RECENT NEWS

முகமூடிக் கும்பலால் பாஜக பிரமுகர் வெட்டிக் கொலை

முகமூடிக் கும்பலால் பாஜக பிரமுகர் வெட்டிக் கொலை

Apr 27, 2025

முகமூடிக் கும்பலால் பாஜக பிரமுகர் வெட்டிக் கொலை

முகமூடிக் கும்பலால் பாஜக பிரமுகர் வெட்டிக் கொலை

Apr 27, 2025

முகப்பு

ஜெகஜ்ஜால கில்லாடியால் கடன்... தொடரும் சிவாஜியின் ‘அன்னை இல்லம்’ சிக்கல்... பிரபுவின் புரட்சிப் போராட்டம்!

Apr 03, 2025 04:48 PM

1258

ஜெகஜ்ஜால கில்லாடியால் கடன்... தொடரும் சிவாஜியின் ‘அன்னை இல்லம்’ சிக்கல்... பிரபுவின் புரட்சிப் போராட்டம்!

தொடரும் சிவாஜியின் ‘அன்னை இல்லம்’ சிக்கல்... பிரபுவின் புரட்சிப் போராட்டம்!

படையப்பா படத்தில் வீடு, சொத்தையெல்லாம் எழுதிக்கொடுத்துவிட்டு வெளியில் வரும் சிவாஜி கணேசன், வீட்டுத்தூணை தொட்டு தொட்டு அழும் காட்சி, இரும்பு இதயங்களையும் அப்படியே உருகவைத்துவிடும். அந்த காட்சியை எப்போது பார்த்தாலும் கண்களில் அழுகை முட்டிக்கொண்டு வந்துவிடும்.


அப்படியொரு, சம்பவம்தாம் சிவாஜி கணேசனின் குடும்பத்தாருக்கு நேர்ந்திருக்கிறது. அதுவும், ராம்குமார் குடும்பத்திற்கும், அவர்களுக்கு கடன் கொடுத்த தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்துக்குமான பிரச்சனை.


சென்னையில் 4 வீடுகள் மிகவும் பிரபலம் வாய்ந்தவை. ஒன்று எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்டம், இரண்டாவது கலைஞரின் கோபாலபுரம் வீடு, மூன்றாவது ஜெயலலிதா வாழ்ந்த போயஸ்கார்டன், நான்காவது சிவாஜியின் அன்னை இல்லம். இப்படி சினிமா, அரசியல் பின்னணி கொண்ட அன்னை இல்லதான் தற்போது நீதிமன்றத்தால் ஜப்தி செய்ய உத்தரவிடப்பட்டு சர்ச்சையில் சிக்கியிருக்கிறது.


அதாவது, சிவாஜி கணேசனின் பேரனும் ராம்குமாரின் மகனுமான துஷ்யந் மற்றும் அவரது மனைவி அபிராமி ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள ஈசன் புரடக் ஷன்ஸ் நிறுவனம் சார்பில் விஷ்ணு விஷால்- நிவேதா பெத்துராஜ் நடிக்கும் ‘ஜெகஜால கில்லாடி’ படத்தை தயாரித்தனர். இப்பட தயாரிப்புக்காக தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம் 3 கோடியே 74 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியிருந்தனர். இந்த கடனை ஆண்டுக்கு 30 சதவீத வட்டியுடன் திருப்பிக்கொடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டிருந்தது.

ஆனால், கடன் தொகையை திருப்பி தராததை அடுத்து இந்த விவகாரத்தில் தீர்வு காணும் வகையில், சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ரவீந்திரன் மத்தியஸ்தராக நியமிக்கப்பட்டார்.


இந்த விவகாரத்தை விசாரித்த மத்தியஸ்தர் நீதிபதி ரவீந்திரன், கடன் தொகை மற்றும் வட்டியுடன் சேர்த்து 9 கோடியே 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயை வசூலிக்கும் விதமாக ‘ஜெகஜால கில்லாடி’ படத்தின் அனைத்து உரிமைகளையும் தனப்பாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவன நிர்வாக இயக்குநர்களிடம் ஒப்படைக்கும்படி, 2024 ஆம் ஆண்டு 4 ஆம் தேதி உத்தரவிட்டார். அந்த உரிமைகளை பெற்று அவற்றை விற்று கடன் தொகையை ஈடு செய்துகொள்ளவும், மீதத்தொகையை சிவாஜி கணேசனின் பேரன் துஷ்யந்தின் ஈசன் புரடக் ஷன்ஸ் நிறுவனத்திடம் வழங்கவும் உத்தரவிட்டிருந்தார்.


ஆனால், படத் தயாரிப்பு இன்னும் முடிவடையவில்லை என கூறி தயாரிப்பு நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்ததால், தாத்தா சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்து, பொது ஏலம் விட உத்தரவிடக்கோரி, தனப்பாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.


இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், பதில்மனு தாக்கல் செய்ய ஈசன் புரொடக் ஷன்ஸ் தரப்பில் அவகாசம் கேட்டபோதும், இதுவரை பதில்மனு தாக்கல் செய்யவில்லை எனக்கூறி, நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். இந்த வழக்கு மார்ச் 5 ஆம் தேதிக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்தநிலையில்தான், வீடு ஜப்தி செய்யப்பட்டது.



இந்தநிலையில்தான், அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை நீக்கக் கோரி, நடிகர் பிரபு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பிரபு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த விவகாரத்தில் மூன்றாம் நபரான தனது இல்லத்தை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும் அதனை நீக்க வேண்டுமென வாதிட்டார்.

தனது சகோதரர்
ராம்குமார் பெற்ற, மூன்று கோடி ரூபாய் கடனுக்காக தனக்கு சொந்தமான 150 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை முடக்க உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.


அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ராம்குமார் உங்களுடைய சகோதரர் தானே ? ஒன்றாகத் தானே வாழ்ந்து வருகிறீர்கள்? அந்த கடனை தற்போது நீங்கள் செலுத்திவிட்டு பின்னர் அவரிடம் இருந்து பெற்றுக்கொள்ளலாமே? என யோசனை தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த பிரபு தரப்பு வழக்கறிஞர், இதுபோன்று அவருக்கு உதவ முடியாது என்றும் நிறைய பேரிடம் ராம்குமார் கடன் வாங்கியுள்ளதாகவும் கூறினார்.

இதனையடுத்து, வழக்கின் விசாரணையை வரும் எட்டாம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

தனது வாழ்நாளில் இதுவரை ஒரு ரூபாய் கூட கடன் வாங்கியது இல்லை. அப்படியிருக்க, அண்ணன் ராம்குமார் வாங்கியக் கடனை நான் ஏன் அடைக்கவேண்டும்? அவர் வாங்கிய, மூன்று கோடி ரூபாய் கடனுக்காக தனக்கு சொந்தமான 150 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை எப்படி முடக்க முடியும்? என புரட்சிப்போராட்டத்தில் ஈடுபட ஆரம்பித்திருக்கிறார், நடிகர் பிரபு. இதனால், சிவாஜி கணேசனின் கனவு இல்லமான அன்னை இல்லம் சிக்கல் தீர்வை எட்டாமல் தொடர்ந்துகொண்டிருக்கிறது. படையப்பா படத்தில் வீடு, சொத்தையெல்லாம் எழுதிக்கொடுத்துவிட்டு வெளியில் வரும் சிவாஜி கணேசன், வீட்டுத்தூணை தொட்டு தொட்டு அழும் காட்சி, இரும்பு இதயங்களையும் அப்படியே உருகவைத்துவிடும். அந்த காட்சியை எப்போது பார்த்தாலும் கண்களில் அழுகை முட்டிக்கொண்டு வந்துவிடும்.

அப்படியொரு, சம்பவம்தாம் சிவாஜி கணேசனின் குடும்பத்தாருக்கு நேர்ந்திருக்கிறது. அதுவும், ராம்குமார் குடும்பத்திற்கும், அவர்களுக்கு கடன் கொடுத்த தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்துக்குமான பிரச்சனை.

சென்னையில் 4 வீடுகள் மிகவும் பிரபலம் வாய்ந்தவை. ஒன்று எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்டம், இரண்டாவது கலைஞரின் கோபாலபுரம் வீடு, மூன்றாவது ஜெயலலிதா வாழ்ந்த போயஸ்கார்டன், நான்காவது சிவாஜியின் அன்னை இல்லம். இப்படி சினிமா, அரசியல் பின்னணி கொண்ட அன்னை இல்லதான் தற்போது நீதிமன்றத்தால் ஜப்தி செய்ய உத்தரவிடப்பட்டு சர்ச்சையில் சிக்கியிருக்கிறது.

அதாவது, சிவாஜி கணேசனின் பேரனும் ராம்குமாரின் மகனுமான துஷ்யந் மற்றும் அவரது மனைவி அபிராமி ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள ஈசன் புரடக் ஷன்ஸ் நிறுவனம் சார்பில் விஷ்ணு விஷால்- நிவேதா பெத்துராஜ் நடிக்கும் ‘ஜெகஜால கில்லாடி’ படத்தை தயாரித்தனர். இப்பட தயாரிப்புக்காக தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம் 3 கோடியே 74 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியிருந்தனர். இந்த கடனை ஆண்டுக்கு 30 சதவீத வட்டியுடன் திருப்பிக்கொடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டிருந்தது.

ஆனால், கடன் தொகையை திருப்பி தராததை அடுத்து இந்த விவகாரத்தில் தீர்வு காணும் வகையில், சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ரவீந்திரன் மத்தியஸ்தராக நியமிக்கப்பட்டார்.

இந்த விவகாரத்தை விசாரித்த மத்தியஸ்தர் நீதிபதி ரவீந்திரன், கடன் தொகை மற்றும் வட்டியுடன் சேர்த்து 9 கோடியே 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயை வசூலிக்கும் விதமாக ‘ஜெகஜால கில்லாடி’ படத்தின் அனைத்து உரிமைகளையும் தனப்பாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவன நிர்வாக இயக்குநர்களிடம் ஒப்படைக்கும்படி, 2024 ஆம் ஆண்டு 4 ஆம் தேதி உத்தரவிட்டார். அந்த உரிமைகளை பெற்று அவற்றை விற்று கடன் தொகையை ஈடு செய்துகொள்ளவும், மீதத்தொகையை சிவாஜி கணேசனின் பேரன் துஷ்யந்தின் ஈசன் புரடக் ஷன்ஸ் நிறுவனத்திடம் வழங்கவும் உத்தரவிட்டிருந்தார்.

ஆனால், படத் தயாரிப்பு இன்னும் முடிவடையவில்லை என கூறி தயாரிப்பு நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்ததால், தாத்தா சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்து, பொது ஏலம் விட உத்தரவிடக்கோரி, தனப்பாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், பதில்மனு தாக்கல் செய்ய ஈசன் புரொடக் ஷன்ஸ் தரப்பில் அவகாசம் கேட்டபோதும், இதுவரை பதில்மனு தாக்கல் செய்யவில்லை எனக்கூறி, நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். இந்த வழக்கு மார்ச் 5 ஆம் தேதிக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்தநிலையில்தான், வீடு ஜப்தி செய்யப்பட்டது.

இந்தநிலையில்தான், அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை நீக்கக் கோரி, நடிகர் பிரபு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பிரபு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த விவகாரத்தில் மூன்றாம் நபரான தனது இல்லத்தை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும் அதனை நீக்க வேண்டுமென வாதிட்டார்.

தனது சகோதரர்
ராம்குமார் பெற்ற, மூன்று கோடி ரூபாய் கடனுக்காக தனக்கு சொந்தமான 150 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை முடக்க உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ராம்குமார் உங்களுடைய சகோதரர் தானே ? ஒன்றாகத் தானே வாழ்ந்து வருகிறீர்கள்? அந்த கடனை தற்போது நீங்கள் செலுத்திவிட்டு பின்னர் அவரிடம் இருந்து பெற்றுக்கொள்ளலாமே? என யோசனை தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த பிரபு தரப்பு வழக்கறிஞர், இதுபோன்று அவருக்கு உதவ முடியாது என்றும் நிறைய பேரிடம் ராம்குமார் கடன் வாங்கியுள்ளதாகவும் கூறினார்.

இதனையடுத்து, வழக்கின் விசாரணையை வரும் எட்டாம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

தனது வாழ்நாளில் இதுவரை ஒரு ரூபாய் கூட கடன் வாங்கியது இல்லை. அப்படியிருக்க, அண்ணன் ராம்குமார் வாங்கியக் கடனை நான் ஏன் அடைக்கவேண்டும்? அவர் வாங்கிய, மூன்று கோடி ரூபாய் கடனுக்காக தனக்கு சொந்தமான 150 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை எப்படி முடக்க முடியும்? என புரட்சிப்போராட்டத்தில் ஈடுபட ஆரம்பித்திருக்கிறார், நடிகர் பிரபு. இதனால், சிவாஜி கணேசனின் கனவு இல்லமான அன்னை இல்லம் சிக்கல் தீர்வை எட்டாமல் தொடர்ந்துகொண்டிருக்கிறது.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

“இனி அது பேய் கிணறு” செல்போனில் தீரா பேச்சு.. மனைவி உயிரும் போச்சு..!
  சந்தேகத்தால் ஒரு கொலை

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies