாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்வது வழக்கம்.

ஆனால் அப்படி செய்யாமல் சாக்கோட்டை காவல் நிலையத்தில் உள்ளவர்கள் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்திருந்த அருள்குமரன் ஐயப்பனை நேரடியாக காவல் நிலையம் வரச் சொல்லி இருந்ததால், வழக்கறிஞர் முத்துராஜாவும் உறவினரான அருள்குமரன் ஐயப்பன் உடன் சென்றிருந்தார்.

அங்கிருந்த போலீசார் அருள்குமரன் ஐயப்பனிடம் பாஸ்போர்ட்டுக்காக 3000 ரூபாய் பணம் தர வேண்டும் என்று கேட்டதாக கூறப்படுகிறது. இதனை தட்டிக் கேட்டதோடு வீடியோ எடுத்த வழக்கறிஞர் முத்துராஜாவை கடுமையாக திட்டி தாக்கி அவரது செல்போனையும் காவல்துறையினர் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது இதை அடுத்து முத்துராஜா தன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலினிடம் புகார் அளித்தார்.

அந்த புகாரில் காவல் ஆய்வாளர் முத்துப்பாண்டி உதவி ஆய்வாளர் சக்திவேல் காவலர்கள் செல்வராசு அமல்ராஜ் மற்றும் சில காவலர்கள் சேர்ந்து தன்னையும் வழக்கறிஞர் தொழிலையும் கொச்சையாக பேசி அடித்து துன்புறுத்தி விரட்டினர் என்று குறிப்பிட்டிருந்தார்.

காயமடைந்த அவர் காரைக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அந்த மாவட்டத்தில் உள்ள உயர் காவல் அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், பிரச்சனை நடந்த மறுநாளே வழக்கறிஞர் முத்துப்பாண்டியையும் அவரது பெற்றோர்களையும் நேரடியாக விசாரணைக்கு அழைத்த உதவி காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின், கடுமையாக மிரட்டி அனுப்பியதாக கூறப்படுகிறது.

தான் அளித்த புகார் மீது காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று காரைக்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் முத்துராஜா வழக்கு தொடர்ந்தார் இதை அடுத்து முத்துராஜாவில் புகாரி மீது வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால் நீதிமன்றம் உத்தரவிட்டதை மதிக்காமல் முத்துராஜாவின் புகாரி எந்த ஒரு முகாந்திரமும் இல்லை என்று கூறி காவல்துறையினர் வழக்கை முடித்து வைத்தனர்.

காவல்துறையினர் செய்த இந்த செயலை குறிப்பிட்டு வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரங்களுடன் வழக்கறிஞர் முத்துராஜா மீண்டும் நீதிமன்றத்தை நாடினார் காவல்துறை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் நீதிமன்றமே முன்வந்து வழக்கறிஞர் முத்துராஜா தாக்கல் செய்த மனுவை நீதிமன்ற விசாரணைக்கு மாற்றியது.

இதையடுத்து முத்துராஜா தனது புகாரில் தெரிவித்திருந்த காவல்துறையைச் சேர்ந்த நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

ஆனால் யார் யார் பெயரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது என்ற தகவலை காவல்துறையினர் வெளியிடவில்லை

இதை அடுத்து வழக்கறிஞர் முத்துராஜா தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் தான் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு யார் யார் மீது செய்யப்பட்டிருக்கிறது என்ற விவரத்தை கேட்டு பெற்றார் அதில் சிலரது பெயர்கள் விடுபட்டிருந்தது.

இதை எடுத்து மீண்டும் வழக்கறிஞர் முத்துராஜா நீதிமன்றத்தை நாடினார் அவரது மனுவை விசாரித்த நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டுள்ள காவல் துறையினர் அவர்களின் அதிகாரத்தை பயன்படுத்தி மனுதாரர் மற்றும் மனுதாரர் குடும்பத்தினருக்கு கொடுமை செய்துள்ளார்கள் என்பது தெளிவாக தெரிய வருவதாகவும் அதனால் ஏற்கனவே குற்றவாளிகள் பட்டியலில் உள்ள மூன்று பேருடன் சே

மேலும் நான்கு பேரையும் சேர்த்துக்கொள்ள உத்தரவிட்டனர்.

அதன்படி முதல் குற்றவாளியாக சாக்கோட்டை காவல் நிலையத்தில் ஆய்வாளராக இருந்த முத்துப்பாண்டி உதவி ஆய்வாளராக இருந்த சக்திவேல் காவலர் செல்வராசு உதவி காவல் ஆய்வாளர் அமல்ராஜ் காரைக்குடி வடக்கு காவல் நிலைய காவல் ஆய்வாளர் ஜி எஸ் ரவீந்திரன் ஆறாவது குற்றவாளியாக அப்போதைய காரைக்குடி உதவி காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் ஏழாவது குற்றவாளியாக காவல் உதவி ஆய்வாளர் முத்து ஆகியோரின் பெயர்கள் குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

ஆறாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள ஸ்டாலின் தற்போது கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பில் உள்ளார்.

ஒரு காவல் நிலையத்தில் ஒருவருக்கு அநீதி இழைக்கப்படுவதாக உயர் அதிகாரியிடம் புகார் வந்தால் அதனை நியாயமாக விசாரித்து தீர்வு காணாமல் தங்களுக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி போலீசாருக்கு சாதகமாக செயல்பட்டதால் எஸ்பி ஸ்டாலின் குற்றவாளி பட்டியலில் இடம்பெற்று இருப்பதாக வழக்கறிஞர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

தன் மீதான தாக்குதலுக்கு நியாயம் கேட்டு, நீதிமன்றத்தை நம்பியதாகவும் தற்போது தனக்கு நியாயம் கிடைத்திருப்பதாகவும், நிச்சயம் தப்பு செய்தவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்கும் என்றும் வழக்கறிஞர் முத்துராஜா நம்பிக்கை தெரிவித்தார்

காவல்துறை மக்களின் நண்பன் என்ற வாசகத்திற்கு வலு சேர்க்கும் வகையில் தமிழக காவல்துறையில் ஏராளமான காவலர்கள் இருந்தாலும் சில காவல் நிலையங்களில் உள்ள இதுபோன்ற காவல்துறையினர் காவல் பணிக்கு களங்கமாக இருப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

ரவுடி மட்டுமல்ல போலீஸ் தவறு செய்தாலும் குற்றம் கேடு தரும்..!

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

“இனி அது பேய் கிணறு” செல்போனில் தீரா பேச்சு.. மனைவி உயிரும் போச்சு..!
  சந்தேகத்தால் ஒரு கொலை

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies