RECENT NEWS

குட்டிகளுடன்  விளையாடும் தாய் பாண்டா கரடி..! பாண்டா கரடி பராமரிப்பு மையத்தின் காட்சிகள் வெளியீடு..

குட்டிகளுடன் விளையாடும் தாய் பாண்டா கரடி..! பாண்டா கரடி பராமரிப்பு மையத்தின் காட்சிகள் வெளியீடு..

Apr 27, 2025

குட்டிகளுடன்  விளையாடும் தாய் பாண்டா கரடி..! பாண்டா கரடி பராமரிப்பு மையத்தின் காட்சிகள் வெளியீடு..

குட்டிகளுடன் விளையாடும் தாய் பாண்டா கரடி..! பாண்டா கரடி பராமரிப்பு மையத்தின் காட்சிகள் வெளியீடு..

Apr 27, 2025

BIG STORIES

“ஜி.விக்கூட டேட்டிங் போகல..” யார் இந்த நடிகை திவ்யா பாரதி.. சைந்தவி பிரிய காரணம் இவரா..? ஒரு பதிவு மொத்த பிரச்சனையும் க்ளோஸ்

Apr 02, 2025 02:10 AM

507

“ஜி.விக்கூட டேட்டிங் போகல..” யார் இந்த நடிகை திவ்யா பாரதி.. சைந்தவி பிரிய காரணம் இவரா..? ஒரு பதிவு மொத்த பிரச்சனையும் க்ளோஸ்

“ஜி.விக்கூட டேட்டிங் போகல..” யார் இந்த நடிகை திவ்யா பாரதி.. சைந்தவி பிரிய காரணம் இவரா..? ஒரு பதிவு மொத்த பிரச்சனையும் க்ளோஸ்

தமிழ் திரைஉலகில் பிரபலமான இளம் இசையமையாளர் மற்றும் நடிகர் ஜி.வி பிரகாஷ்குமார். இவர் தனது மனைவி சைந்தவியை பிரிய இருப்பதாக பரஸ்பரம் அறிவித்துள்ள நிலையில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் குடும்பப் பிரச்சினைகளுக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று நடிகை திவ்யபாரதி வெளிப்படையாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அப்படி பதிவிட என்ன காரணம்..? ஜி.வி பிரகாஷ் மனைவியை பிரிய திவ்யாபாரதி காரணமா ? யார் இந்த திவ்யா பாரதி ? அவர் செய்த சம்பவம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு..

“பிறைதேடும் இரவிலே உயிரே... எதை தேடி அலைகிறாய்..”என்று தனது காதல் கணவர் இசையமையப்பாளர் ஜிவி பிரகாஷ்குமாரை 2013 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27 ந்தேதி கரம் பிடித்தார் பாடகி சைந்தவி..!

“யார் இந்த சாலையோரம் பூக்கள் வைத்தது... காற்றில் எங்கெங்கும் வாசம் வீசுது.. என்று மணம் வீசிய மண வாழ்க்கையின் அடையாளமாக இந்த தம்பதியருக்கு ஒரு அன்பு மகள் உள்ளார்.

அடுத்தடுத்து ஹிட் படங்களுக்கு இசை... என்று ஜி.வி பிரகாஷும், “எனக்காகவே பிறந்தான் இவன்... எனக்காகவே வருவான் இவன்.. என் பெண்மையை வென்றான் இவன்...” என்று தொடர்ந்து தனது மெஸ்மரிச குரலால் சைந்தவியும் கட்டிய பாடல்கள் ஒவ்வொன்றும் காதலர்களின் சுப்ரபாதமானது.

அப்படி இருந்த இந்த ஜோடிகளின் மீது யார் கண்பட்டதோ தெரியவில்லை, மன இறுக்கம் வந்து.. விரிசலாகி விவாகரத்தில் போய் நிற்கிறது என்று அங்கலாய்த்துக் கொள்கின்றனர் திரையுலகினர்.

யாரும் எதிர்பார்க்காத நிலையில்... “ எள்ளுவய பூக்கலயே ஏறெடுத்து பார்க்கலயே..” என்று இந்தத் தம்பதி கடந்தாண்டு விவாகரத்தை அறிவித்தது திரையுலகினர் மட்டும் இல்லாமல் அவர்களது ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்று சொல்லலாம்..

ஜி.வி பிரகாஷ் என்னைக்கு... இசையமைப்பதை பார்டைம்மாக்கி, நடிப்பதை முழு நேரமாக்கினாரோ... அன்றே ஆரம்பித்தது புகைச்சல் என்கின்றனர். ஆரம்பத்தில் உடன் நடிக்கும் நாயகிகளுடன் டீசண்டாக தோன்றிய ஜீ.வி திரிஷா அல்லது நயந்தாரா படத்திற்கு பின்னர் தன்னை ஒரு காதல் மன்னனாக காட்டிக் கொள்ள நாயகிகளுடன் நெருங்கி தர லெவலுக்கு இறங்கி கலக்க ஆரம்பித்தது சைந்தவிக்கு கலக்கத்தை ஏற்படுத்தியதாக சொல்லப்படுகின்றது.

அடுத்தடுத்த படங்களில், நாயகிகளின் நாயகனாக வலம் வந்த ஜி.வியின் திருமண வாழ்க்கைக்கு வேட்டு வைத்தது பேச்சிலர் என்ற திரைப்படம் என்றும் இந்த படத்தின் மூலம் நாயகியான நடிகை திவ்யபாரதியுடன் முத்தக்காட்சி, காதல் காட்சிகளில் ஜி.வி உணர்ச்சிவசப்பட்டு நடித்ததாக சமூக வலைதளங்களில் குற்றம் சாட்டு முன்வைக்கப்பட்டது. அப்போதே அந்த நடிகையும், ஜி.வி.பிரகாஷும் காதலிப்பதாக செய்திகள் சமூக வலைத்தளங்களில் உலா வரத்தொடங்கியது.

இதனை இருவருமே மறுக்கவில்லை, இந்த நிலையில் இருவரும் கிங்ஸ்டன் படத்திலும் இணைந்து நடித்து வந்த நிலையில், சைந்தவியும், ஜி.வியும் பரஸ்பரம் பிரிய போவதாக அறிவித்ததால், ரசிகர்கள் மத்தியில் இருந்த சந்தேகம் இருமடங்கானது. இந்த நிலையில் ஜி.வி.பிரகாஷும், திவ்யபாரதியும் கிங்ஸ்டன் திரைப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் இருவரின் உறவு குறித்தும் வாய்திறந்தனர்
 
பேச்சுலர் படத்திற்குப் பிறகு தாங்கள் இருவரும் உண்மையில் காதலித்ததாக பேசப்பட்டது. ஆனால், அதுபோன்ற சம்பவங்கள் எதுவும் தங்களுக்குள் நடக்கவில்லை என்றனர் தாங்கள் இருவருமே படப்பிடிப்பு தளத்தில் மட்டுமே சந்தித்துக் கொள்வோம். நாங்கள் சாதாரண நண்பர்கள் மட்டுமே என்று சூடம் கொளுத்தி சத்தியம் செய்யாத குறையாக தெரிவித்தனர்

மேலும் இருவரும் வெளியில் எங்கும் சந்தித்துக் கொண்டதில்லை என்றும் திரையில் எங்கள் இருவரின் நடிப்பும் பேசப்படுவதால் அவ்வாறு ரசிகர்கள் நினைக்கலாம். ஆனால், எங்களுக்குள் அப்படியான உறவு எதுவும் இல்லை என்று ஜி.வி.பிரகாஷும் மறுப்பு தெரிவித்திருந்தார்.

அதேபோல் நடிகை திவ்யபாரதி தரப்பில் ஜி.வி. திருமண வாழ்வு குறித்து என்னிடம் அனைவரும் கேட்பார்கள். நான் அவர்களின் குடும்பத்தைப் பிரித்துவிட்டதாக என்னிடம் பெண்கள் பலர் சமூக வலைதளங்களில் கேட்கிறார்கள், அண்மையில் ஜி.வியும், சைந்தவியும் ஒன்றாக இணைந்து இசைக் கச்சேரியில் பாடியபோது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இனிமேல் நம்மிடம் இதுகுறித்து யாரும் பேசமாட்டார்கள் என்று நினைத்தேன்.

ஆனால், அதன் பின்னர்தான் என்னிடம் இதுபற்றி அதிகமாக கேள்வி கேட்டனர். அவற்றை ஜி.வி.க்கு அனுப்பி “எப்படியெல்லாம் பேசுகிறார்கள் பாருங்கள்” என நான் கேட்டேன். அதற்கு அவர், “இவர்கள் இப்படித்தான். விடுங்க பாத்துக்கலாம்” என்று பதிலளித்தார். சில நேரங்களில் அவ்வாறு அனைவரும் பேசுவது கஷ்டமாக இருக்கும். ஆனால் மக்கள், மீடியா போன்றவற்றை நாம் கட்டுப்படுத்த முடியாது என்பதால் இதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்று திவ்யா பாரதி தெரிவித்தார்.

அண்மையில் குடும்ப நல நீதிமன்றத்துக்கு, சுமூக விவாகரத்து பெருவதற்கு ஜிவி பிரகாஷும், சைந்தவியும் ஒரே காரில் வந்து சென்றது பேசு பொருளான நிலையில், ஜீ.வியும் நடிகை திவ்ய பாரதியும் டேட்டிங் செய்வதாக சில படப்பிடிப்பு தள புகைப்படங்கள் வைரலானது.

இது போன்ற செய்திகள் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பரவி வருவதால் தன்னுடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக கூறி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவை ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகை திவ்யாபாரதி.

அந்த பதிவில், தனக்கு எந்த சம்பந்தமும் இல்லாத ஒரு தனிப்பட்ட குடும்ப விஷயத்தில் என் பெயர் இழுக்கப்பட்டுள்ளது. ஜி.வி.யின் குடும்பப் பிரச்சினைகளுக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. வெளிப்படையாகச் சொன்னால், நான் ஒருபோதும் ஒரு நடிகருடன் டேட்டிங் செய்ய மாட்டேன், நிச்சயமாக ஒரு திருமணமான ஆணுடன் டேட்டிங் செய்யவே மாட்டேன்.

ஆதாரமற்ற வதந்திகள் என் கவனத்தை ஈர்க்கத் தேவையில்லை என்று நம்பி நான் இதுவரை அமைதியாக இருந்தேன். இருப்பினும், இது ஒரு எல்லையைத் தாண்டியது. ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளால் என் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுவதை நான் அனுமதிக்க மாட்டேன். நான் ஒரு வலிமையான, சுதந்திரமான பெண், நான் வதந்திகளால் வரையறுக்கப்பட மாட்டேன்.

எதிர்மறையைப் பரப்புவதற்குப் பதிலாக, ஒரு சிறந்த உலகத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்துவோம். எனது எல்லைகளை மதிக்கவும். இந்த விஷயத்தில் இது எனது முதல் மற்றும் இறுதி அறிக்கை என்றும் நன்றி என தெரிவித்திருந்தார்.. நடிகை திவ்யா பாரதி

இந்த ஒரு இன்ஸ்டா பதிவால் மொத்த பிரச்சனையும் குளோஸ் என்று நினைக்கிறார் திவ்யாபாரதி... ஆனால் உண்மையில் இப்பதான் இந்த பிரச்சனையே ஆரம்பித்திருப்பதாக சுட்டிக்காட்டுகின்றனர் திரையுலகினர்.

பொதுவாகவே நடிகர் நடிகைகளுக்கு இடையேயான காதல் என்றாலும் அந்த காதல் திருமண வாழக்கையில் பிரிவு என்றாலும் என்ன காரணம் என்று பூதக்கண்ணாடியுடன் தேட ஆரம்பித்து விடுவார்கள். இருவரும் சேர்வதற்கு எப்படி வலிமையான காரணம் தேவையில்லையோ, அது போல இரு வரும் பிரிவதற்கும் எந்த ஒரு காரணமும் தேவையில்லை என்று பொதுவாக கூறினாலும், பணம் பொருள் புகழ் போன்ற வை வந்து விட்டால் ஊரே உற்று நோக்க ஆரம்பித்து விடும். அப்படிப்பட்ட தருணங்களில் பிறர் கண்களில் சர்ச்சையாக விழுவதை தவிர்த்தால் இது போன்ற வில்லங்க காசிப்கள் உலாவராமல் தடுக்கலாம்.

பிறர் இல்லற வாழ்வில் தலையிட்டாலும், பிறர் இணை தேடி அலைந்தாலும்.. பிறன் மனை நோக்கினாலும்.. இல்லறம் கெட்டு நல்லறம் வீணாகும்.. மொத்தத்தில் குற்றம் கேடு தரும்..!

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

“இனி அது பேய் கிணறு” செல்போனில் தீரா பேச்சு.. மனைவி உயிரும் போச்சு..!
  சந்தேகத்தால் ஒரு கொலை

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies